எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆன்லைன் ரம்மி அவரச தடை சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளித்தும் தமிழக அரசு நடைமுறைபடுத்தவில்லை என்றும் செஸ் போட்டியை தொடங்கி வைக்க பிரதமர் தமிழகம் வந்த போது அவரது பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் அண்ணாமலை கூறினார்.
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கிண்டி ராஜ்பவனில் நேற்று கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினார். அப்போது மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தில் தமிழகத்தில் ஊழல் நடந்து இருப்பதாகவும், பிரதமர் மோடி வருகையின்போது ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடிகள் பற்றியும் விசாரணை நடத்த வேண்டும் என்று மனுக்களை அளித்தார். இந்த சந்திப்பு முடிந்ததும் வெளியே வந்த அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:-
உலக செஸ் விளையாட்டு போட்டியை தொடங்கி வைக்க பிரதமர் மோடி சென்னை வந்தார். நேரு விளையாட்டு அரங்கில் நடந்த விழாவில் கலந்து கொண்டு செஸ் போட்டியை தொடங்கி வைத்தார். அவரது பாதுகாப்பில் மிகப்பெரிய பாதுகாப்பு குளறுபடிகள் நடந்துள்ளன. மெட்டல் டிடெக்டர் கருவிகள் வேலை செய்யாமல் இருந்துள்ளன. அதன் வழியாகத்தான் எல்லோரும் சென்றுள்ளார்கள். இதுபற்றி மத்திய அரசின் சிறப்பு பாதுகாப்பு பிரிவு மத்திய அரசிடம் தெரிவித்துள்ளது.
இது பற்றி மத்திய அரசு தமிழக அரசுக்கு கடிதம் எழுதி இருக்கிறது. ஒரு பிரதமருக்கே பாதுகாப்பு இல்லாத ஆட்சியில் சாதாரண மக்களுக்கு எப்படி பாதுகாப்பு கிடைக்கும்? மங்களூரில் குண்டு வெடிப்பு நடந்த 2 மணி நேரத்தில் அது தீவிரவாத தாக்குதல் என்று கர்நாடக காவல்துறை வெளிப்படையாக கூறியது. ஆனால் கோவையில் நடந்தது குண்டுவெடிப்பு. இதன் பின்னணியில் தீவிரவாத இயக்கம் உள்ளது என்பதை கண்டுபிடித்தும் இதுவரை தீவிரவாத தாக்குதல் என்பதை சொல்ல காவல்துறை தயங்குகிறது. காரணம் உண்மையை சொன்னால் பதவியில் இருந்து தூக்கி விடுவார்களோ என்ற அச்சம்தான்.
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை என்று அவர் மீது புகார் புராணம் பாடுவதை ஏற்க முடியாது. கவர்னர், சட்டத்துறை, அரசு ஆகிய மூன்றும் ஒன்றுக்கொன்று இணைந்து இருப்பவை. அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. நிரந்தர சட்டத்துக்கு ஏன் ஒப்புதல் அளிக்கவில்லை என்று கவர்னர் மீது தவறான பார்வையை உருவாக்க முயற்சிக்கிறார்கள். ஆன்லைன் சூதாட்ட அவசர தடை சட்டத்துக்கு கவர்னர் ஒப்புதல் அளித்தும் 6 மாதமாக அரசு ஆணை பிறப்பிக்காதது ஏன்? அதனால்தான் இன்று வரை ஆன்லைன் சூதாட்டம் தொடருகிறது.
நிரந்தர தடை சட்டம் கொண்டு வரும் போது சட்டத்தில் இருக்கும் அனைத்து ஓட்டைகளும் அடைக்கப்பட வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்தாலும், பிராக்சி என்ற மென்பொருளை நிறுவினால் தடையை தாண்டி விளையாட முடியும். இந்த தொழில்நுட்ப பிரச்சினைகளையும் தடுக்க வேண்டும். இதையெல்லாம் சீர்படுத்த சட்டத்தை கடுமையாக்குவதை விட்டு விட்டு கவர்னரிடம் போட்டி போடுவது ஏன்? அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தான் செய்த தவறுகளுக்கெல்லாம் கவர்னர் மீது பழியை போட்டு தப்பிக்க பார்க்கிறார்கள்.
வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தில் தமிழகத்தில் 69 லட்சம் இணைப்புகள் கொடுக்கப்ட்டுள்ளதாக தமிழக அரசு மத்திய அரசிடம் கணக்கு காட்டி இருக்கிறது. நாங்கள் 3 மாவட்டங்களில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டதில் வெளியே குழாய் பொருத்தப்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் தண்ணீர் வரும் குழாயே இல்லை என்பதை பார்த்தோம். இந்த திட்டத்தில் பல நூறு கோடி ஊழல் நடந்துள்ளது. இதுபற்றி விசாரிக்கவும் கவர்னரிடம் கேட்டுக் கொண்டோம்.
நாட்டின் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் துணை ராணுவ வீரர் குருமூர்த்தியையும் அவரது குடும்பத்தினரையும் தேச விரோத சக்திகள் மிரட்டி இருக்கிறார்கள். உடனடியாக அந்த வீட்டுக்கு தமிழக அரசு பாதுகாப்பு வழங்கி இருப்பது பாராட்டதக்கது. அதே நேரம் மிரட்டல் விடுத்தவர்களை கண்டுபிடித்து இதுவரை உள்ளே தள்ளாதது ஏன்? எங்கள் கட்சி சார்பிலும் அந்த குடும்பத்தினரை சந்தித்து உறுதுணையாக இருப்போம் என்று கூறி இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 12 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு
25 Apr 2024மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது.
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு
25 Apr 2024புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.