முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.சி.சி. டி-20 கனவு அணி: ஆடவர் அணியில் 3 இந்திய வீரர்கள் : மகளிர் அணியில் 4 வீராங்கனைகள்

திங்கட்கிழமை, 23 ஜனவரி 2023      விளையாட்டு
Women s-team 2023 01 23

Source: provided

துபாய் : 2022-ம் ஆண்டு ஆடவர் டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடிய வீரர்களைக் கொண்டு கனவு அணி ஒன்றை அறிவித்துள்ளது ஐ.சி.சி. மகளிர் அணியில் 4 வீராங்கனைகள் இடம்பிடித்துள்ளனர்.

3 வீரர்கள் மட்டும்...

ஜாஸ் பட்லர் தலைமையிலான இந்த அணியில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், பாண்டியா என மூன்று இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள். 11 பேரில் இந்திய அணி மட்டுமே அதிகபட்சமாக மூன்று வீரர்களைக் கொண்டுள்ளது.

ஆடவர் டி-20 அணி...

2022-ம் ஆண்டுக்கான ஆடவர் ஐ.சி.சி. டி20 அணி - 1. ஜாஸ் பட்லர் (இங்கிலாந்து), 2. ரிஸ்வான் (பாகிஸ்தான்), ,3. விராட் கோலி (இந்தியா), 4. சூர்யகுமார் யாதவ் (இந்தியா), 5. கிளென் பிளிப்ஸ் (நியூசிலாந்து), 6. சிகந்தர் ராஸா (ஜிம்பாப்வே), 7. பாண்டியா (இந்தியா), 8. சாம் கரண் (இங்கிலாந்து), 9. ஹசரங்கா (இலங்கை),10. ஹாரிஸ் ராஃப் (பாகிஸ்தான்), 11. ஜோஷ் லிட்டில் (அயர்லாந்து).

மகளிர் டி-20 அணி...

2022-ம் ஆண்டுக்கான ஐ.சி.சி. மகளிர் டி20 அணி - 1. ஸ்மிருதி மந்தனா (இந்தியா), 2. பெத் மூனி, ஆஸ்திரேலியா), 3. சோபி டெவின் (நியூசிலாந்து), 4. ஆஷ் கார்ட்னர் (ஆஸ்திரேலியா), 5. தஹ்லியா மெக்ராத் (ஆஸ்திரேலியா), 6. நிடா தர் (பாகிஸ்தான்), 7. தீப்தி சர்மா (இந்தியா), 8. ரிச்சா கோஷ் (இந்தியா), 9. சோபி எக்லஸ்டோன் (இங்கிலாந்து), 10. இனோகா ரணவீரா (இலங்கை), 11. ரேணுகா சிங் (இந்தியா).

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து