முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் சற்று குறைந்தது: புதிதாக 3.37 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு: 10 ஆயிரத்தை தாண்டியது ஒமைக்ரான்

சனிக்கிழமை, 22 ஜனவரி 2022      இந்தியா
Image Unavailable

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று முன்தினம் ஒரேநாளில் 2,42,676 பேர் நலம் பெற்று வீடு திரும்பினர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 63 லட்சத்து 1 ஆயிரத்து 482 ஆக உயர்ந்தது. ஆனால் ஒமைக்ரான் பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்து பதிவாகியுளளது.

கொரோனா தினசரி பாதிப்பு கடந்த 3 நாட்களாக கடுமையாக உயர்ந்த நிலையில், தற்போது சற்று குறைந்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், நேற்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,37,704 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 3 கோடியே 89 லட்சத்து 3 ஆயிரத்து 731 ஆக உயர்ந்தது.

கடந்த 17-ம் தேதி நிலவரப்படி, தினசரி பாதிப்பு 2.38 லட்சமாக இருந்தது. மறுநாள் 2.82 லட்சமாகவும், அதற்கு மறுநாள் 3.17 லட்சமாகவும், வியாழன் அன்று 3.47 லட்சமாகவும் உயர்ந்தது. இந்நிலையில் நேற்று பாதிப்பு சற்று குறைந்துள்ளது. 19,35,912 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டிருந்தது. இதன்மூலம் தினசரி பாதிப்பு விகிதம் 17.94 சதவீதத்தில் இருந்து 17.22 ஆக குறைந்தது. அதே நேரம் வாராந்திர பாதிப்பு விகிதம் 16.56 சதவீதத்தில் இருந்து 16.65 ஆகவும் உயர்ந்தது.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 48,270 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தலைநகர் மும்பையில் பாதிப்பு 5,008 ஆக குறைந்த நிலையில், புனே நகரத்தில் ஒருநாள் பாதிப்பு 16,618 ஆக உயர்ந்தது. இதேபோல மகாராஷ்டிராவின் சில முக்கிய நகரங்களில் பாதிப்பு மீண்டும் அதிகரித்ததால் தினசரி பாதிப்பு உயர்ந்துள்ளது. கர்நாடகாவில் 48,049, கேரளாவில் 41,668 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் தினசரி பாதிப்பு 29,870 ஆக உயர்ந்தது. குஜராத்தில் 21,225, ராஜஸ்தானில் 16,878, உத்தரபிரதேசத்தில் 16,159, ஆந்திராவில் 13,212, டெல்லியில் 10,756 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதுதவிர மகாராஷ்டிராவில் 52, டெல்லியில் 38, தமிழ்நாட்டில் 33, மேற்கு வங்கத்தில் 35, பஞ்சாபில் 31, கர்நாடகாவில் 22, உத்தரபிரதேசத்தில் 22, குஜராத்தில் 16 பேர் நேற்று இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,88,884 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து ஒரேநாளில் 2,42,676 பேர் நலம் பெற்று வீடு திரும்பினர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 63 லட்சத்து 1 ஆயிரத்து 482 ஆக உயர்ந்தது.

இந்நிலையில் இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 10,050 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது முந்தினநாள் பாதிப்பை விட 3.69 சதவீதமாக நேற்று அதிகரித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து