எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
![23-Ram-58-1](/sites/default/files/styles/thumb-890-395/public/field/image/2023/03/23/23-Ram-58-1.jpg?itok=PHKoq3dg)
Source: provided
ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் திட்டத்தில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளார் நட்சத்திர வீரர் ஷ்ரேயாஸ் ஐயர். பார்டர் கவாஸ்கர் கோப்பையின் போது முதுகுவலியால் பாதிக்கப்பட்ட அவர், பாதியிலேயே வெளியேறினார். மேலும் ஆஸ்திரேலியாவுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்தும் விலகினார். இதனையடுத்து பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சைப்பெற்று வருகிறார்.
இந்நிலையில் ஷ்ரேயாஸ் ஐயர் தனது முதுகுவலி பிரச்சினைக்காக லண்டன் புறப்படவுள்ளார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளது. அதன்பிறகு ஷ்ரேயாஸ் ஐயர் குணமடைந்து பழைய ஃபார்முக்கு வருவதற்கு குறைந்தது 4 - 5 மாதங்கள் வரை ஆகும் எனக்கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் ஐபிஎல் தொடர்களில் இருந்து விலகுவது உறுதியாகியுள்ளது.
________________
ஆசியாவில் 10,000 ரன்களை
கடந்த வீரர்: ரோகித் சாதனை
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 269 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 47 ரன்கள் எடுத்தார். அடுத்து ஆடிய இந்தியா 248 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. விராட் கோலி அரை சதமடித்து 54 ரன்னில் அவுட்டானார்.
இதையடுத்து, ஆஸ்திரேலியா அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.இந்தப் போட்டியில், ரோகித் சர்மா 17 பந்துகளில் 2 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் ஆசியாவில் 10,000 ரன்களை கடந்த 8-வது இந்தியர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றார்.
________________
பிராவோவுக்கு விசில் அடிக்க
கற்றுக்கொடுத்த தல டோனி
இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடர் வருகிற 31-ந் தேதி கோலாகலமாக தொடங்குகிறது. இந்த தொடரின் முதல் போட்டியாக குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகிறது. இந்த போட்டி அகமதாபாத்தில் நடைபெறுகிறது. இதனால் இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சமூக வலைதளங்களில் அணி வீரர்களின் பயிற்சி செய்யும் வீடியோ மற்றும் புகைப்படம் வெளியீட்டு வருவது வழக்கமாக வைத்துள்ளனர். இந்நிலையில் நம்ம ஊரு சென்னைக்கு விசில் போடுங்க பாடலுக்கு அணியின் கேப்டனான எம்எஸ் டோனி பந்து வீச்சு பயிற்சியாளரான பிராவோவுக்கு விசில் அடிக்க கற்றுக் கொடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர்.
________________
மின்னல் வேகத்தில்
ஸ்டம்புகளை தகர்த்த டோனி!
இந்திய கிரிக்கெட் அணியின் மறக்க முடியாத வெற்றிகளில் ஒன்றுதான் கடந்த 2016 டி20 உலகக் கோப்பையில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான போட்டி. அந்தப் போட்டியின் கடைசி பந்தில் மின்னல் வேகத்தில் சூப்பர் பவர் பெற்ற மின்னல் முரளி போல செயல்பட்டு ஸ்டம்புகளை தகர்த்திருப்பார் டோனி. அதன் மூலம் இந்திய அணி 1 ரன் வித்தியாசத்தில் அசாத்திய வெற்றியை பெற்றிருக்கும். அந்தப் போட்டி 2016 மார்ச் 23-ல் நடைபெற்றிருந்தது.
பெங்களூருவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டோனி தலைமையிலான இந்திய அணி முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்திருக்கும். 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை வங்கதேசம் விரட்டும். 19 ஓவர்களில் அந்த அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்திருக்கும். கடைசி ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 11 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் டோனி இந்திய அணிக்கு வெற்றியை தேடி தந்திருந்தார்.
________________
ஒருநாள் தரவரிசை பட்டியல்:
இந்திய அணிக்கு சறுக்கல்
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 269 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து ஆடிய இந்தியா 248 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதன்மூலம் ஆஸ்திரேலியா அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் 3-வது ஒருநாள் போட்டியை வென்றதுடன் 2-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.
இதற்கிடையே, 3-வது ஒருநாள் போட்டி தொடங்கும் முன், ஒருநாள் தரவரிசையில் இந்திய அணி 114 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், ஆஸ்திரேலியா அணி 112 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் இருந்தன. இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான தொடரை வென்றதால் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் 113.286 புள்ளிகள் பெற்று ஆஸ்திரேலியா அணி முதலிடத்திற்கு முன்னேறியது. 112.638 புள்ளிகள் பெற்று இந்திய அணி இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 3-வது இடத்தில் நியூசிலாந்து நீடிக்கிறது.
________________
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
முக்கோண உருளைக்கிழங்கு நக்கெட்ஸ்![]() 2 days 18 hours ago |
கடாய் பன்னீர்![]() 6 days 21 hours ago |
சூப்பர் ஸ்நாக்ஸ்![]() 1 week 2 days ago |
-
டி-20 தொடர் இன்று ஆரம்பம்: இந்தியா-இலங்கை அணிகள் முதல் போட்டியில் மோதல்
26 Jul 2024பல்லகெலே : டி-20 தொடர் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்தியா-இலங்கை அணிகள் முதல் போட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றன.
-
கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் நீர்திறப்பு வினாடிக்கு 1.20 லட்சம் கன அடியாக உயர்வு: கிடுகிடுவென அதிகரிக்கும் மேட்டூர் அணை நீர்மட்டம்
26 Jul 2024மேட்டூர், கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 1.20 லட்சம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
கார்கில் வெற்றி தினம்: முதல்வர் ஸ்டாலின் டுவிட்டரில் பெருமிதம்
26 Jul 2024சென்னை : கார்கில் வெற்றி தினத்தில் வீரர்களின் வீரத்தையும், தியாகத்தையும் போற்றுவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
ஓரவஞ்சனையின் மொத்த வடிவம் மத்திய பா.ஜ.க. அரசு : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்
26 Jul 2024சென்னை : ஓரவஞ்சனையின் மொத்த வடிவம்தான் மத்திய பா.ஜ.க. அரசு என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
-
குற்றவியல் துறை இயக்குநர் நியமனம்: எடப்பாடி கண்டனம்
26 Jul 2024சென்னை : தமிழக குற்றவியல் துறை இயக்குநராக ஹசன் முகமது ஜின்னா நியமனம் செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் சிறந்த அதிபராக வருவார்: ஒபாமா
26 Jul 2024நியூயார்க் : கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் சிறந்த அதிபராக வருவார் என்ற முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
-
முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா செல்ல மத்திய அரசு அனுமதி
26 Jul 2024சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு சென்று வர மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.
-
விஷ சாராய பலிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு: வழக்கை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்
26 Jul 2024சென்னை : விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடாக 10 லட்சம் ரூபாயை அரசு வழங்கக்கூடாது எனக்கூறி தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளத
-
டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாட முயற்சிப்பேன் : ஷூப்மன் கில் தகவல்
26 Jul 2024மும்பை : அடுத்து வரும் டி-20 போட்டிகளில் சிறப்பாக விளையாட முயற்சிப்பேன் என்று இந்திய டி-20 அணியின் ஷூப்மன் கில் தெரிவித்துள்ளார்.
-
வங்கக்கடலில் புதிய தாழ்வுப்பகுதி: நீலகிரி, கோவையில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
26 Jul 2024சென்னை : வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
டெல்லியில் தமிழ்நாடு இல்ல புதிய கட்டிடங்கள் : முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
26 Jul 2024சென்னை : டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் ரூ. 257 கோடி மதிப்பில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது.
-
பேரனை பள்ளிக்கு அழைத்து சென்ற நடிகர் ரஜினிகாந்த் : இணையத்தில் புகைப்படங்கள் வைரல்
26 Jul 2024சென்னை : பேரனை பள்ளிக்கு அழைத்துச் சென்ற நடிரக் ரஜினிகாந்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
-
பொருநை அருங்காட்சியக பணி விரைவில் முடிந்து திறக்கப்படும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்பார்ப்பு
26 Jul 2024சென்னை : கீழடி மற்றும் ஒளிரும் திருமலை நாயக்கர் அரண்மனை போல், நெல்லையில் உள்ள பொருநை அருங்காட்சியகத்தை திறக்கும் பணிகளும் விரைவில் முடிக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாக
-
பிரதமர் மோடி தலைமையில் இன்று நிதி ஆயோக் கூட்டம் : எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் புறக்கணிப்பு
26 Jul 2024டெல்லி : பிரதமர் மோடி தலைமையில் இன்று டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை தமிழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்கள் புறக்கணித்துள்ளனர்.
-
தமிழக அரசு போக்குவரத்து கழகம் தனியார் மயம் ஆகாது : போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் உறுதி
26 Jul 2024திருப்பத்தூர் : வெளியாகும் செய்தி முற்றிலும் வதந்தி என தெரிவித்துள்ல போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், தமிழக அரசு போக்குவரத்து கழகம் தனியார் மயம் ஆகாது என்று உறுதிப
-
மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி
26 Jul 2024புதுடெல்லி : பாராளுமன்ற மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் விவாதங்களை கேட்க மறுப்பதாக கூறி நேற்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.
-
தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழா கொடியேற்றம்
26 Jul 2024தூத்துக்குடி : தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற தூய பனிமயமாதா பேராலயத்தின் 442-வது ஆண்டு திருவிழா நேற்று காலை கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
-
காஞ்சிபுரம் மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம், வாக்கெடுப்புக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
26 Jul 2024சென்னை : காஞ்சிபுரம் மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மற்றும் வாக்கெடுப்புக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
-
கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் 628 புலிகள் உயிரிழப்பு: அரசு தகவல்
26 Jul 2024புதுடெல்லி : இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் 628 புலிகள் இயற்கை காரணங்களுக்காகவும், வேட்டையாடுதல் உள்ளிட்ட காரணங்களுக்காகவும் மத்திய சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் கீர்
-
இலங்கை அதிபர் தேர்தல் செப். 21- ல் நடைபெறும் : ஆக. 15 முதல் மனு தாக்கல்: ஆணையம் அறிவிப்பு
26 Jul 2024கொழும்பு : இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 21-ல் நடைபெறும் என்றும் ஆகஸ்ட் 15 முதல் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என்றும் அந்நாட்டு தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அற
-
இன்று ஆடிக்கிருத்திகை: திருத்தணியில் சிறப்பு தரிசன டிக்கெட் விலை ரூ.100 ஆக குறைப்பு: அமைச்சர் சேகர்பாபு
26 Jul 2024சென்னை : இன்று ஆடிக் கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு திருத்தணியில் சிறப்பு தரிசன டிக்கெட் விலை ரூ.
-
அரசுப்பள்ளிகளில் உள்ள சாதி பெயரை நீக்குங்கள் : சென்னை உயர் நீதிமன்றம் கருத்து
26 Jul 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் சாதிப் பெயரைப் பயன்படுத்தக் கூடாது என்றும் அதை நீக்குங்கள் என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்துத் தெரிவித்துள்ளார்.
-
சவுக்கு சங்கர் ஆட்கொணர்வு வழக்கு: விசாரணையில் இருந்து விலகுவதாக ஐகோர்ட் நீதிபதிகள் அறிவிப்பு
26 Jul 2024சென்னை : யூடியூபர் சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதை எதிர்த்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையில் இருந்து விலகுவதாக ஐகோர்ட் நீதிபதி எம்.எஸ்.
-
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா
26 Jul 2024கொழும்பு : ஆசிய கோப்பை அரையிறுதிப் போட்டியில் வங்கதேசத்தை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
-
பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு: தமிழகம் முழுவதும் இன்று காங்கிரசார் போராட்டம்: செல்வப்பெருந்தகை
26 Jul 2024சென்னை : மத்திய அரசின் நிதியை பாரபட்சமாக சில மாநிலங்களுக்கு வழங்கி, தமிழகத்தை வஞ்சிப்பதை கண்டித்து இன்று சனிக்கிழமை தமிழகம் முழுவதும் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்த