எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கூட்டுறவு சங்கங்களில் 40 கிராம் வரை நகைக்கடன் தள்ளுபடி பெற்றவர்களின் விவரங்களை சிறப்பு தணிக்கை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கூட்டுறவு வங்கிகளில் 40 கிராம் வரை (5 பவுன்) நகைகளை அடகு வைத்து கடன் பெற்றவர்களுக்கு அவர்களது கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி ஆட்சிக்கு வந்ததும் நகை கடன்கள் தள்ளுபடி செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன்படி நகர கூட்டுறவு வங்கிகள், மாவட்ட கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் வாங்கியவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
கடன் தள்ளுபடி தொடர்பாக அரசு பல்வேறு நடைமுறைகளை பின்பற்றுமாறும் சுற்றறிக்கை அனுப்பி இருந்தது. அதன் அடிப்படையில் நகை கடன் பெற்றவர்கள் தகுதியானவர்கள் தானா? என்று ஆய்வு செய்து அதன் அடிப்படையில் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் நகை கடன் தள்ளுபடி பெற்றவர்களின் விவரங்களை சிறப்பு தணிக்கை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் கூட்டுறவு தணிக்கைத்துறை இயக்குனர் மண்டல வாரியாகவும், மாவட்ட வாரியாகவும் 75 தணிக்கை அதிகாரிகளை நியமித்துள்ளார்.
கூடுதல் இயக்குனர், இணை இயக்குனர், துணை இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள், அந்தந்த மண்டலங்கள்-சரகங்களில் சோதனை தணிக்கையை தனித்தனியாக மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதல் கட்டமாக நகர கூட்டுறவு வங்கி மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளிலும், 2-ம் கட்டமாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் இதர சங்கங்களில் தணிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒரு அதிகாரி சோதனை தணிக்கை மேற்கொண்ட கூட்டுறவு நிறுவனத்தை மீண்டும் பிற அதிகாரி சரிபார்க்க தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தணிக்கை அறிக்கை முடிந்ததும் சரக கூட்டுறவு தணிக்கை உதவி இயக்குனர்கள் மற்றும் மண்டல இணை இயக்குனர்கள் உடனடியாக தலைமைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னை மண்டலத்தில் தணிக்கை செய்ய இணை இயக்குனர் ரக்பியூதின் உசேன், மதுரை மற்றும் திருநெல்வேலி மண்டலத்துக்கு கூடுதல் இயக்குனர் என்.எஸ்.சாரதா, கோவைக்கு இணை இயக்குனர் தனசேகரன், திருச்சிக்கு இணை இயக்குனர் சித்ரகலா, காஞ்சிபுரத்துக்கு விக்டர் பால்ராஜ், திருவள்ளூருக்கு மணி உள்ளிட்ட 75 அதிகாரிகள் அதில் இடம் பெற்றுள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வி.சி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சு
14 Mar 2026சென்னை, வி.சி.க.வுக்கு தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்
14 Mar 2026கரூர், கரூர் பலி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
-
தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
14 Mar 2026வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை மின்சார மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Mar 2026சென்னை, கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று ஞானபீட விருது அறிவிக்கப்பட்டள்ள வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய நடைமுறை கடைபிடிப்பு ஆர்.பி.ஐ. அறிவிப்பால் மறைமுக வட்டி, அபராதங்கள் இனி இல்லை
14 Mar 2026மும்பை, கிரெடிட் கார்டு விதிமுறைகளை ஆர்.பி.ஐ. புதுப்பித்துள்ளது. எனவே, இனி மறைமுக வட்டி, அபராதங்கள் விதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
நெல் கொள்முதல் அளவிற்கான இலக்கை உயர்த்திட வேண்டும்: 32 லட்சம் மெட்ரிக் டன்களாக மாற்றியமைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
14 Mar 2026சென்னை, கரீப் பருவத்தில் 2025-2026 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் டன்களிலிருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்களாகத் மாற்றிய
-
வார ராசி பலன்கள்
14 Mar 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Mar 2026- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
- சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோலுக்கினியானில் புறப்பாடு.
- மன்னார்குடி ராஜகோபாலசுவாமி ரிசிமுக பர்வதம் பட்ட
-
இன்றைய ராசிபலன்
14 Mar 2026 -
இன்றைய நாள் எப்படி?
14 Mar 2026


