முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிதாக 2,202 பேருக்கு தொற்று: இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 2-வது நாளாக சரிந்தது

திங்கட்கிழமை, 16 மே 2022      இந்தியா
India-Corona 2022 01 12

Source: provided

புதுடெல்லி : புதிதாக 2,202 பேருக்கு நேற்று தொற்று உறுதியான நிலையில், இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை 2-வது நாளாக சரிந்துள்ளது.

இந்தியாவில் புதிதாக 2,202 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தினசரி பாதிப்பு கடந்த 3 நாட்களுக்கு முன் 2,858 ஆக இருந்தது. நேற்று முன்தினம் 2,487 ஆக குறைந்த நிலையில் நேற்று மேலும் சரிந்துள்ளது. டெல்லியில் 613, கேரளாவில் 428, அரியானாவில் 302, மகாராஷ்டிரத்தில் 255, உத்தரபிரதேசத்தில் 153, கர்நாடகாவில் 126 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 23 ஆயிரத்து 801 ஆக உயர்ந்தது.

கொரோனா பாதிப்பால் மேலும் 27 பேர் இறந்துள்ளனர். இதில் கேரளாவில் திருத்தி அமைக்கப்பட்ட பட்டியலில் 22 மரணங்கள் சேர்க்கப்பட்டதும் அடங்கும். இதுதவிர டெல்லியில் 3 பேர், மகாராஷ்டிரா, ஜம்முகாஷ்மீரில் தலா ஒருவர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,24,241 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 2,550 பேர் பாதிப்பில் இருந்து மீண்டு வீடு திரும்பினர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்து 82 ஆயிரத்து 243 ஆக உயர்ந்தது.

தற்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 17,317 ஆக குறைந்துள்ளது. இது முன்தின நாளை விட 375குறைவு ஆகும். நாடு முழுவதும் நேற்று முன்தினம் 3,10,218 டோஸ்களும், இதுவரை 191 கோடியே 37 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே நேற்று முன்தினம் 2,97,242 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்த பரிசோதனை எண்ணிக்கை 84.41 கோடியாக உயர்ந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து