Idhayam Matrimony

பி.எப்.ஐ. அமைப்பினர் 105 பேர் மீது என்.ஐ.ஏ. குற்றப்பத்திரிகை

சனிக்கிழமை, 18 மார்ச் 2023      இந்தியா
NIA 2023 01 21

Source: provided

புதுடில்லி : 100-க்கும் மேற்பட்ட பி.எப்.ஐ. அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பான பி.எப்.ஐ., எனப்படும் 'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' என்ற அமைப்பு சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையதாக புகார் கூறப்பட்டுள்ளது.

இந்த அமைப்புகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஐந்தாண்டு தடை விதித்துள்ள நிலையில், நேற்று பி.எப்.ஐ., அமைப்பைச் சேர்ந்த 105 பேர் மீது என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு ஏஜென்சி போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து