Idhayam Matrimony

மியான்மரில் 22 பேர் சுட்டுக் கொலை: இனப் படுகொலையா என சந்தேகம்

சனிக்கிழமை, 18 மார்ச் 2023      உலகம்
Myanmar 2023 03 18

மியான்மரில் மடாலாயத்தின் அருகே 22 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து மியான்மர் ராணுவ செய்தித் தொடர்பாளர் சா மின் துன் கூறும் போது, 

நான்நியண்ட் கிராமத்து மக்களுக்கு மியான்மர் ராணுவம் பாதுகாப்பு அளிக்கும் போது, கரேனி நேஷனலிட்டிஸ் டிபென்ஸ் போர்ஸ் மற்றும் கிளர்ச்சிக் குழுக்கள் அங்கு நுழைந்தனர். பின்னர் கிளர்ச்சியாளர்கள் மடாலயத்தின் அருகே இருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இதில் சம்பவ இடத்திலே 22 பேர் பலியாகினர். பலியானவர்களில் 3 பேர் புத்த பிச்சுகள்ம் என்று தெரிவித்தார்.

இதுகுறித்த கூடுதல் தகவல் எதையும் மியான்மர் ராணுவம் வெளியிடவில்லை. எனினும், இது இனப் படுகொலை நடவடிக்கையாக இருக்கும் என்று மியான்மர் ராணுவம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், கிளர்ச்சியாளர்கள் அமைப்பு இந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களுக்கு பொறுப்பேற்கவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து