முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவையில் பெட்ரோல் குண்டுவீச்சு: தலைமை செயலாளர் ஆலோசனை

சனிக்கிழமை, 24 செப்டம்பர் 2022      தமிழகம்
iaiyanpu 2022 09 24

கோவையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக தலைமை செயலாளர் இறையன்பு நேற்று ஆலோசனை மேற்கொண்டார்.

கோவை மாநகரில் கடந்த சில நாட்களாக குனியமுத்தூர், ஒப்பணக்கார வீதி, 100 அடி ரோடு, காந்திபுரம் உள்பட சில இடங்களில் பெட்ரோல் மற்றும் மண்எண்ணெய் குண்டு வீசப்பட்டது. இதனால் கோவையில் பதட்டமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இதையடுத்து போலீசார் கோவையில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கோவையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக தலைமை செயலாளர் இறையன்பு நேற்று ஆலோசனை மேற்கொண்டார். சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் கோவை மாவட்ட கலெக்டர் சமீரன், ஐ.ஜி.சுதாகர், மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது கோவையில் அமைதியை ஏற்படுத்துவது உள்பட பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து