எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
தைபே: சீனா தைவானின் வட-கிழக்கு கடற்கரையில் அருகிலுள்ள இராணுவ முகாமில் இருந்து இரண்டு டாங்பெங் எனப்படும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசப்பட்டது. இதனால் எந்த நேரத்திலும் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சீனாவுக்கும் தைவானுக்கும் இடையிலான பதற்றம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. 1940 களில் நடந்த உள்நாட்டுப் போரின் போது சீனாவும் தைவானும் பிரிக்கப்பட்டன. அப்போதிருந்து, தைவான் தன்னை ஒரு சுதந்திர நாடடாக அழைத்து வருகிறது. அதேசமயம், சீனா அதை தனது மாகாணமாகப் பார்க்கிறது மற்றும் தேவைப்பட்டால் வலுக்கட்டாயமாக இணைக்கபடும் என கூறி வருகிறது. அதாவது தைவான் மீது சீனாவின் தாக்குதல் அச்சுறுத்தல் பல தசாப்தங்களாக இருந்து வருகிறது.
சில நாடுகள் மட்டுமே தைவானை அங்கீகரித்துள்ளன. பெரும்பாலான நாடுகள் தைவானை சீனாவின் ஒரு பகுதியாகவே கருதுகின்றன. தைவானுடன் அமெரிக்கா அதிகாரபூர்வ இராஜதந்திர உறவுகளைக் கொண்டிருக்கவில்லை, ஆனால் தைவான் உறவுச் சட்டத்தின் கீழ் அமெரிக்கா அதற்கு ஆயுதங்களை விற்கிறது. தைவானின் தற்காப்புக்கு தேவையான உதவிகளை செய்து தருவதாக இந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
அக்டோபர் 2021 இல், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், சீனா தைவானைத் தாக்கினால், தைவானை அமெரிக்கா பாதுகாக்கும் என்று கூறினார். சீனாவின் அனைத்து அச்சுறுத்தல்களையும் மீறி அமெரிக்கா சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்கு வந்து சென்றார். பெலோசியின் வருகையால் திகைத்துப் போன சீனா, தற்போது தைவான் மீது தாக்குதல் நடத்தலாம் என நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். தைவானைச் சுற்றிலும் சீன ராணுவம் ராணுவப் பயிற்சியைத் தொடங்கியுள்ளது.
ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் சர்வதேச சட்டப் பேராசிரியரான டொனால்ட் ரோத்வெல், நான்சி பெலோசியின் தைவான் பயணம் சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் தலைமைக்கு ஒரு சவாலாக மாறி உள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது மாநாடு இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இதில் ஜி ஜின்பிங் தொடர்ந்து மூன்றாவது முறையாக அதிபர் பதவிக்கு வருவார். அத்தகைய சூழ்நிலையில், பெலோசியின் வருகை ஜின்பிங் மதிப்பை குறைப்பதாக அமையும் எனவே அவர் இந்த நடவடிக்கைக்கு வலுவான பதிலைக் கொடுக்க வேண்டும் என எண்ணி உள்ளதாக கூறி உள்ளார்.
பெலோசி வெளியேறியவுடன், சீனா தைவானின் கடல் மற்றும் வான்வெளியில் வடக்கு, தென்மேற்கு மற்றும் தென்கிழக்கில் இராணுவப் பயிற்சிகளை அறிவித்தது. உண்மையான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளுடன் இந்த வாரம் முழுவதும் இந்தப் பயிற்சி நடைபெறும் என்று சீன செய்தி நிறுவனமான சின்ஹூவா தெரிவித்துள்ளது.
சீனா போன்ற மாபெரும் சக்தியை சமாளிக்க சமச்சீரற்ற போர் முறையை தைவான் ஏற்றுக்கொண்டது. இது பார்குபின் உத்தி என்றும் அழைக்கப்படுகிறது. எதிரிக்கு முடிந்தவரை கடினமான மற்றும் விலையுயர்ந்த தாக்குதலை உருவாக்குவதே இதன் நோக்கம்.
தைவான் விமான எதிர்ப்பு, பீரங்கி எதிர்ப்பு மற்றும் கப்பல் எதிர்ப்பு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வாங்கி குவித்துள்ளது. இதில் டிரோன்கள் மற்றும் மொபைல் கடலோர பாதுகாப்பு கப்பல் ஏவுகணை (சிடிசிஎம்) போன்ற குறைந்த விலை போர்க்கப்பல்களும் அடங்கும். சீனாவின் விலையுயர்ந்த கடற்படை கப்பல்கள் மற்றும் கடற்படை உபகரணங்களை அழிக்கும் திறன் அவைகளுக்கு உள்ளது.
தைவான் அனைத்து பக்கங்களிலும் கடலால் சூழப்பட்டுள்ளது. தைவானைக் கைப்பற்றுவதற்கு, சீனா அதிக எண்ணிக்கையிலான படைகள் , கவச வாகனங்கள், ஆயுதங்கள், வெடிமருந்துகள், உணவு, மருத்துவப் பொருட்கள் மற்றும் எரிபொருளைக் கொண்டு செல்ல வேண்டும். இது கடல் வழியாக மட்டுமே சாத்தியமாகும்.பல அடுக்கு கடல் பாதுகாப்பை மீறி சீன வீரர்கள் தைவானை அடைந்தாலும் தைவான் கொரில்லா போருக்கு தனது நகரங்களை தயார் செய்துள்ளது.35 லட்சம் தைவானியர்கள் கொரில்லா போரில் நிபுணத்துவம் பெற்றவர்களாக உள்ளனர்.
இந்தநிலையில் சீனா நேற்று தைவானின் கடற்பகுதியில் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது. சீனா தைவானின் வட-கிழக்கு கடற்கரையில் அருகிலுள்ள இராணுவ முகாமில் இருந்து இரண்டு டாங்பெங் எனப்படும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியதாக தைவான் அரசு தெரிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை..! வெள்ளி விலை புதிய உச்சம்
24 Dec 2025சென்னை, சென்னையில் தங்கம் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.240 உயா்ந்து ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 400-க்கு விற்பனையாகி புதிய உச்சம் தொட்டுள்ளது.
-
த.வெ.க. கூட்டணியில் இணைய ஓ.பன்னீர்செல்வம் அணி முடிவு? 38 தொகுதிகளை கேட்டுப்பெறவும் முடிவு
24 Dec 2025சென்னை, த.வெ.க.
-
விவசாயிகளுக்கு பயிர் நிவாரணம்: ரூ.289.63 கோடி நிதி ஒதுக்கீடு: செய்து அரசாணை வெளியீடு
24 Dec 2025சென்னை, விவசாயிகளுக்கு பயிர் நிவாரணம் வழங்க ரூ.289.63 கோடி நிதி ஒதுக்கீடு செய்தற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
-
இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை: கிறிஸ்துவ பெருமக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து: சிறுபான்மையினருக்கு காவலனாக இருப்போம் என உறுதி
24 Dec 2025சென்னை, இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்துவ பெருமக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், தி.மு.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-12-2025.
24 Dec 2025 -
தமிழக அரசியல் வரலாற்றின் பொற்காலம்: எம்.ஜி.ஆருக்கு இ.பி.எஸ். புகழஞ்சலி
24 Dec 2025சென்னை, எம்.ஜி.ஆரின் நினைவு நாளில், நம் உயிர்நிகர் தலைவரை வணங்குகிறேன் என்று தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசியல் வரலாற்றின் பொற்கால அத்தியாயம் என்று புகழஞ்சல
-
விஜய் ஹசாரே கோப்பை: 50 ஓவர்களில் 574 ரன்களை எடுத்து பீகார் அணி சாதனை
24 Dec 2025பாட்னா, விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் 50 ஓவர்களில் 574 ரன்கள் எடுத்து பீகார் அணி புதிய சாதனை படைத்துள்ளது.
-
ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு: இரண்டு கட்டங்களாக நடத்த தமிழ்நாடு வனத்துறை திட்டம்
24 Dec 2025சென்னை, ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு - இரண்டு கட்டங்களாக நடத்த தமிழ்நாடு வனத்துறை திட்டமிட்டுள்ளது.
-
ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளுக்கான குரல் தமிழ்நாட்டில் இருந்து ஒலிக்கும்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவு
24 Dec 2025சென்னை, மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை மீட்டெடுக்க தமிழ்நாடு முழுவதும் 389 இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விவசாயக் கூலித் தொழிலாளர்கள் பங்கெடுத்தனர் என
-
நாட்டில் புதிதாக மேலும் 3 விமான நிறுவனங்களுக்கு அனுமதி
24 Dec 2025புதுடெல்லி, உள்நாட்டு விமானப் போக்குவரத்து துறையை மேலும் பலப்படுத்தும் விதமாக மூன்று விமான நிறுவனங்களுக்கு மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
-
சமூகநீதிப் பாதையில் தொடர்ந்து பயணிக்க நாம் உறுதியேற்போம்: பெரியாரின் நினைவு நாளில் இ.பி.எஸ். பதிவு
24 Dec 2025சென்னை, தமிழ்நாட்டின் பகுத்தறிவுப் பாதைக்கு வித்திட்ட சுடரொளி தந்தை பெரியார் என்று எடப்பாடி பழனிசாமி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
-
அன்பு, அமைதி தழைக்க வேண்டும்: கிறிஸ்துவ பெருமக்களுக்கு இ.பி.எஸ். வாழ்த்து
24 Dec 2025சென்னை, அன்பு, அமைதி, சகோதரத்துவம் தழைக்க வேண்டும் என்று இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்துவ பெருமக்களுக்கு அ.தி.மு.க.
-
கடலூர்: திட்டக்குடி அருகே சாலை விபத்தில் 7 பேர் பலி
24 Dec 2025கடலூர், கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே சாலை விபத்தில் 7 பேர் பலியான சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
100 நாள் வேலை திட்டத்தில் காந்தி பெயர் நீக்கம்: தமிழ்நாட்டில் தி.மு.க.-கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
24 Dec 2025சென்னை, 100 நாள் வேலை திட்டத்தில் காந்தி பெயர் நீக்கம் தொடர்பாக தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
-
எம்.ஜி.ஆர். படத்திற்கு மரியாதை செலுத்திய செங்கோட்டையன்
24 Dec 2025சென்னை, எம்.ஜி.ஆர். படத்திற்கு த.வெ.க. நிர்வாகி செங்கோட்டையன் மரியாதை செலுத்தினார்.
-
இலங்கைக்கு இந்தியா உதவி செய்வது ஆழ்ந்த பிணைப்பை பிரதிபலிக்கிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பெருமிதம்
24 Dec 2025கொழும்பு, புயல் பாதித்த இலங்கைக்கு இந்தியா நிவாரண உதவி செய்து வருவது ஆழ்ந்த பிணைப்பை பிரதிபலிக்கிறது என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
-
எம்.ஜி.ஆர். பாதையில் பயணித்திட உறுதியேற்போம்: டிடிவி தினகரன்
24 Dec 2025சென்னை, எம்.ஜி.ஆர். பாதையில் எந்நாளும் பயணித்திட இந்நாளில் உறுதியேற்போம் என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.
-
தன்மானம் காக்க, தன்னையே தந்தவர்: பெரியாரின் 52-வது நினைவு நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி
24 Dec 2025சென்னை, தன்மானம் காக்க, தன்னையே இந்த மண்ணுக்குத் தந்தவர் பெரியார் என்று அவரின் 52-வது நினைவு நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
-
6,100 கிலோ செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பாகுபலி ராக்கெட் முதல்முறையாக இஸ்ரோ புதிய சாதனை
24 Dec 2025ஸ்ரீஹரிகோட்டா, அமெரிக்காவின் ஏ.எஸ்.டி.
-
அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் ரூ.34.30 கோடி மதிப்பிலான 20 அதிநவீன குளிர்சாதன பேருந்துகளின் சேவை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
24 Dec 2025சென்னை, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு ரூ.34.30 கோடி மதிப்பிலான பல அச்சுகள் கொண்ட 20 அதிநவீன குளிர்சாதன சொகுசு பேருந்துகள் இயக்கத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று
-
தமிழகத்தை பாசிச சக்திகளால் ஒன்றுமே செய்ய முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
24 Dec 2025சென்னை, ஜனநாயகத்தில் வலிமை மிக்க சக்திகள் ஒன்று சேர்ந்து இருக்கும் போது எந்த பாசிச சக்திகளாலும் தமிழ்நாட்டை ஒன்றும் செய்ய முடியாது என கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் 
-
இன்று அரசு விழாவில் கலந்துகொள்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் கள்ளக்குறிச்சி பயணம்
24 Dec 2025கள்ளக்குறிச்சி, வீரசோழபுரம் தேசிய நெடுஞ்சாலை அருகே நடைபெறும் அரசு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு இன்று (
-
எல்.வி.எம்.-3 திட்டம் வெற்றி: விண்வெளி துறையில் இந்தியா தொடர்ந்து முன்னேறி வருகிறது: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
24 Dec 2025புதுடெல்லி, எல்.வி.எம்.-3 திட்டம் வெற்றியை அடுத்து விண்வெளி துறையில் இந்தியா தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருகிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
-
ஜன நாயகன் இசை வெளியீட்டு விழா: அரசியல் பேச்சுக்கு தடை விதித்த மலேசியா போலீஸ்
24 Dec 2025கோலாலம்பூர், ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில் அரசியல் ரீதியாக பேசுவதற்கு மலேசியா போலீஸ் தடை விதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
ஆரவல்லி மலைத்தொடரில் சுரங்கங்களுக்கு அனுமதியா? மத்திய அரசு விளக்கம்
24 Dec 2025புதுடெல்லி, டெல்லி முதல் குஜராத் வரையிலான முழு ஆரவல்லி மலைத்தொடரையும் மத்திய அரசு பாதுகாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


