முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமூக பரவலாக மாறியது ஒமைக்ரான் - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 23 ஜனவரி 2022      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் சமூக பரவலாக மாறி உள்ளதாக, மத்திய சுகாதாரத் துறையின் கீழ் இயங்கும் இன்சகாக் அமைப்பு தெரிவித்துள்ளது.

தென் ஆப்பிரிக்க நாட்டில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரசான ஒமைக்ரான், 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் மேல் பரவி ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை கடந்த டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி தான் முதல் ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் வேகமாக பரவி, தற்போது பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில், நாட்டில் ஒமைக்ரான் பாதிப்பு சமூகப் பரவலாக மாறி உள்ளதாக இன்சகாக் அமைப்பு தெரிவித்திருக்கிறது. மத்திய சுகாதாரத் துறையின் கீழ் இயங்கும் இன்சகாக் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் பெரும்பாலான நகரங்களில் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. அதே போல், ஒமைக்ரானின் புதிய மாறுபாடான BA.2 வைரஸ் நாட்டில் கணிசமான பகுதியிலேயே கண்டறியப்பட்டு உள்ளதாகவும், இந்த வைரஸ் வேகமாக பரவுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும், இது குறித்து கவலைப்பட வேண்டியதில்லை என்றும் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று அபாயம் தொடர்ந்து நீடித்து வருவதாக எச்சரித்துள்ள இன்சகாக் அமைப்பு, ஜனவரி 3 ஆம் தேதிக்கு பிறகு இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு சமூகப் பரவலில் இருப்பதாகவும், டெல்லி மற்றும் மும்பையில் நகரங்களில் அதுவேகமாக பரவி ஒமைக்ரான் ஆதிக்கம் செலுத்துவதாகவும் கூறியுள்ளது.

பெரும்பாலும் ஒமைக்ரான் தொற்று ஏற்படுபவர்களுக்கு அறிகுறிகள் இல்லாமல் லேசான பாதிப்புகளே இருப்பதாகவும் இன்சகாக் அமைப்பு கூறியுள்ளது. ஒமைக்ரான் அறிகுறி இல்லாத போதிலும், ஐ.சி.யூ.வில் அனுமதிக்கப்படும் ஒமைக்ரான் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்றும், கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது, வேக்சின்களை முறையாக எடுத்துக் கொள்வது ஆகியவை மட்டுமே உருமாறும் கொரோனா வகைகளுக்கு எதிராக பாதுகாக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து