முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நஷ்டத்தில் இயங்குகிறதா ஆவின் பால் நிறுவனம்..?அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்

வியாழக்கிழமை, 1 ஜூன் 2023      தமிழகம்
Mano-Thangaraj 2023 04 01

Source: provided

கன்னியாகுமரி: தமிழகத்தில் ஆவின் பால் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கவில்லை என்று அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கமளித்துள்ளார்.

தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று காலை கன்னியாகுமரியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழ்நாட்டில் ஆவின் ஒரு தலைசிறந்த நிறுவனமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் பால் தட்டுப்பாடு இல்லை. பொதுமக்களுக்கு தேவையான அளவுக்கு பால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. நிச்சயமாக இந்த ஆண்டு பால் கொள்முதல் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இது பற்றி நான் ஏற்கனவே அமைச்சராக பொறுப்பேற்றவுடன் அறிவித்து விட்டேன்.

தற்போது 45 லட்சம் லிட்டர் பால் கையாளும் திறன் உள்ளது. அதனை இந்த ஆண்டு 75 லட்சம் லிட்டராக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கான பணிகளும் நடந்து வருகிறது. இதற்காக உலகதரம் வாய்ந்த எந்திரங்களை பயன்படுத்த உள்ளோம். ஆவின் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கவில்லை. தமிழகம் முழுவதும் தட்டுப்பாடின்றி பால் வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

பள்ளிகூடங்கள் மட்டுமின்றி தேவைப்படும் இடங்களில் எல்லாம் ஆவின் பாலகங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். டெல்லியில் மல்யுத்த வீராங்கனையிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட பா.ஜ.க. எம்.பி. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மல்யுத்த வீராங்கனைகள் நியாயமான முறையில் போராடினார்கள். அவர்கள் மீது பா.ஜ.க. அரசு நடவடிக்கை எடுத்ததை வன்மையாக கண்டிக்கிறோம். இவ்வாறு அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து