தென்கிழக்கு நிலக்கரி வயல்கள் நிறுவனத்தில் உள்ள 'முழு நேர ஆலோசகர்' பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணையை 3 நீதிபதிகள் கொண்ட சுப்ரீம் கோர்ட் அமர்வு இன்று ஒத்திவைத்துள்ளது. மேலும் இந்த வழக்கை இந்த வாரத்தில் முடிக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளது.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஜூன் 23-ம் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எந்த முடிவுகளும் எடுக்கப்படாமல் பொதுக்குழு நிறைவடைந்தது. பின்னர், ஜூலை 11-ந்தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் பதவி கலைக்கப்பட்டது. இதையடுத்து, அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, அ.தி.மு.க. பொதுக்குழு செல்லாது எனவும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த சென்னை ஐகோர்ட் 2 நீதிபதிகள் அமர்வு பொதுக்குழு செல்லும் என்றும் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்றும் உத்தரவிட்டது.
பொதுக்குழு செல்லும் என்று ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணையில்., கட்சிக்கு இடைக்கால பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட்டுவிட்டாரா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அப்போது எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக செயல்பட்டு வருகிறார் என்று இ.பி.எஸ். தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. மேலும் ஜூலை 11 அன்று பொதுக்குழுவில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து இதுவரை பன்னீர்செல்வம் தரப்பு மனு தாக்கல் செய்யவில்லை என்றும் இ.பி.எஸ். தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது ஒருங்கிணைப்பாளர் , இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் செல்லாது என்றால் அனைத்து பதவிகளும் செல்லாது என்று ஓ.பி.எஸ். தரப்பில் வாதம் செய்யப்பட்டது. கழகம் என்றால் என்ன என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகளுக்கு, கழகம் என்றால் கட்சி என்று பொருள் என்று மூத்த வழக்கறிஞர் சி.ஏ.சுந்தரம் விளக்கம் அளித்தார். பின்னர் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கின் விசாரணையை இந்த வாரமே முடிக்க விரும்புகிறோம் என்று தெரிவித்தனர். இதையடுத்து, அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு அடுத்த விசாரணையை இன்று மதியம் 2 மணிக்கு ஒத்திவைத்தது நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கருவேப்பிலை குழம்பு.![]() 1 day 1 hour ago |
முருங்கைப்பூ பாயாசம்.![]() 5 days 5 hours ago |
அகத்திக்கீரை சாம்பார்![]() 1 week 1 day ago |
-
டி-20 கிரிக்கெட் தரவரிசை: அதிக புள்ளிகளை பெற்ற 2-வது வீரராக சூர்யகுமார்
01 Feb 2023துபாய் : தற்போது வெளியிடப்பட்ட டி20 தரவரிசையிலும் சூர்யகுமார் யாதவ் முதலிடத்தைப் பிடித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 47 ரன்கள் எடுத்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-02-02-2023.
02 Feb 2023 -
ஆஸி.க்கு எதிரான டெஸ்ட்: ஷ்ரேயாஸ் வெளியே..! சூர்யகுமார் உள்ளே..?
01 Feb 2023நாக்பூர் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து காயம் காரணமாக ஷ்ரேயாஸ் ஐய்யர் விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
இஷான் கிஷன், அர்ஷ்தீப்பை பாராட்டிய அனில் கும்ப்ளே
01 Feb 2023பெங்களூரு : இந்திய இளம் வீரர்களான இஷான் கிஷன், அர்ஷ்தீப் சிங் ஆகிய இருவரையும் பாராட்டிப் பேசியுள்ளார் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே.
-
பட்ஜெட்டில் இ-கோர்ட்டுக்கு ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கீடு : மத்திய சட்ட அமைச்சர் வரவேற்பு
01 Feb 2023புதுடெல்லி : ரூ.7 ஆயிரம் கோடி இ-கோர்ட்திட்ட ஒதுக்கீடு நீதி வழங்கல் நடைமுறையை மேம்படுத்தும் என மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ பேசியுள்ளார்.
-
எனது இன்ஸ்டா பக்கம் முடங்கியது: மெஸ்ஸி
01 Feb 2023அர்ஜென்டினாவின் கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸி. இன்ஸ்டாகிராம் தளத்தில் அதிக ஃபாலோயர்களை பெற்ற உலக பிரபலங்களில் மெஸ்ஸியும் ஒருவர்.
-
ஜம்மு காஷ்மீரில் கடும் பனிச்சரிவு: பனிச்சறுக்கு வீரர்கள் 2 பேர் பலி
01 Feb 2023ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி வெளிநாட்டைச் சேர்ந்த 2 பனிச்சறுக்கு வீரர்கள் உயிரிழந்தனர்.
-
ஸ்காட்லாந்தில் நெருப்பு திருவிழா கோலாகலம் தீப்பந்தம் ஏந்தி குழந்தைகள், பெண்கள் பேரணி
02 Feb 2023லண்டன்: ஸ்காட்லாந்தில் பாரம்பரியமான நெருப்பு திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் தீப்பந்தம் ஏந்த பெண்கள், குழந்தைகள் பேரணியாக சென்றனர்.
-
பெஷாவர் தாக்குதல் சம்பவத்தில் போலீஸ் சீருடை, ஹெல்மட் அணிந்து வந்த பயங்கரவாதி
02 Feb 2023பெஷாவர்: 100 பேரை பலி கொண்ட பெஷாவர் தாக்குதலில் தற்கொலைப்படை பயங்கரவாதி போலீஸ் சீருடை, ஹெல்மட் அணிந்து வந்தது தெரியவந்துள்ளது.
-
பாகிஸ்தான் முன்னாள் உள்துறை அமைச்சர் கைது
02 Feb 2023கராச்சி: பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் தீவிர ஆதரவாளரான முன்னாள் உள்துறை அமைச்சர் ஷேக் ரசீது அகமது போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார்.
-
அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளி நிக்கி ஹாலே போட்டி?
02 Feb 2023வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலே போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
கரன்சி நோட்டுகளில் சார்லஸின் உருவம் நீக்கம்: ஆஸ்திரேலிய அரசு முடிவு
02 Feb 2023கான்பெர்ரா: ஆஸ்திரேலிய கரன்சி நோட்டுகளில் இருந்து இங்கிலாந்து அரசர் மூன்றாம் சார்லசின் உருவம் நீக்குவது என அந்நாட்டு அரசு முடிவு செய்து உள்ளது.
-
புதுவை சட்டசபை இன்று கூடுகிறது சபாநாயகர் தொடங்கி வைக்கிறார்
02 Feb 2023புதுச்சேரி: புதுவை சட்டசபையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு 22-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. சட்டசபையை 6 மாதத்திற்கு ஒருமுறை கூட்ட வேண்டும் என்பது விதி.
-
பட்டா மாறுதல் போன்றவற்றுக்கு மக்கள் அலைக்கழிக்கப்படுவதை தடுக்க வேண்டும் கலெக்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
02 Feb 2023வேலூர்: பட்டா மாறுதல் உள்ளிட்டவற்றுக்கு மக்கள் அலைக்கழிக்கப்படுவதை மாவட்ட கலெக்டர்கள் தடுக்க வேண்டும் என வேலூரில் நேற்று ஆய்வு மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்
-
ஜோபைடனின் கடற்கரை இல்லத்தில் மீண்டும் எப்.பி.ஐ. அதிகாரிகள் சோதனை
02 Feb 2023வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோபைடனின் கடற்கரை இல்லத்தில் நேற்று எப்.பி.ஐ. அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தினர்.
-
நலத்திட்ட உதவி வழங்கும் விழா: வரும் 5-ம் தேதி அமைச்சர் உதயநிதி மதுரை வருகை
02 Feb 2023மதுரை: மதுரையில் வரும் 6-ம் தேதி தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறவுள்ளது.
-
காலை சிற்றுண்டி: மாணவர்களுக்கு உணவு பரிமாறிய முதல்வர் ஸ்டாலின்
02 Feb 2023வேலூர்: வேலூரில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சிற்றுண்டி சாப்பிட்டு உணவின் தரத்தை ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தொடர்ந்து, மாணவர்களுக்கு உணவு பரிமாறினார்.
-
ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக சசிகலாவை உறுதியாக சந்திப்பேன் மதுரையில் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
02 Feb 2023மதுரை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக சசிகலாவை உறுதியாக சந்திப்பேன் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
-
வேலைவாய்ப்பக பதிவுதாரர்கள் 67 லட்சம் பேர்: தமிழக அரசு தகவல்
02 Feb 2023சென்னை: தமிழகத்தில் வேலைவாய்ப்பகப் பதிவுதாரா்களின் எண்ணிக்கை 67.75 லட்சமாக உள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
குழந்தைக்கு பெயர் சூட்டு விழா: ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து அழைப்பிதழ் கொடுத்தார் தீபா
02 Feb 2023சென்னை: மகள் பெயர் சூட்டு விழாவிற்கு வரும்படி ஓ. பன்னீர் செல்வத்திற்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அழைப்பிதழ் கொடுத்தார்.
-
வேலூர் சத்துவாச்சாரியில் சுகாதார மைய கட்டுமான பணிகள் மற்றும் காலை உணவு திட்டம் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்தார்
02 Feb 2023வேலூர்: சத்துவாச்சாரியில் சுகாதார நல மைய கட்டடத்திற்கான கட்டுமானப் பணிகள் மற்றும் வேலூர் அரசு ஆதிதிராவிட நலப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் முதலமைச்சரின் கா
-
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கு: கைதான 7 பேருக்கு மீண்டும் ஒரு வாரம் போலீஸ் காவல் பூந்தமல்லி கோர்ட்டு உத்தரவு
02 Feb 2023சென்னை: கோவையில் கார் சிலிண்டர் வெடித்த வழக்கில் கைதானவர்களில் 7 பேரை மீண்டும் 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க பூந்தமல்லி கோர்ட்டு அனுமதி அளித்து உத்தரவிட்டு உள
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ஓ.பன்னீர்செல்வம் இன்று பிரசாரம்
02 Feb 2023சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் செந்தில் முருகனை ஆதரித்து இன்று பிரச்சாரம் மேற்கொள்ளவிருப்பதாக ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
-
ஆசிரியர் தகுதி முதல்கட்ட தேர்வு: தமிழகம் முழுவதும் இன்று ஆரம்பம்
02 Feb 2023சென்னை: தமிழகம் முழுவதும் இன்று அனைத்து மாவட்டங்களிலும் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் இரண்டு தொடங்க உள்ளது.
-
கருணாநிதியின் நினைவிடத்தில் வைக்க கோரி முதல்வர் ஸ்டாலினிடம் பேனா வழங்கிய சிறுமி
02 Feb 2023சென்னை: கருணாநிதியின் நினைவிடத்தில் வைக்க கோரி முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பேனா வழங்கிய சிறுமியிடம் அவரது ஆசையை நிறைவேற்றுவதாக முதல்வர் உறுதியளித்தார்.