முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதுகுளத்தூர் கல்லூரி மாணவர் உயிரிழந்த விவகாரம்: சி.பி.ஐக்கு மாற்றக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் கிளை

சனிக்கிழமை, 22 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

முதுகுளத்தூர் கல்லூரி மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்ற கோரிய வழக்கை, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் நீர்கோழினேந்தலைச் சேர்ந்த கல்லூரி மாணவர் மணிகண்டன் என்பவர் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், வீடு திரும்பிய அவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். காவல்துறையினர் தாக்கியதே மகனின் மரணத்துக்கு காரணம் என குற்றம்சாட்டிய தாய் ராமலட்சுமி, இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி வழக்கு தொடர்ந்தார். ஆனால், மணிகண்டன் விஷம் அருந்தி உயிரிழந்திருப்பதாகவும், அவரின் உடலில் காயங்கள் இல்லை எனவும் உடற்கூராய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதை சுட்டிகாட்டிய நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து