முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய பாஸ்போர்ட் பெற ராகுலுக்கு 3 வருடத்திற்கு தடையில்லா சான்று: டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு

வெள்ளிக்கிழமை, 26 மே 2023      இந்தியா
Delhi-High-Court 2023-05-10

புது டெல்லி, புதிய பாஸ்போர்ட் பெற ராகுல் காந்திக்கு 3 வருடத்திற்கு தடையில்லா சான்று வழங்க டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 

பா.ஜ.க.  தலைவர் சுப்பிரமணியசாமி தொடர்ந்த நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கு கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி ஜாமீன் வழங்கப்பட்டது. இதற்கிடையே அவதூறு வழக்கில் தண்டனை பெற்றதால் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. 

இதையடுத்து தனது ராஜதந்திர பயண பாஸ்போர்ட்டை ஒப்படைத்த ராகுல், புதிதாக சாதாரண பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து இருந்தார். இதற்காக தடையில்லா சான்றிதழ் வழங்குமாறு டெல்லி கோர்ட்டில் அவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் சுப்பிரமணியசாமி பதில் மனு தாக்கல் செய்ய கோர்ட்டு அனுமதி அளித்ததுடன், ராகுல் காந்தியின் மனு மீதான விசாரணையை ஒத்திவைத்து இருந்தது. 

இந்த நிலையில்,  அந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, புதிய பாஸ்போர்ட் பெறுவதற்காக ராகுல் காந்திக்கு தடையில்லா சான்று வழங்கி டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ராகுல் காந்தியின் கோரிக்கையை ஏற்பதாகவும், ஆனால் அவர் கேட்ட 10 வருடங்களுக்கு அல்லாமல் 3 வருடங்களுக்கு தடையில்லா சான்று வழங்குவதாகவும் நீதிபதி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து