எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுபான உரிமம் வழங்குவதில் முறைகேடு தொடர்பாக, டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இல்லம் மற்றும் அவருக்கு தொடர்புடைய 21 இடங்களில் நேற்று சிபிஐ சோதனை நடந்தது. இதற்கு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
டெல்லி துணை முதல்-மந்திரி மனிஷ் சிசோடியா வீட்டில் நேற்று காலை முதல் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். மதுபான உரிமம் வழங்குவதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக பதியப்பட்ட வழக்கில் மனிஷ் சிசோடியா வீட்டில் இந்த சோதனை நடைபெற்றது. 7 மாநிலங்களில் மொத்தம் 20 இடங்களில் நேற்று இந்த சோதனை நடைபெற்றது. சிசோடியாவின் வீடு உட்பட மொத்தம் 21 இடங்களில் சிபிஐ சோதனை நடந்தது. டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை தொடர்பான விதிமீறல் புகாரை அடுத்து, இந்தச் சோதனை நடந்தது. டெல்லி அரசின் முன்னாள் கலால் ஆணையர் கோபிகிருஷ்ணாவின் டாமன் மற்றும் டையூ இல்லத்திலும் சோதனை நடந்தது.
சோதனையை அடுத்து மணீஷ் சிசோடியா பகிர்ந்த டுவீட்டில், "சிபிஐ எனது வீட்டில் சோதனை செய்கிறது. அவர்களுக்கு நான் முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறேன். எனக்கு எதிராக எதையும் அவர்களால் கண்டுபிடிக்க முடியாது" என்று பதிவிட்டுள்ளார்.
கடந்த மாத (ஜூலை) தொடக்கத்தில், டெல்லி தலைமைச் செயலர் பதிவு செய்த புகாரில் ஜிஎன்சிடிடி சட்டம் 1991, தொழில் பரிவர்த்தனை விதி (டிஓபிஆர்)-1993, டெல்லி உற்பத்தி வரி சட்டம் -2009, டெல்லி உற்பத்தி வரி 2010 ஆகியன முற்றிலுமாக மீறப்பட்டுள்ளதாக அறிக்கை தாக்கல் செய்திருந்தார். இதன் அடிப்படையில் சிபிஐ விசாரணைக்கு துணை நிலை ஆளுநர் சக்சேனா பரிந்துரை செய்துள்ளார்.
உற்பத்தி வரித் துறைக்கு பொறுப்பு வகிக்கும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, முறையற்ற வகையில் மதுபான லைசென்ஸ் வழங்குவதில் சலுகைகள் காட்டியதாகவும், இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.
லைசென்ஸ் வழங்குவதில் புதிய நடைமுறை மூலம் மதுபான விற்பனை டெல்லி அரசிடமிருந்து கைமாறி நான்கு கார்ப்பரேஷன் வசம் சென்றது. இந்த நான்கு கார்ப்பரேஷன் பகுதியில் மொத்த மது விற்பனையில் 50 சதவீத விற்பனை நடைபெறுகிறது. இவை அனைத்தும் தனியார் வசம் விடப்பட்டது. இந்த விவகாரத்தில், சிபிஐ விசாரணைக்கு துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா பரிந்துரைத்திருந்தார். அதனைத் தொடர்ந்து சிபிஐ ரெய்டு சிசோடியாவுக்கு சொந்தமான இடங்களில் நேற்று நடந்தது.
சிபிஐ ரெய்டு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், "டெல்லி மாடல் கல்வியை பாராட்டி, அதற்கு உழைத்த துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் புகைப்படம் அமெரிக்காவின் மிகப்பெரிய செய்தித்தாளான நியூயார்க் டைமிஸில் வெளிவந்துள்ளது. இந்த நேரத்தில் அவர் வீட்டில் நடத்தப்படும் சோதனைக்கு நாங்கள் சிபிஐ-யை வரவேற்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மனிஷ் சிசோடியாவின் வீட்டில் சிபிஐ சோதனை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆம் ஆத்மி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மனிஷ் சிசோடியா வீட்டின் முன் குவிந்த ஆம் ஆத்மியினர் சிபிஐ, மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அப்புறப்படுத்த முயற்சித்ததால் இருதரப்புக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
அன்புமணி புதிய கட்சி தொடங்கட்டும்: பா.ம.க.வின் செயல் தலைவர் பேச்சு
29 Dec 2025சேலம், அன்புமணிக்கு அதிகாரம் வேண்டும் என்றால் புதிய கட்சி தொடங்கட்டும் என்று ராமதாஸ் மகள் ஸ்ரீகாந்தி தெரிவித்தார்.
-
மகர விளக்கு பூஜைக்காக சபரிமலையில் இன்று நடை திறப்பு
29 Dec 2025சபரிமலை, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சமரிமலையில் இன்று முதல் நடை திறக்கப்படுகிறது.
-
தெருநாய் கணக்கெடுப்பு பணிகளுக்கு ஆசிரியர்களை உட்படுத்திய டெல்லி அரசுக்கு எதிர்ப்பு
29 Dec 2025டெல்லி, தெருநாய் கணக்கெடுப்பு பணிகளுக்கு ஆசிரியர்களை உட்படுத்திய டெல்லி அரசின் உத்தரவிற்கு ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
-
வார தொடக்கத்தில் தங்கம், வெள்ளி விலை சற்று சரிவு
29 Dec 2025சென்னை, தங்கம் விலை நேற்று சற்று குறைந்து விற்பனையானது.
-
பட்ஜெட் தொடர்பாக ஆலோசிக்க இன்று பொருளாதார நிபுணர்களை சந்திக்கிறார் பிரதமர் மோடி
29 Dec 2025புதுடெல்லி, பட்ஜெட் தொடர்பாக ஆலோசிக்க இன்று புகழ்பெற்ற பொருளாதார வல்லுநர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார்.
-
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் குடும்பத்துடன் சாமி தரிசனம்
29 Dec 2025திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஸ்ரீரங்க நாச்சியாரை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு இடம் இல்லை கனிமொழி எம்.பி. திட்டவட்டம்
29 Dec 2025சென்னை, இண்டியா கூட்டணி உடையும் என்று நயினார் நாகேந்திரன் கனவு காண்கிறார் என்று தெரிவித்துள்ள கனிமொழி எம்.பி., நிச்சயமாக, தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்கு இடம் இல்லை என்பதை
-
அன்புமணி என்னை தினமும் காயப்படுத்துகிறார் - ராமதாஸ்
29 Dec 2025சேலம், அன்புமணி என்னை தினமும் காயப்படுத்துகிறார் என்று ராமதாஸ் கூறினார்.
-
கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்கள் திரளாக உற்சாக வரவேற்பு
29 Dec 2025கோவை, தி.மு.க. மகளிர் மாநாட்டுக்காக நேற்று கோவை வந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
3 மீனவர்கள் கைது எதிரொலி: மண்டபத்தில் மீனவர்கள் திடீர் போராட்டம்
29 Dec 2025ராமேசுவரம், மண்டபம் பகுதியில் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
சட்டசபை தேர்தலில் மிகப்பெரிய வெற்றிக் கூட்டணி அமைப்பேன்: டாக்டர் ராமதாஸ் பேச்சு
29 Dec 2025சேலம், வரும் சட்டசபை தேர்தலில் மிகப்பெரிய வெற்றி கூட்டணியை அமைப்பேன் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
-
வெல்லும் தமிழ் பெண்கள் கூடும் மேற்கு மண்டல மாநாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
29 Dec 2025திருப்பூர், வெல்லும் தமிழ்ப் பெண்கள் கூடும் தி.மு.க. மகளிர் அணி மேற்கு மண்டல மாநாடு என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
-
4-வது நாளாக தொடர்ந்த போராட்டம் இடைநிலை ஆசிரியர்கள் கைது
29 Dec 2025சென்னை, சென்னையில் நேற்று 4-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட இடை நிலை ஆசிரியர்களை போலீசார் குண்டுகட்டாக கைது செய்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-12-2025.
29 Dec 2025 -
துணை ஜனாதிபதி இன்று ராமேசுவரம் வருகிறார்: 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை
29 Dec 2025ராமேசுவரம், துணை ஜனாதிபதி இன்று ராமேசுவரம் வருகையை முன்னிட்டு நகரின் பல்வேறு பகுதிகளில் 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
த.வெ.க. தலைவர் விஜய்யை முதல்வராக ஏற்று கொள்பவர்களுடன்தான் கூட்டணி : செங்கோட்டையன் திட்டவட்டம்
29 Dec 2025கோவை, த.வெ.க தலைவரை முதல்வராக ஏற்றுக் கொள்பவர்களுடன் தான் கூட்டணி என்று மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ள த.வெ.க.
-
பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் கண்ணீர் விட்டு அழுத ராமதாஸ்..!
29 Dec 2025சேலம், சேலத்தில் நேற்று நடைபெற்ற பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி பற்றி பேசியபோது ராமதாஸ் கண்ணீர்விட்டு அழுததால் பரபரப்பு ஏற்பட்டது.
-
கரூர் சம்பவம் தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா ஆஜர்
29 Dec 2025கரூர், கரூர் சம்பவம் தொடர்பாக டெல்லியில் உள்ள சி.பி.ஐ . அலுவலகத்தில் த.வெ.க. துணை பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜூ ஆஜராகினர்.
-
ஆரவல்லி மலைத்தொடர் விவகாரம்: முந்தைய தீர்ப்பை நிறுத்தி வைத்தது சுப்ரீம் கோர்ட்..!
29 Dec 2025புதுடெல்லி, ஆரவல்லி மலைத்தொடர் விவகாரத்தில் முந்தைய தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் நிறுத்தி உத்தரவிட்டுள்ளது.
-
சென்னையில் சர்வதேச பாய்மரப் படகுப்போட்டி: முன்னேற்பாடு பணிகள் குறித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி ஆலோசனை
29 Dec 2025சென்னை, சென்னையில் அடுத்த ஆண்டு இந்திய, சர்வதேச இளையோர் பாய்மரப் படகுப்போட்டி சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற உள்ளது.
-
பாதுகாப்புப்படைக்கு ரூ.79 ஆயிரம் கோடியில் ஆயுதங்கள் கொள்முதல்: மத்திய அரசு ஒப்புதல்
29 Dec 2025டெல்லி, இந்திய பாதுகாப்புப்படைக்கு ரூ.79 ஆயிரம் கோடி மதிப்பிலான ஆயுதங்களை கொள்முதல் செய்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஒப்ப
-
வரும் ஜனவரியில் கேரளா வருகிறார் பிரதமர் மோடி: பா.ஜ.க.வின் 'மிஷன் 2026' திட்டத்தை அறிவிக்கிறார்
29 Dec 2025திருவனந்தபுரம், வரும் ஜனவரி மாதம் கேரளா வருகை தரும் பிரதமர் மோடி, பா.ஜ.க.வின் 'மிஷன் 2026' திட்டத்தை அறிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தமிழக மகளிர் என்றைக்கும் தி.மு.க. பக்கம்தான் உள்ளனர்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
29 Dec 2025திருப்பூர், தமிழக மகளிர் என்றைக்கும் தி.மு.க.
-
7 லட்சம் மாணவிகளுக்கு உதவித்தொகை மற்றும் பல்வேறு திட்டங்களால்: தமிழகத்தில் கல்லூரிக்கு செல்லும் பெண்கள் எண்ணிக்கை அதிகரிப்பு:
29 Dec 2025திருப்பூர் மகளிரணி மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
-
இந்தோனேசியாவில் முதியோர் இல்லத்தில் பயங்கர தீ விபத்து: 16 பேர் உடல் கருகி பலி - பலர் காயம்
29 Dec 2025மணிலா, இந்தோனேசியாவில் முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



