இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் உள்ள 'இளைய ஆலோசகர்' பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட எடப்பாடி பழனிசாமி நேற்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.
கடந்த 9 மாதங்களாக எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளராக இருந்து வருகிறார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவி என்பது கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பது கட்சியின் சட்டவிதியாகும்.
இதை தொடர்ந்து பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் 26-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பு மனுதாக்கல் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இன்று (19-ம் தேதி) மாலை 3 மணி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலை நடத்தும் அதிகாரிகளாக பொள்ளாச்சி ஜெயராமன், நத்தம் விசுவநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.வினர் ரூ. 25 ஆயிரம் கட்டணம் செலுத்தி விருப்ப மனுக்களை பெற்று பூர்த்தி செய்து தலைமை கழகத்தில் வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் எடப்பாடி பழனிசாமி நேற்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். தேர்தல் அதிகாரிகள் இருவரும் அவரது வேட்பு மனுவை பெற்றுக்கொண்டனர்.
அவரது வேட்பு மனுவை முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ. செங்கோட்டையன், செல்லூர் கே. ராஜூ, ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்ட 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிந்தனர்.
இதையொட்டி அ.தி.மு.க. அலுவலகத்தில் ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டனர். எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்ய வந்த போது அவரை வாழ்த்தி தொண்டர்கள் கோஷமிட்டனர். முக்கிய நிர்வாகிகள் பூங்கொத்துகளை கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
பொதுச்செயலாளர் தேர்தலுக்கான முதல் நாள் விருப்பமனு தாக்கல் நிறைவடைந்துள்ளது. முதல் நாளில் காலை 10 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை மொத்தம் 38 பேர் விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர். இதில் எடப்பாடி பழனிசாமி அல்லாமல் 37 பேர் எடப்பாடி பழனிசாமி பெயரிலேயே விருப்பமனு தாக்கல்செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பிலேயே உறுப்பினர்கள் பலர் விருப்பமனு தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இன்று பிற்பகல் 3 மணிவரை விருப்பமனு தாக்கல் செய்ய அவகாசம் உள்ளது.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வேட்புமனு பரிசீலனை நாளை (20-ம் தேதி) நடைபெறுகிறது. வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கு 21-ம் தேதி கடைசி நாளாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி மட்டுமே பொதுச்செயலாளர் தேர்தலுக்கு வேட்பு மனுவை தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேறு யாரும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யாத நிலையில் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க. சட்டவிதியை குறிப்பிட்டு அதன்படியே பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அ.தி.மு.க. சட்ட விதி 20அ பிரிவு 1(ஏ) (பி) (சி) ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றி தேர்தல் நடத்தப்படுவதாக தேர்தல் அதிகாரிகள் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளை கிழங்கு புட்டு![]() 2 days 6 hours ago |
தயிர் உருளைக்கிழங்கு![]() 5 days 5 hours ago |
குடைமிளகாய் பருப்பு மஸ்ரூன்![]() 1 week 2 days ago |
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரி ஓ.பி.எஸ். தொடர்ந்த வழக்கு : ஐகோர்ட்டில் நாளை விசாரணை
20 Mar 2023சென்னை : அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
-
கண்ணை நம்பாதே விமர்சனம்
20 Mar 2023இரவுக்கு ஆயிரம் கண்கள் என்ற திரில்லர் படத்தின் இயக்குநர் மாறனின் மற்றொரு கிரைம் திரில்லர் படம் தான் கண்ணை நம்பாதே.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-20-03-2023.
20 Mar 2023 -
இம்ரானின் கட்சியை தடை செய்ய சட்ட ஆலோசனை : பாக். உள்துறை அமைச்சர் தகவல்
20 Mar 2023இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இம்ரானின் கட்சியை தடை செய்ய விரைவில் சட்ட ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
செங்களம் பர்ஸ்ட் லுக் வெளீயீடு
20 Mar 2023செங்களம் எனும் இணைய தொடரின் பர்ஸ்ட் லுக் மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. எஸ். ஆர்.
-
குடும்ப அட்டைதாரர்கள் 2.2 கோடி பேருக்கும் ரூ. ஆயிரம் உரிமை தொகை வழங்க அண்ணாமலை வலியுறுத்தல்
20 Mar 2023சென்னை : குடும்ப அட்டைதாரர்கள் 2.2 கோடி பேருக்கும் ஆயிரம் உரிமைத் தொகை வழங்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
-
ஏப்ரல் 7-ல் வெளியாகிறது ஆகஸ்ட் 16, 1947
20 Mar 2023ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் என்.எஸ்.பொன்குமார் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடித்துள்ள படம் ஆகஸ்ட் 16, 1947.
-
ஷூட் தி குருவி விமர்சனம்
20 Mar 2023மங்களூரில் உள்ள கல்லூரியில் பிரபல ரவுடியான குருவி ராஜன் பற்றி மாணவர்கள் ஆராய்ச்சி செற்கிறார்கள்.
-
80 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் உரிமைத்தொகை திட்டத்தில் பலன் அடைய வாய்ப்பு: அமைச்சர் கீதாஜீவன்
20 Mar 2023சென்னை : உரிமை தொகை திட்டத்தில் 80 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் பலனடைய வாய்ப்புள்ளதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.
-
ராஜா மகள் விமர்சனம்
20 Mar 2023மகளின் ஆசையை நிறைவேற்ற படாத பாடும் ஒரு பாசத்தந்தையின் கதையே இந்த ராஜா மகள். செல்போன் விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடையை நடத்தி வருகிறார் ஆடுகளம் முருகதாஸ்.
-
அனைத்து பெண்களுக்கும் ரூ. ஆயிரம் தருவதுதானே தி.மு.க.வின் வாக்குறுதி : உரிமைத் தொகை குறித்து இ.பி.எஸ். விமர்சனம்
20 Mar 2023சென்னை : தி.மு.க.
-
கோபத்தில் இருந்தேன் - வரலட்சுமி
20 Mar 2023நடிகர் சந்தோஷ் பிரதாப், வரலட்சுமி சரத்குமார், சார்லி உள்ளிட்ட பலர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள படம் கொன்றால் பாவம்.
-
கோஸ்டி விமர்சனம்
20 Mar 2023முழுக்க நகைச்சுவைக்கு முக்கியம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் கோஸ்டி.
-
கப்ஜா விமர்சனம்
20 Mar 2023விமானப்படை வீரரான உபேந்திரா சந்தர்ப்பவசத்தால் மிகப்பெரிய
-
தமிழகத்தில் முதல் தலைமுறை தொழில்முனைவோருக்கு 144 கோடி ரூபாய் மானியம்: பட்ஜெட்டில் நிதியமைச்சர் அறிவிப்பு
20 Mar 2023தமிழகத்தில் முதல் தலைமுறை தொழில்முனைவோர் தொழில் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு மானியம் அளிப்பதற்காக வரும் நிதி ஆண்டில் ரூ.144 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக நித
-
டி3 விமர்சனம்
20 Mar 2023மருத்துவர் ஒருவர் செய்யும் சட்ட விரோதமான செயல்களை புலனாய்வு செய்து வெளிக்கொண்டு வரும் ஒரு காவல் ஆய்வாளரின் அனுபவம் தான் இந்த டி3 படக்கதை.
-
தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம் : பட்ஜெட் உரையில் அறிவிப்பு
20 Mar 2023சென்னை : சோழர்களின் பெருமையை பறைசாற்றும் வகையில், தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டில் அறிவித்தார்.
-
சர்வதேச பயங்கரவாத குறியீட்டு பட்டியலில் பாகிஸ்தான் முன்னிலை
20 Mar 2023கான்பெரா : சர்வதேச பயங்கரவாத குறியீட்டு பட்டியலில் அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகியவை முன்னிலையில் உள்ளன.
-
குடிமகான் விமர்சனம்
20 Mar 2023தற்கால நொறுக்குத்தீனிகளின் ஆபத்துகளை உணர்த்தும் படம் இந்த குடிமகான். நாயகன் விஜய்சிவன் நொறுக்குத்தீனிகள் தின்றாலே போதையாகிவிடுவார்.
-
ஓய்வூதிய மசோதாவுக்கு எதிர்ப்பு: பிரான்சில் தூய்மை பணியாளர்களின் போராட்டத்தால் குப்பைகள் தேக்கம்
20 Mar 2023பாரீஸ் : பிரான்சில் தூய்மை பணியாளர்கள் கடந்த சில தினங்களாக தங்களது பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
-
வரலாற்று சிறப்புமிக்க நிதிநிலை அறிக்கை : அமைச்சர் செந்தில் பாலாஜி கருத்து
20 Mar 2023சென்னை : தமிழக பட்ஜெட் வரலாற்று சிறப்புமிக்கது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
-
ரஜினி மகள் வீட்டில் 60 சவரன் நகை மாயம் : போலீசார் தீவிர விசாரண
20 Mar 2023சென்னை : நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா, வீட்டு லாக்கரில் இருந்த 60 சவரன் நகை, வைரம், நவரத்தின கற்கள் மாயமானதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
-
தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்: பட்ஜெட்டில் ரூ.22,562 கோடி ஒதுக்கீடு
20 Mar 2023மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், 2023-24 ஆம் ஆண்டில், 35 கோடி வேலை நாட்கள் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
-
லண்டன் இந்திய தூதரகத்தில் தாக்குதல் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்களால் தேசியக்கொடி அவமதிப்பு
20 Mar 2023லண்டன் : லண்டன் இந்திய தூதரகத்தில் கற்களை வீசி தாக்குதல் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்திய தேசியக் கொடியை கீழே இறக்கி விட்டு காலிஸ்தான் கொடியை பறக்க விட
-
2022-ல் நடந்த தேர்தலை ரத்து செய்தது குவைத் நீதிமன்றம்
20 Mar 2023துபாய் : குவைத் நாட்டில் கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலை ரத்து செய்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.