எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : கட்சிக்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜெயகுமார் தெரிவித்தார்.
வருகிற 11-ம் தேதி நடைபெற உள்ள அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் ஜெயக்குமார், பெஞ்சமின் ஆகியோர் சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் மனு அளித்தனர். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் ஜெயக்குமார் கூறியதாவது,
பொதுக்குழுவுக்கு முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று காவல்துறையிடம் கோரிக்கை வைத்துள்ளோம். ஏனெனில், அமைதியை சீர்குலைக்கும் வகையில் சமூக விரோதிகளைத் தூண்டி எதிர் தரப்பினர் பிரச்னைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
பொதுக்குழு கூட்டம் சட்ட ரீதியாக நடைபெறுவதால் சட்டப்படியான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் பொதுக்குழு நடைபெறாமல் இருக்க வேண்டாதவர்கள் முயற்சி செய்வதாகவும் அதைத் தடுக்கும் வகையில் முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, உரிய நடவடிக்கை எடுப்பதாக டி.ஜி.பி. உறுதி அளித்துள்ளார்.
அரசு விதிக்கும் விதிமுறைகளுக்கு உட்பட்டு அ.தி.மு.க. பொதுக்குழு நடைபெறும். அதுமட்டுமின்றி அ.தி.மு.க.வில் கட்சிக்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


