முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல்: இ.பி.எஸ். பெயரில் 221 பேர் விருப்ப மனு

ஞாயிற்றுக்கிழமை, 19 மார்ச் 2023      தமிழகம்
ADMK 20221 02 02

Source: provided

சென்னை : அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று நிறைவு பெற்றது. மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடக்கிறது. இதில் 221 பேர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். 

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் வரும் 26-ம் தேதி நடைபெறும் என்றும் போட்டியிட விரும்பமுள்ளோர் 17 மற்றும் 18-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், 20-ம் தேதி (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு வேட்புமனு பரிசீலனை நடைபெறும். 21-ம் தேதி (செவ்வாய்கிழமை) மாலை 3 மணி வரை வேட்புமனுக்களை திரும்பப் பெறலாம் என்றும், தேர்தலில் பதிவான வாக்குகள் 27-ம் தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என்று கட்சித் தலைமை அறிவித்திருந்தது. 

இதனை தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் நேற்று மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது. இந்த தேர்தலில் போட்டியிட எடப்பாடி பழனிசாமி மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில் வேறு யாரும் பொதுச்செயலாளர் பதவிக்கு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. 

அதேவேளை, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக 221 பேர் விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர். வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து