எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கூட்டுறவு சங்கங்களில் 40 கிராம் வரை நகைக்கடன் தள்ளுபடி பெற்றவர்களின் விவரங்களை சிறப்பு தணிக்கை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கூட்டுறவு வங்கிகளில் 40 கிராம் வரை (5 பவுன்) நகைகளை அடகு வைத்து கடன் பெற்றவர்களுக்கு அவர்களது கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி ஆட்சிக்கு வந்ததும் நகை கடன்கள் தள்ளுபடி செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன்படி நகர கூட்டுறவு வங்கிகள், மாவட்ட கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் வாங்கியவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
கடன் தள்ளுபடி தொடர்பாக அரசு பல்வேறு நடைமுறைகளை பின்பற்றுமாறும் சுற்றறிக்கை அனுப்பி இருந்தது. அதன் அடிப்படையில் நகை கடன் பெற்றவர்கள் தகுதியானவர்கள் தானா? என்று ஆய்வு செய்து அதன் அடிப்படையில் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் நகை கடன் தள்ளுபடி பெற்றவர்களின் விவரங்களை சிறப்பு தணிக்கை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் கூட்டுறவு தணிக்கைத்துறை இயக்குனர் மண்டல வாரியாகவும், மாவட்ட வாரியாகவும் 75 தணிக்கை அதிகாரிகளை நியமித்துள்ளார்.
கூடுதல் இயக்குனர், இணை இயக்குனர், துணை இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள், அந்தந்த மண்டலங்கள்-சரகங்களில் சோதனை தணிக்கையை தனித்தனியாக மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதல் கட்டமாக நகர கூட்டுறவு வங்கி மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளிலும், 2-ம் கட்டமாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் இதர சங்கங்களில் தணிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒரு அதிகாரி சோதனை தணிக்கை மேற்கொண்ட கூட்டுறவு நிறுவனத்தை மீண்டும் பிற அதிகாரி சரிபார்க்க தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தணிக்கை அறிக்கை முடிந்ததும் சரக கூட்டுறவு தணிக்கை உதவி இயக்குனர்கள் மற்றும் மண்டல இணை இயக்குனர்கள் உடனடியாக தலைமைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னை மண்டலத்தில் தணிக்கை செய்ய இணை இயக்குனர் ரக்பியூதின் உசேன், மதுரை மற்றும் திருநெல்வேலி மண்டலத்துக்கு கூடுதல் இயக்குனர் என்.எஸ்.சாரதா, கோவைக்கு இணை இயக்குனர் தனசேகரன், திருச்சிக்கு இணை இயக்குனர் சித்ரகலா, காஞ்சிபுரத்துக்கு விக்டர் பால்ராஜ், திருவள்ளூருக்கு மணி உள்ளிட்ட 75 அதிகாரிகள் அதில் இடம் பெற்றுள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –30-01-2026
30 Jan 2026 -
போராட்டங்கள் இயல்பாக நடக்க வேண்டும்: தற்காலிக ஊழியர்களின் போராட்டம் குறித்து அமைச்சர் சுப்பிரமணியன் கருத்து
30 Jan 2026சென்னை, தற்காலிக ஊழியர்களை போராட தூண்டி விடுகிறார்கள் என்று குற்றஞ்சாட்டிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், போராட்டங்கள் என்பது இயல்பாக நடக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்
-
அமெரிக்காவில் விற்கப்படும் கனடா விமானங்களுக்கு கூடுதல் வரி விதிப்பு: அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை
30 Jan 2026நியூயார்க், அமெரிக்காவில் விற்கப்படும் கனடா விமானத்திற்கு 50 சதவீத வரி விதிக்கப்படும் என்று ட்ரம்ப் மிரட்டல் விடுத்து உள்ளார்.
-
14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாகிஸ்தான்-வங்கதேசம் இடையே நேரடி விமான சேவை தொடக்கம்
30 Jan 2026டாக்கா, வங்கதேசம் - பாகிஸ்தான் இடையே கடந்த 14 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நேரடி விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
-
பீகார் வாலிபரின் மனைவி உடல் பெருங்குடி குப்பை கிடங்கில் நான்கு நாட்களுக்கு பிறகு மீட்பு
30 Jan 2026சென்னை, கொலை செய்து வீசப்பட்ட பீகார் வாலிபரின் மனைவி உடல் பெருங்குடி குப்பை கிடங்கில் நான்கு நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டது.
-
சத்தீஸ்கரில் 4 நக்சலைட்டுகள் சரண்
30 Jan 2026ராஞ்சி, சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் 2பெண்கள் உள்பட 4 நக்சலைட்டுகள் நேற்று தங்களது ஆயுதங்களுடன் போலீசில் சரணடைந்தனர்.
-
பா.ஜக. - அ.தி.மு.க. துரோக கூட்டணி: தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எந்த கொள்கையும் கிடையாது: சென்னையில் நடந்த கருத்தரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
30 Jan 2026சென்னை, இந்தியாவிலேயே யாரும் அடைய முடியாத 11.19 சதவிகிதம் பொருளாதார வளர்ச்சியை, திராவிட மாடல் ஆட்சியில் சாத்தியப்படுத்தியிருக்கிறோம்.
-
உக்ரைன் மீதான தாக்குதல்களை ஒரு வாரம் நிறுத்த புதின் சம்மதம்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்
30 Jan 2026நியூயார்க், உக்ரைன் மீதான தாக்குதலை ஒரு வாரத்துக்கு நிறுத்த ரஷ்ய அதிபர் புதியன் சம்மதித்துள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
தி.மு.க. கூட்டணிக்கு புதிய கட்சிகள் வர வாய்ப்பு: காங்கிரசுடன் உறவு சுமுகமாகவே உள்ளது: கனிமொழி எம்.பி. பேட்டி
30 Jan 2026நெல்லை, தி.மு.க. கூட்டணிக்கு புதிய கட்சிகள் வர வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள தி.மு.க. எம்.பி.
-
பேச்சுவார்த்தை நடத்த மாஸ்கோ வாருங்கள்: ஜெலன்ஸ்கிக்கு ரஷ்யா அழைப்பு
30 Jan 2026மாஸ்கோ, அமைதிப் பேச்சுவார்த்தைக்காக மாஸ்கோவிற்கு வருமாறு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கிக்கு ரஷ்ய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை பிப்ரவரி 5-ல் கூடுகிறது: இடைக்கால பட்ஜெட் குறித்து ஆலோசனை
30 Jan 2026சென்னை, பிப்ரவரி 2-வது வாரத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், தமிழக அமைச்சரவை கூட்டம் பிப்ரவரி 5-ம் தேதி (வியாழக்கிழமை) முதல்வர் மு.க.ஸ்டாலின
-
சிவகங்கை மாவட்டத்தில் இன்று அரசு சார்பில் விழா: 2,560 கோடி ரூபாய் மதிப்பிலான 49 முடிவடைந்த திட்டப்பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
30 Jan 2026சென்னை, சிவகங்கை மாவட்டத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று ரூ.
-
மகாத்மா காந்தியின் 79-வது நினைவு நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை
30 Jan 2026சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
-
பண்ருட்டி சம்பவம் எதிரொலி: தமிழக சட்டம்-ஒழுங்கு குறித்து எடப்பாடி பழனிசாமி கேள்வி
30 Jan 2026சென்னை, “தீயில் எரிந்தது விவசாயி ராஜேந்திரன் மட்டும் அல்ல. தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு, பாதுகாப்பு அனைத்தும் தான் என்று அ.தி.மு.க.
-
ஜோ பைடன் உள்ளிட்டோருக்கு பிரதமர் மோடி வழங்கிய பரிசுகளின் பட்டியலை வெளியிட்டது அமெரிக்கா அரசு
30 Jan 2026நியூயார்க், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இதர இந்தியத் தலைவர்கள், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோ பைடன் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுக்கு வழங்கிய விலையுயர்ந்த பரிசுகள் க
-
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
30 Jan 2026சென்னை, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
-
திராவிட மாடல் 2.0 மீண்டும் அமைக்க தமிழ்நாட்டு பெண்கள் முடிவு: அமைச்சர் கே.என்.நேரு தகவல்
30 Jan 2026சென்னை, திராவிட மாடல் 2.0 மீண்டும் அமைக்க தமிழ்நாட்டின் பெரும்பான்மை பெண்கள் முடிவெடுத்து விட்டார்கள் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.


