எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
லண்டன்: இங்கிலாந்து பிரதமராக தேர்வாகி உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்கிற்கு பல்வேறு நாட்டு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் அவரது வாழ்க்கை குறிப்பு பற்றிய விவரம் வருமாறு:-
ரிஷி சுனக்கின் (வயது 42) . அவரது தாத்தா இந்தியாவில் உள்ள பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார். அவரது பெயர் ராம்தாஸ் சுனக். பஞ்சாப்புக்கு உட்பட்ட குஜ்ரன்வாலா பகுதிதான் அவரது பூர்வீகம் ஆகும். நாடுகள் பிரிக்கப்பட்டபோது அந்த பகுதி பாகிஸ்தானுக்குசென்றுவிட்டதாக கூறப்படுகிறது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்தியாவில் இருந்த ராம்தாஸ் சுனக், கிளர்க்காக தனது பணியை தொடங்கினார்.
பின்னர் அவர் இந்தியாவில் இருந்து 1935-ம் ஆண்டு கிழக்கு ஆப்பிரிக்காவுக்கு உட்பட்ட நைரோபிக்கு சென்றார். 1937-ம் ஆண்டு டெல்லியைச் சேர்ந்த சுஹாக் ராணி சுனக் என்ற பெண்ணை அவர் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிறந்தவர்தான் ரிஷி சுனக்கின் தந்தை யஷ்வீர் சுனக். அவர் கென்யாவில் பிறந்தார். அவரது தாய் உஷா, டான்சானியாவில் பிறந்தவர் ஆவார். இவர்கள் அனைவரும் 1960-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு புலம்பெயர்ந்தனர்.
டாக்டரான யஷ்வீரும், மருந்தளுனரான உஷாவும் இங்கிலாந்தின் ஹாம்பிசைர் மாகாணம் சவுத்தாம்ப்டன் நகரில் மருந்தகம் ஒன்றை அமைத்து தொழில் செய்து வந்தனர். ஹாம்ப்சைரில் பள்ளிப்படிப்பை முடித்த ரிஷி சுனக், பின்னர் வின்செஸ்டரில் உள்ள ஆண்கள் பள்ளியில் அங்கேயே தங்கி படித்தார். அவர் அங்கு மாணவர் தலைவராக விளங்கினார். பின்னர் அவர் 2001-ம் ஆண்டு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட லிங்கோல்ன் கல்லூரியில் சேர்ந்து தத்துவம், அரசியல், பொருளாதார பிரிவில் பட்டம் பெற்றார்.
இந்த நேரத்தில் அவர் கன்சர்வேடிவ் கட்சியில் சேர்ந்து பயிற்சி பெற்று, அரசியல் பணிகளிலும் ஈடுபட்டு வந்தார். 2006-ம் ஆண்டு அவர் ஸ்டாண்ட்போர்டு பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பட்டமும் பெற்றார். பின்னர் ஒரு வங்கியில் ஆலோசகராக பணியில் சேர்ந்த ரிஷி சுனக், பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி தனது திறமையை நிரூபித்தார். மேலும் அவர் இங்கிலாந்தில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் நாராயணமூர்த்திக்கு சொந்தமான கேட்டர்மாரன் வென்சர்ஸ் நிறுவனத்தின் இயக்குனராக பணியில் சேர்ந்தார்.
கடந்த 2014-ம் ஆண்டு முழுமையாக அரசியல் பிரவேசம் மேற்கொண்ட ரிஷி சுனக், கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் யார்க்சைர் மாகாணத்தில் உள்ள ரிச்மண்ட் தொகுதியில் போட்டியிட்டு இங்கிலாந்து நாடாளுமன்றத்துக்கு எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே ஆண்டு கருப்பு மற்றும் சிறுபான்மையின மக்களின் தலைவராக ரிஷி சுனக் நியமிக்கப்பட்டார். அதையடுத்து 2015-ம் ஆண்டு நடந்த பொது தேர்தலிலும் ரிஷி சுனக் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார்.
2017-ம் ஆண்டு நடந்த தேர்தலிலும் வெற்றிபெற்ற ரிஷி சுனக், தனது ஆதரவு பலத்தை நிரூபித்தார். இதையடுத்து அவரை அப்போதைய பிரதமர் போரிஸ் ஜான்சன் நாட்டின் பொருளாதார தலைமை செயலாளராக நியமித்தார். 2019-ம் ஆண்டு நடந்த பொது தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்ற ரிஷி சுனக், இங்கிலாந்து நாட்டின் உயரிய பதவியான கருவூல தலைவரான நியமிக்கப்பட்டார்.
அப்போது இங்கிலாந்து கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியது. அந்த சமயத்திலும் ரிஷி சுனக் திறம்பட பட்ஜெட் தாக்கல் செய்தார். வரி விலக்குகளை அறிவித்தார். மேலும் கேபினட் மந்திரியாக பதவி வகித்த ரிஷி சுனக், போரிஸ் ஜான்சன், மேட் ஹான்காக், மைக்கேல் கோவ் உள்ளிட்ட தலைவர்களுடன் சேர்ந்து கொரோனா காலத்தில் முக்கிய முடிவுகளை எடுக்க காரணமாக இருந்தார்.
குறிப்பாக இவர் கொரோனா காலத்தில் பணியாளர் தக்கவைப்பு திட்டத்தை அமல்படுத்தினார். இந்த திட்டத்திற்கு அரசு முக்கியத்துவம் கொடுக்க தயங்கியபோதும், ரிஷி சுனக் தனது பொருளாதார யுக்தியால் திட்டத்தை அமல்படுத்தினார். இந்த திட்டம் மூலம் கொரோனா காலத்தில் பணிகள் நடைபெறாதபோது அரசும், தனியார் நிறுவனங்களும் தங்கள் பணியாளர்களுக்கு 80 சதவீத ஊதியத்தை வழங்கின.
இதன்மூலம் ரிஷி சுனக் இங்கிலாந்து மக்களின் கவனத்தை ஈர்த்தார். இப்படி பல்வேறு வரலாறுகளை படைத்த ரிஷி சுனக் கடைசியாக இங்கிலாந்து பெண் பிரதமர் லிஸ் டிரஸ் தலைமையிலான மந்திரிசபையில் நிதி மந்திரியாக இருந்தார். தற்போது லிஸ் டிரஸ் தனது பதவியை ராஜினாமா செய்தபிறகு அந்நாட்டின் பிரதமராக உயர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரிஷி சுனக்கிற்கும், கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த தொழில் அதிபரும், இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனருமான நாராயணமூர்த்தியின் மகள் அக்ஷதாவிற்கும் (42) கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு அனுஷ்கா, கிருஷ்ணா என 2 மகள்கள் உள்ளனர். தற்போது அவர்கள் இங்கிலாந்தின் யார்க்சைர் நகரில் வசித்து வருகிறார்கள். மேலும் இந்துவான ரிஷி சுனக் அங்குள்ள கிருஷ்ணர் கோவிலுக்கு அடிக்கடி சென்று வழிபட்டு வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 2 weeks ago |
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து உயர்வு
11 May 2025சேலம் : மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1000 கன அடி தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்படுகிறது.
-
சி.ஏ. தேர்வுகள் நடைபெறும் தேதி அறிவிப்பு
11 May 2025சென்னை : ஒத்திவைக்கப்பட்டுள்ள சி.ஏ. தேர்வுகள் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அன்னையர் நாள்: த.வெ.க.தலைவர் விஜய் வாழ்த்து
11 May 2025சென்னை : அன்னையர் நாளையொட்டி தவெக தலைவர் விஜய் ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
-
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதி திடீர்துப்பாக்கிச்சூடு: இந்திய வீரர் காயம்
11 May 2025ஜம்மு : ஜம்மு - காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மும்பை: ஜூன் 9 வரை பட்டாசு வெடிக்க தடை
11 May 2025மும்பை : ராக்கெட் உள்பட எந்த வகையான பட்டாசுகளையும் வெடிக்க தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த சூர்யா
12 May 2025முன்னணி நட்சத்திர நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், கடந்த மே 1 ஆம் தேதி வெளியான ரெட்ரோ திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்
-
நட்புக்காக விழாவில் பங்கேற்ற சிம்பு
12 May 2025“DD நெக்ஸ்ட் லெவல்” பட விழாவில் நடிகர் சிம்பு.
-
ஜோரா கைய தட்டுங்க’ டிரெய்லர் வெளியீடு
12 May 2025நடிகர் யோகிபாபு நடிப்பில், இயக்குநர் விநீஷ் மில்லினியம் இயக்கத்தில், 'ஜோரா கைய தட்டுங்க'மாயாஜால வித்தையை நிகழ்த்தும் கலைஞரின் வாழ்வியலை மையப்படுத்திய படம்
-
'தொடரும்’ திரை விமர்சனம்
12 May 2025பாரதிராஜா விடம் ஸ்டண்ட் நடிகராக பணியாற்றிய மோகன்லால், ஒரு விபத்தால் அதனை விட்டுவிட்டு தேனியில், வாடகை கார் ஓட்டுநராக, தனது குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார்.
-
'நிழற்குடை' திரை விமர்சனம்
12 May 2025அமெரிக்கா செல்ல வேண்டும் என்ற கனவோடு வாழும் விஜித் - கண்மணி தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது.
-
சேவை செய்யும் தூய உள்ளங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் செவிலியர் தின வாழ்த்து
12 May 2025சென்னை : தன் எதிரில் உள்ள மனிதரின் பாலினம், சமூகத் தகுதி, சாதி, மதம், நிறம் பற்றி சிந்திக்காமல், அனைவருக்கும் சிகிச்சை வழங்கி ஆதரிக்கும் தூய உள்ளங்களுக்கு, உலக செவிலியர
-
ஒரே நாளில் 2 முறை குறைந்த தங்கம் விலை
12 May 2025சென்னை : தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலையில் இருமுறை சரிவு காணப்பட்டது. நேற்று ஒரேநாளில் சவரன் ரூ.2360 குறைந்து விற்பனையானது.
-
'கஜானா ' திரை விமர்சனம்
12 May 2025அடர்ந்த காட்டு பகுதியில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு புதைத்து வைத்த பொக்கிஷம் இருப்பதாகவும், அதனை டைனோசர் காலங்களில் வாழ்ந்த யாளி விலங்கு பாதுகாத்து வருவதாகவும் சொல்ல
-
சேலம் முதிய தம்பதி கொலை: பீகார் இளைஞர் கைது
12 May 2025சேலம் : சேலத்தில் மளிகை கடை நடத்தி வந்த முதிய தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் பீகார் மாநில தொழிலாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
தங்கக்குதிரை வாகனத்தில் பச்சைப்பட்டுடுத்தி மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்
12 May 2025மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு நேற்று (மே 12) காலை 6 மணியளவில் நடைபெற்றது.
-
கூவாகம் திருவிழா 2025: தூத்துக்குடியை சேர்ந்த சக்தி ‘மிஸ் திருநங்கை’ ஆக தேர்வு
12 May 2025விழுப்புரம் : விழுப்புரத்தில் நடைபெற்ற விழாவில் ‘மிஸ் திருநங்கை’ பட்டத்தை தூத்துக்குடியைச் சேர்ந்த சக்தி என்ற திருநங்கை பெற்றார்.
-
தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்பட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
12 May 2025சென்னை : தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்பட 7 மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (மே 13) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
‘மையல்’ இசை வெளியீடு
12 May 2025ஐகான் சினி கிரியேஷன்ஸ் எல்எல்பி தயாரிப்பில் இயக்குநர் APG ஏழுமலை இயக்கத்தில் நடிகர்கள் சேது, சம்ரிதி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘மையல்’.
-
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் புற்றுநோய் கண்டறியும் திட்டம்: அமைச்சர் தொடங்கி வைத்தார்
12 May 2025திருவள்ளூர் : திருப்பாச்சூர் துணை சுகாதாரம் நிலையத்தில் சமுதாய அளவிலான புற்று நோய் கண்டறியும் திட்ட விரிவாக்கத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
-
பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு முடிவு பரிதாபத்துக்கு உரியது: ஏர் மார்ஷல் பாரதி
12 May 2025புதுடெல்லி : பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக தாக்குதல் நடத்த பாகிஸ்தான் முடிவு செய்தது பரிதாபத்துக்குரியது என இந்திய விமானப்படையின் ஏர் மார்ஷல் ஏ.கே.பாரதி தெரிவித்தார்.
-
பிளஸ்-2 விடைத்தாள் நகல் பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் : தேர்வுத்துறை அறிவிப்பு
12 May 2025சென்னை : பிளஸ்-2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் விநியோகிக்கப்பட்ட நிலையில் விடைத்தாள் நகலுக்கு இன்று முதல் மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளத
-
நாட்டின் பாதுகாப்பிற்காக 10 செயற்கைக்கோள்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பு: இஸ்ரோ
12 May 2025புதுடெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதல் சற்று தணிந்திருக்கும் நிலையில், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய 10 செயற்கைக்கோள்கள் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில
-
எல்லை பகுதிகளில் தனிந்த போர் பதற்றம்: 32 விமான நிலையங்களிலும் மீண்டும் சேவை தொடக்கம்
12 May 2025புதுடெல்லி : இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த வாரம் நடந்த ஆயுத மோதலைத் தொடர்ந்து சிவில் விமானங்களை இயக்க 32 விமான நிலையங்களுக்கு விதிக்கப்பட்ட தடை திரும்பப்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2025
12 May 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2025
12 May 2025