எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு மதுரை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தையே பரபரப்பாக்கிய கோகுல்ராஜ் கொலை வழக்கு கடந்து வந்த பாதை குறித்து பார்ப்போம்.
1) கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24-ஆம் தேதி பள்ளிபாளையம் அடுத்த கிழக்கு தொட்டிபாளையம் ரயில் பாதையில் சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
2) இந்த வழக்கில் சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் எஸ்.யுவராஜ், அவரது சகோதரர் தங்கதுரை, அருள்செந்தில், செல்வக்குமார், குமார் (எ) சிவக்குமார், கார் ஓட்டுநர் அருண், சங்கர், செல்வராஜ், ஜோதிமணி, ரவி என்ற ஸ்ரீதர், ரஞ்சித், சதீஷ்குமார்,சுரேஷ், பிரபு, கிரி, அமுதரசு, சந்திரசேகர் ஆகிய 17 பேரை நாமக்கல் மாவட்ட காவல் துறையினர் கைது செய்தனர்.
3) கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணை அதிகாரியாக இருந்த திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா கடந்த 2015-ஆம் ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி அவரது முகாம் அலுவலகத்தில் தற்கொலை செய்துகொண்டார்.
4) இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஜோதிமணி (40) என்பவர் சொத்துப் பிரச்னை காரணமாக தனது கணவர் சந்திரசேகர் என்பவரால் கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7ம் தேதி சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
5) வேலூர் சிறையில் அடைக்கப்பட்ட யுவராஜுக்கு கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
6) யுவராஜுக்கு ஜாமீன் வழங்கி பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இதையடுத்து கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் யுவராஜ் சென்னையில் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
7) இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கை 18 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என கடந்த 2017-ம் ஆண்டு உத்தரவிட்டது. அதுவரை எந்த நீதிமன்றமும் யுவராஜுக்கு பிணை வழங்கக் கூடாது எனவும் உத்தரவிட்டது.
8) கோகுல்ராஜ் கொலை வழக்கில் அவரது தாய், சகோதரர், தோழி என மொத்தம் 110 பேர் அரசுத் தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டு, அவர்களிடம் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30-ம் தேதி விசாரணை தொடங்கியது.
9) இந்த வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என கோகுல்ராஜின் தாயார் சித்ரா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இதையடுத்து கடந்த 2019-ம் ஆண்டு வழக்கு விசாரணை மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
10) பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைதான யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள் என மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் 2022 மார்ச் 5-ம் தேதி தீர்ப்பளித்துள்ளது. மேலும் இவர்களுக்கான தண்டனை விவரங்கள் மார்ச் 8-ம் தேதி அறிவிக்கப்படும் என நீதிமன்றம் கூறியிருந்தது.
11) கோகுல்ராஜ் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான யுவராஜ் மற்றும் அவரது கார் ஓட்டுநரான அருணுக்கு மூன்று ஆயுள் தண்டனை அதாவது சாகும்வரை சிறை தண்டனை விதித்து, மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சம்பத்குமார் 2022 மார்ச் 8-ல் தீர்ப்பளித்தார். மேலும், குமார் என்ற சிவகுமார், சதீஷ்குமார், ரவி, ரஞ்சித், செல்வராஜ் ஆகியோருக்கு தலா 2 ஆயுள் தண்டனையும், பிரபு, கிரிதருக்கு தலா ஒரு ஆயுள் தண்டனை மற்றும் 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், சந்திரசேகரனுக்கு ஆயுள் தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
12) நேற்று - ஜூன் 2, 2023: பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு மதுரை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
பிரட் குலாப் ஜாமுன்![]() 1 day 21 hours ago |
சில்லி கார்லிக் சீஸ் பிரெட்![]() 5 days 23 hours ago |
சில்லி சப்பாத்தி![]() 1 week 1 day ago |
-
வன்முறைக்கு மூளையாக செயல்பட்டதாக இம்ரான்கான் மீது மேலும் ஒரு வழக்கு
21 Sep 2023லாகூர், வன்முறைக்கு மூளையாக செயல்பட்டதாக இம்ரான்கான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-09-2023.
21 Sep 2023 -
ஐசிசி ஒருநாள் தரவரிசை: முகமது சிராஜ் முதலிடம்
20 Sep 2023புதுடில்லி : ஆசிய கோப்பை 2023 இறுதிப்போட்டிகளுக்குப் பிறகு முகமது சிராஜ் உலகின் நம்பர் 1 ஒருநாள் பந்து வீச்சாளராக ஆனார்.
-
உலகக்கோப்பை: பாடல் வெளியீடு
20 Sep 202350 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் வரும் அக்டோபர் 5ம் தேதி தொடங்குகிறது.
-
சென்னை ஓட்டுநர் வங்கி கணக்கில் டெபாசிட் ஆன 9,000 கோடி ரூபாய்
21 Sep 2023சென்னை, தனது வங்கி கணக்கில் டெபாசிட் ஆன 9 ஆயிரம் கோடி ரூபாயை கண்டு சென்னையில் கார் ஓட்டுனர் ஒருவர் பெரும் அதிர்ச்சிக்குள்ளானார்.
-
ஐ.நா. வில் நிரந்தர உறுப்பினராக இந்தியாவுக்கு இங்கிலாந்து ஆதரவு
21 Sep 2023நியூயார்க், இந்தியா, பிரேசில், ஜெர்மனி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் ஐ.நா.
-
ஆந்திர சட்டசபையில் பரபரப்பு: தொடையை தட்டி சவால் விட்ட நடிகர் பாலகிருஷ்ணா
21 Sep 2023திருப்பதி, ஆந்திர சட்டசபை நேற்று கூடிய போது முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் பாலகிருஷ்ணா தொடையை தட்டி சவால் விட்ட சம்பவம் பெரும்
-
விதிகளை மீறி ஆடை அணிந்தால் பெண்களுக்கு 10 ஆண்டு ஜெயில் ஈரான் அரசு அதிரடி உத்தரவு
21 Sep 2023டெக்ரான், விதிகளை மீறி ஆடை அணிந்தால் பெண்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் மசோதா ஈரான் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
-
பிரேசில் அதிபருடன் முதன்முறையாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்திப்பு: இருதரப்பு உறவுகள் பற்றி ஆலோசனை
21 Sep 2023நியூயார்க், பிரேசில் அதிபருடன் முதன்முறையாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்தித்து இருதரப்பு உறவுகளை பற்றி பேசினார்.
-
2024-ல் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க அதிபர் ஜோபைடனுக்கு அழைப்பு
21 Sep 2023புது டெல்லி, 2024-ல் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க அதிபர் ஜோபைடனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
-
திருப்பதியில் இன்று கருட சேவை: பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு
21 Sep 2023திருப்பதி, பிரம்மோற்சவ விழாவின் 4-வது நாளான நேற்று கல்ப விருட்ச வாகன சேவை நடந்த நிலையில் இன்று கருட சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
-
நிலவில் இன்று துவங்கும் பகல் பொழுது: விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் விழித்தெழுமா? இஸ்ரோ விஞ்ஞானிகள் எதிர்பார்ப்பு
21 Sep 2023சென்னை, நிலவில் ஸ்லீப் மோடில் வைக்கப்பட்டுள்ள சந்திரயான்-3ன் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் விண்கலன்கள் விரைவில் விழித்தெழும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஆதி சங்கராச்சாரியாருக்கு ம.பி.யில் 108 அடி உயர சிலை: முதல்வர் சவுகன் திறந்து வைத்தார்
21 Sep 2023போபால், இந்து மதத்தின் தற்போதைய கட்டமைப்பை உருவாக்கிய இந்து மத குருக்களில் முதன்மையானவர்களாக கருதப்படும் பலரில் ஆதி சங்கராச்சாரியார் ஒருவர்.
-
விஜயவாடா - சென்னைக்கு புதிய வந்தே பாரத் ரெயில் வரும் 24-ம் தேதி முதல் இயக்கம்
21 Sep 2023திருப்பதி, ஆந்திர மாநிலம் விஜயவாடா - சென்னை இடையே புதிய வந்தே பாரத் ரெயில் வருகிற 24-ம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது.
-
நிபா வைரஸ்: ட்ரூனாட் சோதனை நடத்த ஐ.சி.எம்.ஆர். அனுமதி: கேரள அமைச்சர் வீணா ஜார்ஜ் தகவல்
21 Sep 2023திருவனந்தபுரம், நிபா வைரஸ் பாதிப்பை கண்டறிய ட்ரூனாட் சோதனை நடத்த ஐ.சி.எம்.ஆர். ஒப்புதல் அளித்துள்ளதாக கேரள அமைச்சர் வீணா ஜார்ஜ் தகவல் தெரிவித்துள்ளார்
-
சுவிட்சர்லாந்தில் பெண்கள் புர்கா உடை அணிய தடை
21 Sep 2023சூரிச், ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்து பொதுவெளிகளில் பெண்கள், தங்கள் முகத்தை மறைக்க அணியும் புர்கா போன்ற உடைகளுக்கு தடை விதிக்கும், சட்டத்தை அமல்படுத்தி உள்ளது.&n
-
பாராளுமன்ற வரலாற்றில் பொன்னான தருணம்: மகளிர் மசோதா குறித்து பிரதமர் மோடி பேச்சு
21 Sep 2023புது டெல்லி, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றியதற்காக நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி, பாராளுமன்ற வரலாற்றில் இது
-
சென்னையில் கலைஞர் நூற்றாண்டு விழா: சோனியா, மம்தாவுக்கு கனிமொழி அழைப்பு
21 Sep 2023சென்னை, சென்னை நந்தனத்தில் அக்டோபர் 14-ம் தேதி நடைபெறும் கலைஞர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க வருமாறு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா
-
கனடா நாட்டுடனான உறவில் விரிசல்: விசா வழங்கும் சேவையை நிறுத்தி இந்தியா நடவடிக்கை
21 Sep 2023புது டெல்லி, கனடா நாட்டுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், விசா வழங்கும் சேவையை நிறுத்தி இந்தியா அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
-
டெல்லி ரயில் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக ராகுல்: வலைதளங்களில் வைரலாகும் வீடியோ
21 Sep 2023புது டெல்லி, டெல்லி ஆனந்த் விஹார் ரெயில் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளி உடை அணிந்து, பயணிகளின் உடைமைகளை ராகுல் காந்தி சிறிது தூரம் தூக்கி சென்றார்.
-
காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை அமல்படுத்த வேண்டும்: கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
21 Sep 2023புது டெல்லி, காவிரி நதிநீர் பங்கீட்டில் கர்நாடக அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே பிரச்சினை நீடித்து வருகிறது.
-
முதல்வர் சித்தராமையா தலைமையில் மத்திய அமைச்சர் ஷெகாவத்தை சந்தித்த கர்நாடக அமைச்சர்கள் குழு
21 Sep 2023புது டெல்லி, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் மற்றும் கர்நாடக அனைத்துக் கட்சி எம
-
வாரணாசியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார்
21 Sep 2023வாரணாசி, உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் நாளை 23-ம் தேதி சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
-
மக்களவையில் நிறைவேறிய நிலையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் தாக்கல் எதிர்க்கட்சிகள் காரசார விவாதம்
21 Sep 2023புது டெல்லி:பாராளுமன்ற மக்களவையில் மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறிய நிலையில் நேற்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
-
நீட் தேர்வால் பூஜ்யம்தான் பலன்:முதல்வர் ஸ்டாலின் கருத்துக்கு புதுவை கவர்னர் தமிழிசை பதில்
21 Sep 2023சென்னை:நீட் தேர்வால் பூஜ்யம்தான் பலன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவில் கூறி இருந்தார்.