தென்கிழக்கு நிலக்கரி வயல்கள் நிறுவனத்தில் உள்ள 'முழு நேர ஆலோசகர்' பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : இந்தியா தனது பாதுகாப்புக்காக பல்வேறு அதி நவீன ஏவுகணைகளை உருவாக்கி இருக்கிறது. சர்வதேச கடல் பகுதிகளில் எல்லா நாடுகளும் சுதந்திரமாக செயல்பட அனுமதி உள்ளது.
இந்தியா தனது பாதுகாப்புக்காக பல்வேறு அதி நவீன ஏவுகணைகளை உருவாக்கி இருக்கிறது. இதில் அக்னி ரக ஏவுகணைகள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை. அக்னி ரக ஏவுகணைகளை இந்திய பாதுகாப்பு நிறுவனம் அடிக்கடி விண்ணில் செலுத்திஆய்வு செய்து வருகிறது. கடந்த மாதம் 3 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு சென்று தாக்கும் அக்னி ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்தது.
அடுத்த கட்டமாக சுமார் 5 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கும் தூரமாக சென்று தாக்கும் அக்னி-5 என்ற ஏவுகணையையும் இந்தியா ஆய்வு செய்து வருகிறது. அடுத்தவாரம் 15, 16-ந் தேதிகளில் அக்னி-5 ஏவுகணையை இந்தியா சோதிக்க திட்டமிட்டுள்ளது. ஒடிசாவில் உள்ள அப்துல்கலாம் தீவில் இருந்து ஏவப்பட்டு இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட உள்ளது. அக்னி-5 ரக ஏவுகணைகள் 3 அடுக்குகளை கொண்டது. இதனால் இதன் ஆற்றல் அதிகமாகும்.
இந்த ரக ஏவுகணைகள் சீன நாட்டின் வடக்கு பகுதி வரை சென்று தாக்கும் ஆற்றல் கொண்டது. விரைவில் இந்த ஏவுகணையை முப்படைகளிலும் இணைக்க இந்தியா தயாராகி வருகிறது. இந்தியாவின் ஏவுகணைகள் மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக சீனா கருதுகிறது. எனவே இந்தியா ஏவுகணை சோதனை நடத்தும் போதெல்லாம் சீனா உளவு பார்ப்பதை வழக்கத்தில் வைத்திருக்கிறது. அதிலும் சமீப காலமாக இந்தியாவின் ஒவ்வொரு ராணுவ நிலைகளையும் சீனா உளவு பார்க்கத் தொடங்கி உள்ளது.
இதற்காகவே சீனா சுமார் 12 அதிநவீன கப்பல்களை உருவாக்கி இருக்கிறது. அதில் சுமார் 20 ஆயிரம் டன் எடை கொண்ட யுவான் வாங்-5 என்ற உளவு கப்பல் கடந்த ஆகஸ்டு மாதம் இலங்கை ஹம்பன்தோட்டா துறைமுகத்துக்கு வந்தது. இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி இலங்கைக்கு வந்த இந்த உளவு கப்பல் தென் இந்தியாவின் முக்கிய ராணுவ பகுதிகளை உளவு பார்த்ததாக கருதப்படுகிறது.
ஒரு வாரம் இலங்கை துறைமுகத்தில் நின்ற அந்த கப்பல், பிறகு இந்திய பெருங்கடல் பகுதி வழியாக சீனாவுக்கு புறப்பட்டு சென்று விட்டது. இந்த நிலையில் அடுத்த வாரம் இந்தியா அக்னி-5 ரக ஏவுகணை சோதனை நடத்துவதால் அந்த உளவு கப்பலை சீனா ராணுவம் மீண்டும் இந்திய பெருங்கடல் பகுதிக்கு அனுப்பி உள்ளது. நேற்று முன்தினம் காலை அந்த உளவு கப்பல் இந்தோனேஷியா அருகே உள்ள சந்தா ஜலசந்தியை கடந்து இந்தியப் பெருங்கடல் பகுதிக்குள் நுழைந்தது.
இந்தியப் பெருங்கடல் பகுதிக்குள் இந்தியாவுக்கு மிக நெருக்கமாக அந்த நவீன உளவு கப்பல் வந்து கொண்டிருக்கிறது. அக்னி-5 ஏவுகணை ஒடிசா கடலோரத்தில் இருந்து விண்ணில் ஏவப்படும் போது அந்த ஏவுகணையை முழுமையாக ஆய்வு செய்ய சீன உளவு கப்பல் திட்டமிட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது.
அக்னி ஏவுகணைகளை இந்தியா எப்படி தயாரித்துள்ளது? அதன் வேகம் எப்படி உள்ளது? அதன் தாக்கும் சக்தி எப்படி உள்ளது? என்பன போன்றவற்றை கண்டுபிடிக்கும் வகையில் சீன உளவு கப்பலில் அதி நவீன கருவிகள் உள்ளன. 400 வீரர்களுடன் இயங்கும் அந்த கப்பலில் ஏவுகணைகளை பின் தொடர்ந்து செல்லும் வகையில் எலக்ட்ரானிக் ஆய்வு கருவிகள் உள்ளன.
இதற்காகவே அந்த உளவு கப்பலில் 5 அதிநவீன தொலைநோக்கி கருவிகள் இருக்கின்றன. எனவே அடுத்த வாரம் அக்னி ஏவுகணை விண்ணில் ஏவப்படும் பட்சத்தில் அதை முழுமையாக சீன உளவு கப்பலால் ஆய்வு செய்ய முடியும். இதனால் இந்திய பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
கடந்த மாதம் இந்தியா அக்னி-3 ரக ஏவுகணை சோதனையை நடத்த திட்டமிட்டபோது சீனாவின் யுவான் வாங்-6 என்ற உளவு கப்பல் இந்திய பெருங்கடல் பகுதிக்குள் ஊடுருவி தயாராக நின்றது. இதனால் இந்தியா அந்த ஏவுகணை சோதனையை ஒத்திவைத்தது. அதுபோல இந்த தடவையும் அக்னி-5 ஏவுகணை சோதனை ஒத்தி வைக்கப்படுமா? என்ற கேள்விகுறி எழுந்துள்ளது.
சர்வதேச கடல் பகுதிகளில் எல்லா நாடுகளும் சுதந்திரமாக செயல்பட அனுமதி உள்ளது. இதை பயன்படுத்தி தான் இந்திய பெருங்கடல் பகுதிக்குள் சீனா தனது உளவு கப்பல் மூலம் ஆட்டம் காட்டுகிறது. சீன நீர்மூழ்கி கப்பல்களை தங்கு தடையின்றி இயக்குவதற்காகவே இத்தகைய உளவுப் பணிகளில் சீனா தொடர்ந்து ஈடுபட்டு கொண்டிருக்கிறது. அதற்கு இந்தியாவால் தடை போட முடியாது என்பதால் எப்படி பதிலடி கொடுப்பது என்பது பற்றி இந்தியா தொடர்ந்து ஆலோசித்து வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
முட்டை வறுவல்![]() 1 day 18 hours ago |
கருவேப்பிலை குழம்பு.![]() 4 days 14 hours ago |
முருங்கைப்பூ பாயாசம்.![]() 1 week 1 day ago |
-
22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் : பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
05 Feb 2023சென்னை : காவிரி டெல்டா பகுதிகளில் அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த சம்பா பயிர்கள் பருவம் தவறிப் பெய்த மழையின் காரணமாக நீரில் மூழ்கியுள்ள காரணத்தால், நெல் கொள்முதல் வித
-
சேலை வழங்கும் நிகழ்வில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
05 Feb 2023சென்னை : வாணியம்பாடியில் சேலை வழங்கும் நிகழ்வில் உயிரிழந்த பெண்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ.
-
இந்திய அணியை எதிர்கொள்ள சுழற்பந்து வீச்சாளர்கள் தயாராக உள்ளனர் : ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ்
05 Feb 2023பெங்களூரு : இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
-
சீனாவுடன் தொடர்புடைய 138 சூதாட்ட செயலிகளுக்கு தடை: மத்திய அரசு அறிவிப்பு
05 Feb 2023புதுடெல்லி : சீனாவுடன் தொடர்புடைய 138 சூதாட்ட செயலிகள் மற்றும் 94 கடன் வழங்கும் செயலிகளை தடை செய்யும் பணியை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
-
அக்னிபாத் வீரர் பணியிடங்களுக்கு இனிமேல் முதலில் நுழைவுத்தேர்வு : ராணுவ வட்டாரங்கள் தகவல்
05 Feb 2023புதுடெல்லி : அக்னிபாத் வீரர் பணியிடங்களுக்கு இனி மேல் முதலில் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: மனு தாக்கல் செய்யும் பணி நாளை முடிவுக்கு வருகிறது : 10-ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு
05 Feb 2023மதுரை : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு நடந்து வரும் வேட்பு மனு தாக்கல் செய்யும் பணி நாளை 7-ம் தேதி முடிவுக்கு வருகிறது.
-
கர்நாடகாவில் ஹெலிகாப்டர் உற்பத்தி தொழிற்சாலை: பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்
05 Feb 2023பெங்களூரு : கர்நாடகாவிற்கு இன்று வருகை தரும் பிரதமர் மோடி துமகூருவில் எச்.ஏ.எல்.
-
பொதுத்தேர்வு எழுதவுள்ள 11-ம் வகுப்பு மாணவர்கள் 10-ம் தேதிக்குள் விவரங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம் : தேர்வுத்துறை அறிவிப்பு
05 Feb 2023சென்னை : பொதுத்தேர்வு எழுதவுள்ள 11-ம் வகுப்பு மாணவர்கள் வரும் 10-ம் தேதிக்குள் தங்களது விவரங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: மகாபாரத கிருஷ்ணரோடு ஸ்டாலினை ஒப்பிட்டு கே.எஸ்.அழகிரி கூறிய உவமை
05 Feb 2023கும்பகோணம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் மகாபாரதத்தில் கிருஷ்ணர் தேரை ஓட்டி, மாபெரும் வெற்றியை போர்க்களத்தில் கொடுத்தது போல், அவர் எங்களுக்குக் கொடுத்து கொண்டிருக்கின்றார் எ
-
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப் காலமானார்
05 Feb 2023இஸ்லமபாத் : பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப் காலமானார். அவருக்கு வயது 79.
-
சுப்ரீம் கோர்ட்டுக்கு கொலிஜியம் பரிந்துரைத்த 5 புதிய நீதிபதிகள் இன்று பதவி ஏற்பு : தலைமை நீதிபதி பதவிபிரமாணம் செய்து வைக்கிறார்
05 Feb 2023புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட்டுக்கு கொலிஜியம் பரிந்துரைத்த 5 நீதிபதிகளுக்கு ஒன்றிய அரசு நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது.
-
காற்றில் கலந்தது கானக்குயில்: 30 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதைக்கு பின் வாணி ஜெயராம் உடல் தகனம்
05 Feb 2023சென்னை : மறைந்த பிரபல பின்னணி பாடகர் வாணி ஜெயராம் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதை அளிக்கப்பட்டது.
-
கூட்டு பாலியல் வன்கொடுமை: அந்தமான் முன்னாள் தலைமை செயலாளர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்
05 Feb 2023போர்ட் பிளேயர் : கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் அந்தமான் முன்னாள் தலைமை செயலாளர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
குஜராத்தின் மோா்பி பால விபத்து: 9 பேரின் ஜாமீன் மனு நிராகரிப்பு
05 Feb 2023காந்திநகர் : குஜராத்தின் மோர்பியில் நிகழ்ந்த பால விபத்தில் கைதான 9 பேரின் ஜாமின் மனுக்களை கோர்ட் நிராகரித்து விட்டது.
-
5 ஆண்டுகளில் 5 லட்சம் வேலைவாய்ப்புகள் : மேகாலயா முதல்வர் தேர்தல் வாக்குறுதி
05 Feb 2023ஷில்லாங் : தேசிய மக்கள் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 5 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று மேகாலயா முதல்வர் வாக்குறுதி அளித்துள்ளார
-
நிதி மோசடி வழக்கு: ராகுல் காந்தியின் நண்பரிடம் அமலாக்கத்துறை விசாரணை
05 Feb 2023புதுடெல்லி : நிதி மோசடி வழக்கு தொடர்பாக ராகுல் காந்தியின் நண்பரிடம் அமலாக்க துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.
-
உளவு பலூனை சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா : சீனா கண்டனம்
05 Feb 2023வாஷிங்டன் : அட்லாண்டிக் பெருங்கடலின் மீது பறந்த சீன உளவு பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது. இதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
குடிபோதையில் மனைவி மீது தாக்குதல்: கிரிக்கெட் வீரர் காம்ப்ளிக்கு நேரில் ஆஜராக பாந்த்ரா போலீஸ் நோட்டீஸ்
05 Feb 2023மும்பை : குடிபோதையில் மனைவியை தாக்கிய புகாரில் கிரிக்கெட் வீரர் காம்ப்ளி நேரில் விசாரணைக்கு ஆஜராகும்படி பாந்த்ரா போலீஸ் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
-
இன்று முதல் 9-ம் தேதி வரை தமிழகத்தில் வறண்ட வானிலை : ஆய்வு மையம் தகவல்
05 Feb 2023சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 9-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
குஜராத் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் டீலக்ஸ் ஏ.சி. சுற்றுலா ரயில் : இந்தியன் ரயில்வே அறிமுகம்
05 Feb 2023புதுடெல்லி : குஜராத் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்தியன் ரயில்வே, டீலக்ஸ் ஏ.சி. சுற்றுலா ரயிலை அறிமுகம் செய்கிறது.
-
ராணுவம் பற்றி அவதூறு பரப்பினால் 5 ஆண்டு சிறை : பாகிஸ்தான் அரசு அறிவிப்பு
05 Feb 2023இஸ்லாமாபாத் : ராணுவம் பற்றி அவதூறு பரப்பினால் 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்படும் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
-
அதிகாரபூர்வ வேட்பாளரை கட்சியின் பொதுக்குழுதான் முடிவு செய்ய வேண்டும் : ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை
05 Feb 2023சென்னை : அதிகாரபூர்வ வேட்பாளரை பொதுக்குழுதான் முடிவு செய்ய வேண்டும் என்று ஓ. பன்னீ்ர் செல்வம் தெரிவித்துள்ளார்.
-
டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் : ஆய்வுக்குப் பின் அமைச்சர் அறிவிப்பு
05 Feb 2023தஞ்சாவூர் : டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று ஆய்வுக்குப் பின் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
-
ரேசன் கடைகளில் கோதுமை தட்டுப்பாடு விரைவில் நீங்கும் : கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்
05 Feb 2023சென்னை : ரேசன் கடைகளில் கோதுமை தட்டுப்பாடு விரைவில் நீங்கும் என்று கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
-
வரும் 18-ம் தேதி கூடுகிறது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்
05 Feb 2023புதுடெல்லி : ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 48-வது கூட்டம் கடந்த ஆண்டு டிசம்பா் 17-ம் தேதி நடைபெற்றது.