முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.1000 வழங்க அரசாணை வெளியீடு: தமிழக அரசு அறிவிப்பு

புதன்கிழமை, 23 நவம்பர் 2022      தமிழகம்
Tamil-Nadu-Assembly-2022-01-22

மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ. 1000 வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அதிக அளவில் கனமழை பெய்தது. இந்த அதீத கனமழையால் மயிலாடுதுறை, கடலூர், பூம்புகார், சீர்காழி ஆகிய பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டன. மழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் உள்ள குடும்பங்களுக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 1000 இழப்பீடு வழங்க முதல்வர்  மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். 

இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.1000 வழங்க தமிழக அரசுஅரசாணை வெளியிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா ரூ. 1000 வழங்க ரூ. 16 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சீர்காழியில் 99,518 குடும்ப அட்டைதாரர்களுக்கும், தரங்கம்பாடியில் 62,129 குடும்ப அட்டை தாரர்களுக்கும் தலா ரூ. 1000 வழங்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து