Idhayam Matrimony

தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு : மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

சனிக்கிழமை, 14 மே 2022      தமிழகம்
Weather-Center 2022 01-09

Source: provided

சென்னை : தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், மீனவர்கள் வங்க கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மேலும் 4 நாட்களுக்கு 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை தகவல் மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (15ம் தேதி), மற்றும் 16ம் தேதி தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யும். நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, தேனி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். 17, 18ந் தேதிகளில் தமிழகம், புதுவையில் அநேக இடங்களில் லேசான மழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்துக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை: இன்று கேரளம், லட்சத்தீவு, குமரிக்கடல், வங்கக்கடலில் தென்மேற்கு பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும். மே 16ல் லட்சத்தீவு, கேரளம், அரபிக்கடலின் தென்கிழக்கு பகுதிகளில் பலத்த சூறாவளி வீச வாய்ப்பு இருக்கிறது. மணிக்கு 40 - 50 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளி வீச வாய்ப்புள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து