எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மதுரை : சென்னை, மும்பை, கொல்கத்தாவில் சுப்ரீம் கோர்ட் கிளை அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.
மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் கட்டப்படவுள்ள கூடுதல் நீதிமன்ற கட்டிடங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் மயிலாடுதுறை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் மற்றும் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் திறப்பு விழாவில் கலந்து கொண்டு முதல்வர் மு.க .ஸ்டாலின் பேசியதாவது,
இன்றைக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளை மதுரையில் அமைந்திருக்கிறது என்றால், அதற்கு அடித்தளமிட்டவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. 1973-ம் ஆண்டு முதல் முயற்சி செய்து, 2000-ம் ஆண்டு அவரது தலைமையில் அடிக்கல் நாட்டி, தென் மாவட்ட மக்களின் கனவை நனவாக்கினார். இன்று அந்த மாபெரும் கட்டிடம் கம்பீரமாக நிற்கிறது.
நீதி நிருவாகம், சுதந்திரமாகவும், நியாயமாகவும் செயல்படுவதற்கு ஏதுவாகவும், பொதுமக்களுக்கு விரைந்து நீதி வழங்குதலை உறுதி செய்யும் வகையிலும், நீதிமன்றங்களுக்குத் தேவையான கட்டிட வசதி, மனித ஆற்றல், பிற உட்கட்டமைப்பு வசதிகளை போதுமான அளவில் ஏற்படுத்திக் கொடுப்பது மிக அவசியம் என்பதை உணர்ந்துள்ள தமிழ்நாடு அரசு, அதற்கு முன்னுரிமை அளித்து, செயல்பட்டு வருகிறது.
இந்த அரசு பதவியேற்ற 2021 மே மாதம் முதல், இன்று வரையில், புதிய நீதிமன்றங்களை அமைக்க தேவையான நீதிபதிகள், அலுவலர்கள் பணியிடங்களை உருவாக்கி 106 கோடியே 77 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
6 மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றங்கள், 12 சார்பு நீதிமன்றங்கள், 7 முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள், 14 மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள், 3 கூடுதல் மாவட்ட நீதிமன்றங்கள், ஒரு கூடுதல் சார்பு நீதிமன்றம் மற்றும் ஒரு மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் உள்ளிட்ட 44 புதிய நீதிமன்றங்களை அமைப்பதற்கு ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.
3 வணிகச் சட்டங்களுக்கான தனி நீதிமன்றங்கள், மாவட்ட நீதிபதி நிலையில், கோயம்புத்தூர், சேலம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அமைப்பதற்கும் ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன. கோயம்புத்தூர், காஞ்சிபுரம், திருவாரூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பட்டியல் இனத்தவர்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்க 4 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் இயங்கி வரும் 160 மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களில், 60 நீதிமன்றங்களை ஒரே கட்டிடத்துக்கு இடமாற்றம் செய்ய ஏதுவாக, 315 கோடி ரூபாய் செலவில் பல்லடுக்கு மாடிகள் கொண்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் கட்டுவதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரியின் கட்டிடத்தை அதன் பாரம்பரியம் சிதையாமல் புதுப்பிக்க 23 கோடி ரூபாய் அரசால் ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
புதியதாக நீதிமன்றக் கட்டிடங்கள் கட்டுதல், குடியிருப்புக் கட்டிடங்கள் கட்டுதல், பழைய நீதிமன்ற கட்டிடங்களைப் பராமரித்தல் ஆகிய பணிகளுக்கு 297 கோடி ரூபாய்க்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. வழக்குரைஞர் நல நிதிக்கு அரசு சார்பில் 8 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளதோடு, வழக்குரைஞர்களுக்கான சேமநல நிதி 7 லட்சம் ரூபாயிலிருந்து 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
புதியதாக பதிவு செய்யப்பட்ட 1000 இளம் வழக்குரைஞர்களுக்கு, ஊக்கத் தொகையாக 3 ஆயிரம் ரூபாய் மாதம்தோறும் வழங்கிட ஒப்பளிப்பு வழங்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு வழக்குரைஞர்களின் எழுத்தர் நலநிதியிலிருந்து 4 லட்சம் ரூபாய், இறந்த வழக்குரைஞர்களின் எழுத்தர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்க ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இப்படி பல்வேறு செயல்களை செய்து வருகிறோம்.
எனவே, நீதித்துறையின் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து சிறப்பாக மேற்கொள்ளும் என்று உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளுக்கு மூன்று வேண்டுகோள், நீதித்துறை தன்னிச்சையாக சட்ட நீதியும் சமூக நீதியும் இணைந்து செயல்பட வேண்டும். சென்னை மும்பை கொல்கத்தாவில் சுப்ரீம் கோர்ட் கிளை அமைக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை ஒன்றிய அரசும், சுப்ரீம் கோர்ட்டும் நிறைவேற்றி தர வேண்டும். ஐகோர்ட்டில் தமிழ் மொழி வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும். சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட் நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி கடைப்பிடிக்க வேண்டும்
எங்களது கோரிக்கைகளை ஒன்றிய அரசும், நீதித் துறையும், உச்ச நீதிமன்றமும் நிறைவேற்றித் தர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். நீதித்துறையானது சுதந்திரமாகவும், தன்னிச்சையாகவும் இயங்கி ஒவ்வொரு சாமனியனின் இறுதி நம்பிக்கையையும் காப்பாற்றட்டும். நீதித்துறையின் செயல்பாடுகள் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும். சட்ட நீதியும், சமூக நீதியும் இணைந்து கிடைக்க நீதித்துறை அமைப்புக்கள் வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கோபி மஞ்சூரியன்![]() 1 day 6 hours ago |
சிம்பிள் சிக்கன் கறி![]() 5 days 5 hours ago |
முட்டை பக்கோடா![]() 1 week 1 day ago |
-
வரும் 7-ம் தேதிக்கு முன்பாக பள்ளிகளை திறக்கக் கூடாது: தமிழக பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தல்
01 Jun 2023சென்னை, தமிழகத்தில் வரும் 7-ம் தேதிக்கு முன்பாக மெட்ரிகுலேஷன் பள்ளிகளை திறக்க கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணத்தின் மூலம் தமிழக தொழில் முதலீட்டுக்கு 1,258 கோடி ரூபாய் கிடைத்தது
31 May 2023சென்னை : முதல்வர் மு.க. ஸ்டாலினின் சிங்கப்பூர், ஜப்பான் சுற்றுப்பயணத்தின் மூலம் தமிழக தொழில் முதலீட்டுக்கு 1,258 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.
-
இந்தியா மதச்சார்பற்ற நாடாக இருப்பதை ஆர்.எஸ்.எஸ். ஏற்றுக்கொள்ளவில்லை கேரள முதல்வர் பினராயி விஜயன் விமர்சனம்
31 May 2023திருவனந்தபுரம், : இந்தியா மதச்சார்பற்ற நாடாக இருப்பதை ஆர்.எஸ்.எஸ். ஏற்றுக்கொள்ளவில்லை என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
-
பாகிஸ்தானில் கடும் உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் : ஐ.நா. சபை மீண்டும் எச்சரிக்கை
31 May 2023இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் வரும் மாதங்களில் கடுமையான உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக ஐ.நா. சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
பால்டிக் நாடுகளின் அதிபராக ஓரின சேர்க்கையாளர் ரின்கெவிக்ஸ் தேர்வு
01 Jun 2023ஹெல்சிங்கி, பால்டிக் நாடுகளின் அதிபராக ரின்கெவிக்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
-
இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் பங்கேற்குமா? - பேச்சுவார்த்தைக்கு தயாராகும் ஐ.சி.சி.
31 May 2023லண்டன் : இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் பங்கேற்குமா என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பெரிய சிக்கல்...
-
உக்ரைனுக்கு மேலும் 300 மில்லியன் டாலர் ராணுவ நிதியுதவி: அமெரிக்கா
01 Jun 2023வாஷிங்டன், உக்ரைனுக்கு மேலும் சுமார் 300 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவிகளை அமெரிக்கா அறிவித்துள்ளது.
-
காவல் துறை அதிகாரிகள் துன்புறுத்தியதாக வழக்கு: சுப்ரீம் கோர்ட்டை நாட வழக்கறிஞருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
31 May 2023சென்னை : வழக்கு விசாரணையின்போது தன்னை அடித்து துன்புறுத்திய காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கில், சுப்ரீம் கோர்ட்டை நாடி நிவா
-
ரோகித் சர்மாவின் சிறப்பு போஸ்டரை வெளியிட்ட ஐ.சி.சி.
31 May 2023வரும் ஜூன் 7-ம் தேதி இந்திய மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட உள்ளன.
-
அமெரிக்காவில் ராகுல் பேசும்போது காலிஸ்தான் ஆதரவாளர்கள் கோஷம்
31 May 2023வாஷிங்டன் : அமெரிக்காவில் ராகுல்காந்தி பேசும் போது காலிஸ்தான் ஆதரவாளர்கள் குறுக்கிட்டு கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 01-06-2023.
01 Jun 2023 -
இந்திய மல்யுத்த வீராங்கனைகள் புகார்: விசாரணை நடத்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி வலியுறுத்தல்
31 May 2023லோசான் : இந்திய மல்யுத்த வீராங்கனைகள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் மீது பாரபட்சமின்றி விசாரணை நடத்த வேண்டும் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி வலியுறுத்தியுள்ளது.
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: தீவிர வலை பயிற்சியில் இந்திய அணி வீரர்கள்
31 May 2023லண்டன், ஜூன் 01-
-
உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தார் எலான் மஸ்க்
01 Jun 2023வாஷிங்டன், அர்னால்ட்டை பின்னுக்கு தள்ளி எலோன் மஸ்க் மீண்டும் உலகின் நம்பர் ஒன் பணக்காரர் என்ற பட்டத்தினைப் பெற்றார்.
-
வடகொரியா அதிபரின் உடல்நிலை பற்றி தென்கொரியா அதிர்ச்சி தகவல்
01 Jun 2023பியோங்கியாங், ஏ.ஐ.
-
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்கள் திடீர் போராட்டம்
31 May 2023செங்கல்பட்டு : செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
-
இந்தியாவில் மக்களை அச்சுறுத்துகிறது பா.ஜ.க. : அமெரிக்காவில் ராகுல் குற்றச்சாட்டு
31 May 2023சான் ஃபிரான்சிஸ்கோ : இந்தியாவில் மக்களை அச்சுறுத்தக்கூடியதாக பா.ஜ.க. அரசு உள்ளது என்று அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
-
ம.தி.மு.க. பொதுச்செயலாளராக மீண்டும் தேர்வானார் வைகோ: அதிகாரபூர்வ அறிவிப்பு நாளை வெளியாகிறது
01 Jun 2023சென்னை, ம.தி.மு.க.வில் 5-வது அமைப்பு தேர்தலில் அக்கட்சியின் பொதுச்செயலாளராக மீண்டும் வைகோ போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
-
மத்திய அரசின் அவசர சட்டத்தை எதிர்க்கக்கோரி முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஆதரவு கோரினார் கெஜ்ரிவால்
01 Jun 2023சென்னை, டெல்லி மாநில அரசின் அதிகாரத்தைப் பறிக்கும் அவசர சட்டத்தை நிராகரிக்க ஆதரவு கோரி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் ஆகியோர் வ
-
சென்னை சி.பி.சி.ஐ.டி. அலுவலக கட்டிடத்தின் மாடியில் தீ விபத்து
01 Jun 2023சென்னை, சென்னையில் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் உள்ள மாடியில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
-
வரும் 20-ம் தேதி அ.ம.மு.க. செயற்குழு கூட்டம்: டிடிவி தினகரன் அறிவிப்பு
01 Jun 2023சென்னை, வரும் 7-ம் தேதி நடைபெறவிருந்த அ.ம.மு.க. செயற்குழு கூட்டம் வரும் 20-ம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
-
கடன் உச்சவரம்பு மசோதா, அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றம்: அதிபர் ஜோ பைடன் கருத்து
01 Jun 2023வாஷிங்டன், கடன் உச்சவரம்பை உயர்த்தும் திருத்த மசோதா மக்களுக்கான நல்ல செய்தி என்றும், செனட் சபையில் இது நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் ஜோபைடன் தெரி
-
புகைபிடிக்காதவர்கள் வசிக்கும் முதல் ஐரோப்பிய நாடாகும் சுவீடன்
01 Jun 2023ஸ்டாக்ஹோம், தினசரி புகைபிடித்தல் சதவீதம் குறைந்து வருவதால், புகைப்பிடிக்காதவர்கள் வசிக்கும் முதல் ஐரோப்பிய நாடாக ஸ்வீடன் மாறுகிறது.
-
புதிய டுவிட்டர் கணக்கை தொடங்கினார் சீமான்
01 Jun 2023சென்னை, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் டுவிட்டர் கணக்கு முடக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து நேற்று அவர் புதிய டுவிட்டர் கணக்கை தொடங்கியுள்ளார்.
-
இறக்குமதி கார் விவகாரத்தில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜூக்கு விதிக்கப்பட்ட அபராதத்திற்கு உயர் நீதிமன்றம் தடை
01 Jun 2023சென்னை, இறக்குமதி கார் விவகாரத்தில் ஹாரிஸ் ஜெயராஜூக்கு விதிக்கப்பட்ட அபராதத்திற்கு சென்னை ஐகோர்ட் இடைக்காலத் தடை விதித்துள்ளது.