முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுச்சேரியில் மீனவர்களுக்கான நிவாரணம் ரூ. 6,500 ஆக உயர்வு கவர்னர் தமிழிசை ஒப்புதல்

வியாழக்கிழமை, 23 மார்ச் 2023      இந்தியா
Tamilisai-2023-03-23

Source: provided

புதுச்சேரி: மீன்பிடித் தடைக்கால நிவாரணம் மற்றும் விடுமுறைக் கால நிதி உதவியை உயர்த்தி வழங்குவதற்கான கோப்பிற்கு துணை நிலை கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.

புதுச்சேரி துணைநிலை கவர்னர் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

புதுச்சேரி மீன் வளம், மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மீனவர்களுக்கான விடுமுறை கால நிதிஉதவி மற்றும் இயற்கை பேரிடர் கால நிவாரண உதவித் திட்டத்தின் கீழ் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த மீனவர்களுக்கு மீன்பிடித் தடைக்கால நிவாரணம் மற்றும் விடுமுறைக் கால நிதி உதவியை உயர்த்தி வழங்குவதற்கான கோப்பிற்கு துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.

அதன்படி, மீன்பிடித் தடைக்கால நிவாரணம் ரூ.5,500-ல் இருந்து ரூ.6,500 ஆகவும், விடுமுறைக்கால நிதியுதவி ரூ.2,500-ல் இருந்து ரூ.3,000 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து