முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிய அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார் எடப்பாடி : போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு

சனிக்கிழமை, 18 மார்ச் 2023      தமிழகம்
EPS 2023 03 18

Source: provided

சென்னை : அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட எடப்பாடி பழனிசாமி நேற்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். 

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். 

கடந்த 9 மாதங்களாக எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளராக இருந்து வருகிறார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவி  என்பது கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பது கட்சியின் சட்டவிதியாகும். 

இதை தொடர்ந்து பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் 26-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பு மனுதாக்கல் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இன்று  (19-ம் தேதி) மாலை 3 மணி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலை நடத்தும் அதிகாரிகளாக பொள்ளாச்சி ஜெயராமன், நத்தம் விசுவநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.வினர் ரூ. 25 ஆயிரம் கட்டணம் செலுத்தி விருப்ப மனுக்களை பெற்று பூர்த்தி செய்து தலைமை கழகத்தில் வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதைத் தொடர்ந்து ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் எடப்பாடி பழனிசாமி நேற்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். தேர்தல் அதிகாரிகள் இருவரும் அவரது வேட்பு மனுவை பெற்றுக்கொண்டனர். 

அவரது வேட்பு மனுவை முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ. செங்கோட்டையன், செல்லூர்  கே. ராஜூ, ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்ட 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிந்தனர். 

இதையொட்டி அ.தி.மு.க. அலுவலகத்தில் ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டனர். எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்ய வந்த போது அவரை வாழ்த்தி தொண்டர்கள் கோஷமிட்டனர். முக்கிய நிர்வாகிகள் பூங்கொத்துகளை கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். 

பொதுச்செயலாளர் தேர்தலுக்கான முதல் நாள் விருப்பமனு தாக்கல் நிறைவடைந்துள்ளது. முதல் நாளில் காலை 10 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை மொத்தம் 38 பேர் விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர். இதில் எடப்பாடி பழனிசாமி அல்லாமல் 37 பேர் எடப்பாடி பழனிசாமி பெயரிலேயே விருப்பமனு தாக்கல்செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இன்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பிலேயே உறுப்பினர்கள் பலர் விருப்பமனு தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இன்று பிற்பகல் 3 மணிவரை விருப்பமனு தாக்கல் செய்ய அவகாசம் உள்ளது.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வேட்புமனு பரிசீலனை நாளை  (20-ம் தேதி) நடைபெறுகிறது. வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கு 21-ம் தேதி கடைசி நாளாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி மட்டுமே பொதுச்செயலாளர் தேர்தலுக்கு வேட்பு மனுவை தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேறு யாரும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யாத நிலையில் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க. சட்டவிதியை குறிப்பிட்டு அதன்படியே பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அ.தி.மு.க. சட்ட விதி 20அ பிரிவு 1(ஏ) (பி) (சி) ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றி தேர்தல் நடத்தப்படுவதாக தேர்தல் அதிகாரிகள் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து