Idhayam Matrimony

உ.பி. உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்: டெல்லியில் 56 வருடங்களுக்கு பின் அதிகபட்ச வெப்பநிலை பதிவு

திங்கட்கிழமை, 16 மே 2022      இந்தியா
Sun 19-04-2022

Source: provided

புதுடெல்லி : டெல்லி மற்றும் உத்தரப்பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகபட்சமாக 49 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. ஹரியானாவை ஒட்டிய முங்கேஸ்பூர் பகுதியில் தான் இந்த வெப்பநிலை பதிவாகியுள்ளது. 1966 ஆம் ஆண்டுக்குப் பின், 56 வருடங்களுக்கு பிறகு டெல்லியில் இந்த அளவுக்கு அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது இதுவே முதன்முறை எனக் கூறப்படுகிறது.

டெல்லியைப் போல் ஹரியானா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் நேற்று முன்தினம் மிகக் கடுமையான வெப்பநிலை பதிவானது. வெயில், அனல்காற்று என மக்கள் தவிப்புக்குள்ளாகினர். இதுகுறித்து டெல்லியில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி ஆர்கே ஜெனமணி கூறுகையில், "மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் மேற்கிலிருந்து வரும் சலனங்கள் இருந்தன. ஆனால் எதுவுமே மழையைக் கொண்டு வரவில்லை. ஒன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது இல்லாவிட்டால் பலத்த காற்று வீசியது. இதனால் வெப்பநிலை உயர்ந்ததே தவிர மழை வந்து ஆறுதல் தரவில்லை. டெல்லியில் ஏப்ரல் 21 மற்றும் மே 4 ஆகிய இரு தேதிகளில் மட்டுமே லேசான அளவில் மழை பெய்துள்ளது" என்றார்.

இந்த ஆண்டில் மே 15 ஆம் தேதி மிகவும் வெப்பமான நாள் என்று கருதும் அளவுக்கு வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதேபோல் கடந்த ஏப்ரல் மாதம் 70 ஆண்டுகளுக்குப் பின் அதிக வெப்பநிலை பதிவான ஏப்ரல் என்ற நிலையை எட்டியது. டெல்லி முழுவதுமே நேற்று பரவலாக 45 டிகிரி வெப்பநிலை சராசரியாக பதிவானது. இதில் முங்கேஸ்பூர், நஜாஃப்கர் பகுதிகளில் மட்டும் 49 டிகிரி வெப்பநிலை பதிவானது. இவை இரண்டுமே தென் கிழக்கு டெல்லியில் உள்ள பகுதிகள்.

ரெட் அலர்ட்: இதனிடையே வெப்பநிலை அதிகரிப்பதைக் கணித்து ராஜஸ்தான் மாநிலத்துக்கு சிவப்பு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் டெல்லிக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

வெப்பநிலையை குறிப்பிட்டு பச்சை அலர்ட் விடுத்தால் நடவடிக்கை தேவையில்லை என்று அர்த்தம். மஞ்சள் அலர்ட் விடுத்தால் கவனமாக இருக்க வேண்டும் என்று அர்த்தம். ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டால் தயார்நிலையில் இருக்க வேண்டும் என்றும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டால் மீட்பு, நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அர்த்தம். இந்நிலையில், வடமேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் அனல்காற்று அதிகரிக்கும் என்றும் இன்று (மே 17) இதன் வீரியமும் பரவலும் சற்று குறையலாம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து