எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டி20 உலகக் கோப்பைப் போட்டியுடன் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய கோலியை, ஒருநாள் கேப்டன் பொறுப்பிலிருந்து பி.சி.சி.ஐ நீக்கி, ரோஹித் சர்மாவை நியமித்தது. தென் ஆப்பிரி்க்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தபின் டெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்தும் விராட் கோலி திடீரென விலகினார். விராட் கோலி கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியது கிரிக்கெட்ரசிகர்களை பெரிய அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பீட்டர்ஸன் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளி்த்த பேட்டியில் கோலி குறித்துப் பேசியுள்ளார். அவர் கூறியதாவது., இன்றுள்ள நவீன கால கிரிக்கெட் வீரரான விராட் கோலியைப் பற்றி விமர்சிப்பவர்கள் என்னைப் பொறுத்தவரை முட்டாள்கள். ஏனென்றால், இதுபோன்ற பயோ-பபுள் சூழலில் இருந்து கொண்டு விளையாடுவது கடினம். ஆதலால், கோலியின் முடிவை விமர்சிப்பதும், அவரை விமர்சிப்பது நியாயமற்றது. கோலி அனைத்துப் பிரிவிலும் கேப்டன் பதவியிலிருந்து விலகியது எனக்கு பெரிய வியப்பை அளிக்கவில்லை. இவ்வாறு பீட்டர்ஸன் தெரிவித்தார்.
ஹர்பஜன் சிங்குக்கு கொரோனா உறுதி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் (வயது 41). இதுவரை 103 டெஸ்ட் போட்டிகள், 236 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 28 சர்வதேச இருபது ஓவர் போட்டிகள் என மொத்தம் 367 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் மொத்தம், 711 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். 3,569 ரன்களை எடுத்து உள்ளார். இதுவரை 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 417 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன், 32.46 சராசரியும் வைத்துள்ளார். இறுதியாக கடந்த 2016ம் ஆண்டு இருபது ஓவர் ஆசிய கோப்பையில் விளையாடிய அவர், அதன்பின்பு அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை.
கடந்த ஆண்டு டிசம்பரில் தனது ஓய்வு அறிவிப்பினையும் அவர் வெளியிட்டார். இந்நிலையில், ஹர்பஜன் சிங்குக்கு லேசான அறிகுறிகளுடன் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுபற்றி அவரது டுவிட்டர் பதிவில், எனக்கு லேசான அறிகுறிகளுடன் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. வீட்டிலேயே என்னை தனிமைப்படுத்தி கொண்டேன். அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளும்படி கேட்டு கொள்கிறேன். பாதுகாப்புடன் இருங்கள். கவனமுடன் இருங்கள் என தெரிவித்து உள்ளார்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஆன்டி முர்ரே, எம்மா தோல்வி
‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. இதில் 4-வது நாளில் நடந்த ஆண்கள் ஒற்றையர் போட்டியில் முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீரரான ஆன்டி முர்ரே (இங்கிலாந்து) 4-6, 4-6, 4-6 என்ற நேர்செட்டில் ஜப்பானின் டாரோ டேனியலிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். இதேபோல் அர்ஜென்டினா வீரர் ஸ்வார்ட்ஸ்மான் 6-7 (6-8), 4-6, 4-6 என்ற நேர்செட்டில் ஆஸ்திரேலியாவின் கிறிஸ்டோபர் கொன்னலிடம் தோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்தார்.
பெண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா சரிவில் இருந்து மீண்டு வந்து 1-6, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் சீனாவின் ஸின்யு வாங்கை சாய்த்து 3-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். அமெரிக்க ஓபன் சாம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைத்தவரான இங்கிலாந்தின் இளம் புயல் எம்மா எடுகானு 4-6, 6-4, 3-6 என்ற செட் கணக்கில் 98-ம் நிலை வீராங்கனையான டான்கா கோவினிச்சிடம் (மான்ட்னெக்ரோ) வீழ்ந்து நடையை கட்டினார்.
அகமதாபாத் அணியின் கேப்டனாக ஹர்திக் ?
எதிர்வரும் ஐபிஎல் 2022 சீசனில் பத்து அணிகள் பங்கேற்று விளையாட உள்ளன. மெகா ஏலம் வரும் பிப்ரவரி 12 மற்றும் 13-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் புதிதாக இணைந்துள்ள அகமதாபாத் மற்றும் லக்னோ அணிகள் நாளை (ஜனவரி 22) தங்கள் அணி சார்பில் தக்க வைத்துள்ள வீரர்களின் விவரத்தை ஐபிஎல் நிர்வாகக் குழுவிடம் சமர்பிக்க உள்ளன.
இந்நிலையில் அகமதாபாத் அணியின் கேப்டனாக ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவை அந்த அணியின் நிர்வாகம் அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. பாண்ட்யா குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர். உள்ளூர் மக்களை ஈர்க்கும் வகையில் இதனை அகமதாபாத் அணி செய்ய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. பாண்ட்யா மட்டுமல்லாது சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் மற்றும் தொடக்க ஆட்டக்காரர் ஷூப்னம் கில்லை அகமதாபாத் அணி தேர்வு செய்துள்ளதாக தெரிகிறது. அது தொடர்பான விவரம் இன்று உறுதியாக தெரிந்துவிடும்.
ஆசிய கோப்பை மகளிர் கால்பந்து: இந்தியா - ஈரான் போட்டி `டிரா’
20வது ஆசிய கோப்பை மகளிர் கால்பந்து போட்டி மும்பையில் தொடங்கியது. இதில் 12 அணிகள் 3 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடக்கிறது. நேற்று ஏ பிரிவில் முதல் போட்டியில் சீனா- சீன தைபே மோதின. இதில் 4-0 என்ற கோல் கணக்கில் சீனா வெற்றி பெற்றது. மற்றொரு ஆட்டத்தில் இந்தியா-ஈரான் மோதின.
இந்த ஆட்டத்தில் கடைசி வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் 0-0 என ஆட்டம் சமனில் முடிந்தது. இந்தியா அடுத்த ஆட்டத்தில் சீன தைபேயை வரும் 23ம் தேதி சந்திக்கிறது. இன்று ஜப்பான்-மியான்மர், ஆஸ்திரேலியா-இந்தோனேசியா, தாய்லாந்து-பிலிப்பைன்ஸ், வியட்நாம்-தென்கொரியா மோதுகின்றன.
ஆஸி. ஓபன் இரட்டையர்: சானியா ஜோடி முன்னேற்றம்
ஆஸ்திரேலிய ஓபன் பெண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் ஸ்வியாடெக் (போலந்து), மெர்டென்ஸ் (பெல்ஜியம்), டாரியா கசட்கினா (ரஷியா), மேடிசன் இங்லிஸ் (ஆஸ்திரேலியா), பாவ்லிசென்கோவா (ரஷியா), டேனியலி காலின்ஸ் (அமெரிக்கா), வான்ட்ரோசோவா (செக்குடியரசு) உள்ளிட்டோர் தங்களது ஆட்டங்களில் வெற்றிப் பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
கலப்பு இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் சானியா மிர்சா (இந்தியா)-ராஜீவ் ராம் (அமெரிக்கா) இணை 6-3, 7-6 (7-3) என்ற நேர்செட்டில் செர்பியாவின் அலெக்சாண்ட்ரா குனிச்- நிகோலா காசிச் ஜோடியை தோற்கடித்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-09-2025.
18 Sep 2025 -
5 மாவட்டங்களில் இன்று கனமழை
18 Sep 2025சென்னை, தமிழகத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
பொதுக்கூட்ட விதிமுறைகளை காவல்துறை வகுக்க வேண்டும்: த.வெ.க. வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு
18 Sep 2025சென்னை, அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு அனுமதியளிக்கும் போது, அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தக்கூடிய வகையில் விதிமுறைகளை வகுக்கவும், பொதுச் சொத்துகள் சேதமடைந்தால் அதற்
-
காசா கொடூரத்தை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
18 Sep 2025சென்னை, காசாவில் அரங்கேறி வரும் கொடுமைகளை தடுக்க இந்தியா உறுதியான நிலைப்பாட்டோடு பேச வேண்டும், உலகம் மொத்தமும் ஒன்றிணைய வேண்டும்.
-
மோசடி செய்பவர்களை தலைமை தேர்தல் ஆணையர் காப்பாற்றுகிறார்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
18 Sep 2025புதுடெல்லி, கர்நாடகாவின் ஆலந்த் தொகுதியில் 6,000 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய ராகுல் காந்தி, அதற்கான ஆதாரங்களை வெளியிட்டார்.
-
சென்னையில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் இ.டீ. சோதனை
18 Sep 2025சென்னை, சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக சென்னையில் துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எப்.
-
சமரசமற்ற சமூகநீதி போராளி: இரட்டைமலை சீனிவாசனுக்கு எடப்பாடி பழனிசாமி புகழாரம்
18 Sep 2025சென்னை, கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்த இரட்டைமலை சீனிவாசன் அதற்காக தன் வாழ்நாளெல்லாம் போராடினார் என்று தெரிவித்துள்ள அ.தி.மு.க.
-
ஜனவரியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு: மதுரை ஐகோர்ட் கிளையில் தகவல்
18 Sep 2025மதுரை, வருகிற 2026 ஜனவரியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு நடைபெறும் என நீதிமன்றத்தில் கோயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
-
ராகுல் காந்தியின் வாக்கு திருட்டு புகார் எதற்காக? அமித்ஷா பேச்சால் பரபரப்பு
18 Sep 2025பாட்னா, வங்காளதேசத்தில் இருந்து வந்த ஊடுருவல்காரர்களை பாதுகாப்பதற்காகதான் ராகுல் காந்தி வாக்கு திருட்டு புகாரை தெரிவித்துள்ளார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பே
-
ராஜஸ்தான்: காதலனுக்கு பிடிக்காததால் தனது குழந்தையை ஏரியில் வீசி கொன்ற கொடூர தாய்..!
18 Sep 2025ஜெய்ப்பூர், ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் உள்ள வைஷாலி நகர் பகுதியில் காதலனுக்கு பிடிக்காததால் தனது குழந்தையை தாய் ஒருவர் ஏரியில் வீசி கொன்ற கொடூர சம்பவம் அரங்கேறியு
-
வார விடுமுறை: இன்று முதல் 2 நாட்களுக்கு சென்னையில் இருந்து 1,035 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
18 Sep 2025சென்னை, வார இறுதி விடுமுறை நாட்களையொட்டி இன்று முதல் 2 நாட்களுக்கு சென்னையில் இருந்து 1,035 சிறப்பு பேருநதுகளை இயக்கவுள்ளதாக அரசு விரைவுப்போக்குவரத்து கழகம் அறிவித்துள்
-
வைகை அணையில் இருந்து 120 நாட்களுக்கு நீர் திறப்பு
18 Sep 2025ஆண்டிபட்டி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்ட ஒரு போக பாசனத்துக்காக 120 நாட்களுக்கு வைகை அணையில் இருந்து நேற்று (செப்.18) காலை தண்ணீர் திறக்கப்பட்டது.
-
நேபாளத்தில் அமைதி திரும்ப இந்தியா முழுஆதரவு அளிக்கும்: சுசீலா கார்கிடம் பிரதமர் மோடி உறுதி
18 Sep 2025புதுடெல்லி, நேபாள இடைக்கால பிரதமர் சுசீலா கார்கியுடன் பேசிய பிரதமர் மோடி, நேபாளத்தில் அமைதி திரும்ப அந்நாட்டு அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு இந்தியா ஆதரவு அளிக்கும் என்று
-
தமிழகம் முழுவதும் தீர்மான கூட்டங்கள் நடத்த உத்தரவு: தி.மு.க. தலைமை அறிவிப்பு வெளியீடு
18 Sep 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த 'தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்' என்ற தீர்மான விளக்கக் கூட்டங்கள் வருகிற செப்.
-
தலைவர்தான் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும்: த.வெ.க.வுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்
18 Sep 2025சென்னை, த.வெ.க. பரப்புரைக்கு அனுமதி வழங்கக்கோரி வழக்கில் தலைவராக இருப்பவர்தான் கூட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது.
-
விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து: 3 பேர் மீது வழக்குப்பதிவு
18 Sep 2025விருதுநகர்: பட்டாசு ஆலைல் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டு இதில் உரிமையாளர் உள்பட 3 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
-
விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்வது ஏன்? - சீமான் விளக்கம்
18 Sep 2025சென்னை: விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்வது ஏன்? என்று சீமான் விளக்கம் அளித்துள்ளார்.
-
எடப்பாடி - அமித்ஷா சந்திப்பு தி.மு.க.வுக்கு பதட்டம்: தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்
18 Sep 2025கோவை: எடப்பாடி பழனிசாமி - அமித்ஷா சந்திப்பு தி.மு.க.வுக்கு பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
-
தி.மு.க. முப்பெரும் விழாவில் பெரியார் விருது பெற்ற கனிமொழி, துரைமுருகனை சந்தித்து வாழ்த்து
18 Sep 2025சென்னை: பெரியார் விருது பெற்ற கனிமொழி தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகனை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.
-
வாக்கு திருட்டு தொடர்பாக ராகுலின் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு
18 Sep 2025புதுடெல்லி, வாக்கு திருட்டு தொடர்பாக ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுகள் தவறானவை, அடிப்படை ஆதாரமற்றவை என்று தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.
-
அறுவை சிகிச்சை அறைக்குள் புகுந்த பாம்பு: டாக்டர்கள் அலறி அடித்து ஓட்டம்
18 Sep 2025லக்னோ: உத்தர பிரதேசத்தில் அறுவை சிகிச்சை அறைக்குள் பாம்பு புகுந்ததால் டாக்டர்கள் ஓட்டம் பிடித்தனர்.
-
வயநாட்டில் பிரியங்கா காந்தி
18 Sep 2025வயநாடு: வனப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் குறைகளை பிரியங்கா காந்தி கேட்டறிந்தார்.
-
காசாவுக்குள் முன்னேறும் இஸ்ரேல் படை
18 Sep 2025ஜெருசலேம்: காசா நகருக்குள் இஸ்ரேல் படையினர் தொடர்ந்து முன்னேறி வருவதால் அங்கும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
-
பனை மரம் வெட்ட மாவட்ட கலெக்டர் அனுமதி கட்டாயம் தமிழ்நாடு அரசாணை வெளியீடு
18 Sep 2025சென்னை: பனை மரம் வெட்ட கலெக்டர் அனுமதி கட்டாயம் என அரசாணை வெளியீட்டுள்ளது.
-
16 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு
18 Sep 2025சென்னை: தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.