முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தினசரி பாதிப்பு 20 ஆயிரத்தை கடந்தது: இந்தியாவில் 20,551 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு

வெள்ளிக்கிழமை, 5 ஆகஸ்ட் 2022      இந்தியா
covid-i---- 2022 08 04

Source: provided

புதுடெல்லி: இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 20 ஆயிரத்து 551 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது முந்தைய நாள் பாதிப்பான 19 ஆயிரத்து 893-ஐ விட அதிகமாகும். இதனால், நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 7 ஆயிரத்து 588 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 34 லட்சத்து 45 ஆயிரத்து 624 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 364 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 70 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 26 ஆயிரத்து 600 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை நாடு முழுவதும் இதுவரை 205 கோடியே 59 லட்சத்து 47 ஆயிரத்து 243 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து