எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கோயம்புத்தூர், வ.உ.சிதம்பரனார் மைதானத்தில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்கள் மற்றும் அவற்றின் மாதிரிகளின் கண்காட்சி மற்றும் தமிழக அரசு ஓராண்டில் ஆற்றிய அரும்பணிகளின் தொகுப்பு ஓவிய வடிவங்களின் கண்காட்சி ஆகியவற்றை தொடங்கி வைத்தார்.
தமிழக அரசின் தொல்லியல் துறை மற்றும் கோவை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், பொருநை அகழ்வாராய்ச்சி கண்காட்சி மற்றும் தமிழக அரசின் ஓராண்டு சாதனைகள் குறித்த ஓவியக் கண்காட்சி ஆகியவை கோவை வ.உ.சி. மைதானத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்தக் கண்காட்சி அரங்கை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பொதுமக்கள் பார்வைக்காக தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
இக்கண்காட்சி அரங்கின் நுழைவாயில் பகுதியை ஒட்டியுள்ள முதல் அரங்கில், தமிழக அரசின் சாதனைகள், முதல்வர் தொடங்கி வைத்த திட்டப்பணிகள் குறித்து 10 ஆயிரம் சதுரடி பரப்பளவில் ஓவியக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மொத்தம் 190 ஓவியங்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஓவியத்துக்கும் கீழே, அதற்கான விளக்கமும், அந்த ஓவியத்தை வரைந்த மாணவ, மாணவிகளின் பெயரும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்துள்ள அரங்கில் வைகை நதிக்கரையில் நகர நாகரிகம் குறித்த கீழடி, ஆற்றங்கரை நாகரிகம் குறித்த பொருநை, சங்க காலத் தொழிற்கூடம் குறித்த கொடுமணல், 4,200 ஆண்டுகள் பழமையான இரும்பக் காலப் பண்பாடு குறித்த மயிலாடும்பாறை ஆகிய தலைப்புகளில், மேற்கண்ட 4 பகுதிகளில் நடந்த அகழ்வாராய்ச்சிகளில் கண்டெடுக்கப்பட்ட தொல் பொருள்கள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.
அதாவது, தமிழக அரசின் தொல்லியல் துறையின் சார்பில், சிவகங்கை மாவட்டத்தில் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளிலும், தூத்துக்குடி மாவட்டத்தின் சிவகளை, அரியலூர் மாவட்டத்தின் கங்கை கொண்ட சோழபுரம், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் மயிலாடும்பாறை, விருதுநகர் மாவட்டத்தின் வெம்பக்கோட்டை, திருநெல்வேலி மாவட்டத்தில் துளுக்கார்பட்டி, தருமபுரி மாவட்டத்தின் பெரும்பாலை ஆகிய 7 இடங்களில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழர்களின் எழுத்தறிவு, வேளாண்மை, நீர் மேலாண்மை, கட்டிடத் தொழில்நுட்பம் போன்ற தலைப்புகளில், கீழடியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட பொருட்களின் மாதிரிகள், அவற்றின் புகைப்படங்கள் மற்றும் சிவகளை அகழாய்வில் கிடைத்த பொருட்களை விளக்கும் வகையில் தொல்பொருட்கள், முதுமக்கள் தாழிகள், அகழாய்வுக் குழி மாதிரிகள், அவற்றின் புகைப்படங்கள் கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.
மேலும், கொற்கை அகழாய்வின் போது கிடைத்த சதுர வடிவிலான செங்கல் கட்டுமானம், துளையுடன் கூடிய வடிகட்டும் குழாய் ஆகியவற்றின் மாதிரிகள், புகைப்படங்கள் மற்றும் ஆதிச்சநல்லூரில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் கிடைக்கப்பெற்ற தொல்பொருட்களின் மாதிரிகள், அவற்றின் புகைப்படங்களும் இங்கு காட்சிபடுத்தப்பட்டுள்ளன.
அதேபோல், மயிலாடும்பாறை அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்களான ஈட்டி முனைகள், அம்பு முனைகள், இரும்பினால் ஆன கத்திகள், கோடாரி, ஈமச்சின்னங்களி்ல வைக்கப்படும் படையல் பொருட்கள், மூன்றுக்கால் குடுவை உள்ளிட்ட பானைகள், கிண்ணங்கள், மக்கள் வாழ்விடப் பகுதியில் கிடைத்த வட்டச் சில்லுகள், பாசி மணிகள், சுடுமண்ணால் ஆன பொருட்கள், அவற்றின் புகைப்படங்கள் மற்றும் கொடுமணல் அகழாய்வில் கிடைக்கப் பெற்ற தொல்பொருட்கள், அவற்றின் புகைப்படங்கள் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. புகைப்படங்கள் மற்றும் தொல் பொருட்களை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின், அது தொடர்பாக சந்தேகங்களை அங்கிருந்த அமைச்சர்களிடமும், அதிகாரிகளிடமும் கேட்டறிந்தார்.
இந்நிகழ்வில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன், மு.பெ.சாமிநாதன், வி.செந்தில்பாலாஜி, என்.கயல்விழி செல்வராஜ், மேயர் கல்பனா ஆனந்தகுமார், நீலகிரி எம்.பி ஆ.ராசா, செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வீ.ப.ஜெயசீலன், மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா, துணை மேயர் வெற்றிச்செல்வன் மற்றும் உள்ளாட்சித்துறை அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
கடலுக்கு செல்ல வேண்டாம் மீனவர்களுக்கு புதுச்சேரி மீன்வளத்துறை எச்சரிக்கை
16 Nov 2025புதுச்சேரி : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம், புதுச்சேரி கடலோர பகுதிகளில் வருகிற 20-ந் தேதி வரை ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்
-
10-வது முறையாக பீகார் முதல்வராக 19-ம் தேதி பதவியேற்கிறார் நிதிஷ்குமார்
16 Nov 2025பாட்னா : 10-வது முறையாக பீகார் முதல்வராக நிதிஷ்குமார் 19-ம் தேதி பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
அமீபா மூளை காய்ச்சல் பாதிப்பு: சபரிமலைக்கு பக்தர்களுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
16 Nov 2025திருவனந்தபுரம் : அமீபா மூளை காய்ச்சல் பாதிப்பு எதிரொலியாக சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
-
வரும் சட்டமன்ற தேர்தலிலும் தி.மு.க.-காங். கூட்டணி உறுதி : செல்வபெருந்தகை திட்டவட்டம்
16 Nov 2025சென்னை : தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் தொடர்வதை காங்கிரஸ் கட்சி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. த.வெ.க. பக்கம் காங்கிரஸ் செல்லும் என கூறப்பட்ட நிலையில் தி.மு.க.
-
மகிளா வங்கியை மூடிய பா.ஜ.க. அரசு: முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
16 Nov 2025சென்னை : பெண்கள் பொருளாதார வலிமை பெற, காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கப்பட்ட மகிளா வங்கியை மத்திய பா.ஜ.க.
-
விருதுநகரில் அ.தி.மு.க.தான் போட்டி: ராஜேந்திர பாலாஜி திட்டவட்டம்
16 Nov 2025விருதுநகர் : விருதுநகர் சட்டப்பேரவை தொகுதியில் அ.தி.மு.க.தான் போட்டியிடும் என்று முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
-
சபரிமலை கோவில் சன்னிதானத்தில் கேமரா, செல்போன்களுக்கு தடை : இந்த ஆண்டு முதல் அமல்
16 Nov 2025திருவனந்தபுரம் : சபரிமலை சன்னிதானத்தில் இந்த ஆண்டு முதல் கேமரா, செல்போன்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
சென்னை மாநகராட்சியில் 7 இடங்களில் செல்லப்பிராணிகளுக்கு சிறப்பு முகாம்
16 Nov 2025சென்னை : சென்னை மாநகராட்சியில் 7 இடங்களில் 2-வது வாரமாக வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி, மைக்ரோ சிப் பொருத்துவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.
-
கார்த்திகை பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் இன்று கொடியேற்றம்
16 Nov 2025திருச்சானூர் : திருப்பதியை அடுத்த திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோவிலில் 9 நாட்கள் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடக்க உள்ளது.
-
தமிழ் பட பாடலை பாடிய பீகாரின் இளம் எம்.எல்ஏ.
16 Nov 2025பாட்னா : பீகாரின் இளம் சட்டப்பேரவை உறுப்பினர் நடிகர் அஜித் படத்தின் பாடலைப் பாடியுள்ளார்.
-
சமூக நல விடுதியில் மாணவரை தாக்கிய சக மாணவர்கள் விடுதியில் இருந்து நீக்கம்: கலெக்டர் உத்தரவு
16 Nov 2025ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரசு சமூக நல விடுதியில் பட்டியலின மாணவர் மீது பிற சமூக மாணவர்கள் தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை என் தந்தை காப்பாற்றுவார்: நிதிஷ் மகன் நிஷாந்த் உறுதி
16 Nov 2025பாட்னா : மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றி, பீகாரை முன்னேற்ற பாதைக்கு தனது தந்தை அழைத்துச் செல்வார் என்று பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் மகன் நிஷாந்த் குமார் கூறி
-
மாநில கால்பந்து போட்டி: மதுரை ஏ.சி. அணி முதலிடம்
16 Nov 2025சென்னை : பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான கால்பந்துப் போட்டியில் மதுரை ஏ.சி. அணியினர் முதலிடம் பிடித்து கோப்பையை வென்றனர்.
-
பயங்கரவாதம் குறித்த பேச்சு: உத்தரப்பிரதேச மாநிலத்தில் காவல் ஆய்வாளர் பணிநீக்கம்
16 Nov 2025உத்தரப் பிரதேசம் : உத்தரப் பிரதேச மாநிலத்தில் பயங்கரவாதம் குறித்த பேசிய காவல் ஆய்வாளர் நரேந்திர குமாரின் வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் அவர் பணியில் இருந்து நீக்கப்ப
-
டெல்லி செங்கோட்டையில் கார் குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் துப்பாக்கி தோட்டாக்கள் கண்டெடுப்பு
16 Nov 2025டெல்லி : டெல்லியில் கார் குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் இருந்து 9மிமீ தோட்டாக்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
உ.பி. குவாரியில் பாறைகள் சரிவு: சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணிகள் தீவிரம்
16 Nov 2025உத்தரப் பிரதேசம் : உத்தரப்பிரதேசத்தில் கல் குவாரியின் இடிபாடுகளில் இருந்து ஞாயிற்றுக்கிழமை தொழிலாளி ஒருவரின் உடல் மீட்கப்பட்ட நிலையில் 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை மீ
-
ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ஆண்பாவம் பொல்லாதது படக்குழு
17 Nov 2025டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல் தயாரிப்பில் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் ரியோ ராஜ் - மாளவிகா மனோஜ் நடிப்பில் வெளியான படம் ஆண்பாவம் பொல்லாதது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-11-2025.
17 Nov 2025 -
காந்தா திரைவிமர்சனம்
17 Nov 20251950களின் காலக்கட்டத்தில் சேலம் மாடன் ஸ்டுடியோவில் பிரபல நடிகர் ஒருவருக்கும், அவரை உருவாக்கிய இயக்குநர் ஒருவருக்கும் இடையே ஏற்படும் ஈகோ பிரச்சனையை மையமாக்க் கொண்டு உருவ
-
சிசு படத்தின் 2-ஆம் பாகம் ரோட் டு ரிவெஞ்ச்
17 Nov 2025ஜல்மாரி லாண்டர் இயக்கத்தில் இம்மாதம் 21 ந்தேதியன்று வெளியாக உள்ள ஹாலிவுட் திரைப்படம் ‘ரோட் டு ரிவெஞ்ச்’.
-
மெட்ராஸ் மாஃபியா கம்பெனி திரைவிமர்சனம்
17 Nov 2025பல குற்ற செயல்களில் ஈடுபட்டு வரும் தாதா ஆனந்தராஜ், தன் மீது எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யப்படாமல் கவனமாக பார்த்துக் கொள்கிறார்.
-
உண்மை சம்பவத்தை சொல்லும் தீயவர் குலை நடுங்க
17 Nov 2025அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’.
-
கும்கி 2 திரைவிமர்சனம்
17 Nov 2025நாயகன் மதி, மலை காட்டில் குழியில் சிக்கிக் கொண்ட குட்டி யானை ஒன்றை காப்பாற்றி வளர்க்கிறார். அந்த யானை ஒருநாள் திடீரென்று மாயமாகி விடுகிறது.


