எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : தொழில்துறையில், சாதனை மேல் சாதனைகளை நாம் செய்து வருகிறோம் என்றும், ஏ.டி.எம்.-ல் பணம் எடுப்பதைவிட, கைபேசி மூலமாக பணப்பரிவர்த்தனைகள் மேற்கொள்வது அதிகமாக உள்ளது என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை, நந்தம்பாக்கத்தில், 116 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிதிநுட்ப நகரம் அமைப்பதற்கும், 254 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சர்வதேச தரத்திலான நிதிநுட்ப கோபுரம் கட்டுவதற்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார். இதனைத் தொடர்ந்து அவர் பேசியதாவது,
கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசு எடுத்த பல்வேறு முன்னெடுப்புகளின் காரணமாக தமிழகம் தலைநிமிர்ந்து நிற்கிறது. இந்தியாவுக்கே முன்மாதிரியான மாநிலமாக நம்முடைய தமிழகம் வளர்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, தொழில்துறையானது மிக வேகமான முன்னேற்றங்களை உருவாக்கித் தந்து வருகிறது. தமிழக அரசின் தொழில்துறை நிகழ்ச்சிகள் என்பவை நமது மாநிலத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் நிகழ்ச்சிகளாக அமைந்திருக்கின்றன.
தொழில்துறையில், சாதனை மேல் சாதனைகளை நாம் செய்து வருகிறோம். முதலீடுகளை ஈர்ப்பதற்கு எடுத்து வைத்திடும் ஒவ்வொரு அடியும், வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் ஒரு பெரிய லட்சியத்தினை கொண்டதாக இருக்கின்றது. அனைவரையும் உள்ளடக்கிய நமது திராவிட மாடல் வளர்ச்சி பல மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கிக் கொண்டிருக்கிறது.
நமது கடுமையான முயற்சி, உலகளாவிய நிறுவனங்களது கவனங்களை வெகுவாக ஈர்த்திருக்கிற காரணத்தால் தொழில் நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை மேற்கொள்ள தமிழகத்தை நோக்கி வந்த வண்ணம் இருக்கின்றது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள இளைஞர்களும், பெண்களும் அவர்களது வசிப்பிடத்திற்கு அருகிலேயே பணிபுரிய ஏதுவாக, பரவலாக, மாநிலம் முழுவதும் இம்முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நிதிநுட்பத்துறைக்கான மின்னணுமயமாக்கப்பட்ட நிதிச்சேவைகள் அனைத்தும் ஏழை, எளிய மக்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும்.
ஆன்லைன் விற்பனைகள் இன்னும் பலமடங்கு அதிகரித்திருக்கிறது. கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் அதிகரிக்கத் தொடங்கிய மின்னணுமயமாக்கப்பட்ட வங்கிச் சேவைகளின் பயன்பாடு, தற்போது பன்மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த வளர்ச்சியை நன்கு பயன்படுத்திக் கொண்டு நாமும் வளர்ந்திட வேண்டியது அவசியம் என்பதை அரசின் கடமையாக நான் கருதுகிறேன்.
தற்போதுள்ள சூழ்நிலையில், ஏ.டி.எம்.-ல் பணம் எடுப்பதைவிட, கைபேசி மூலமாக பணப்பரிவர்த்தனைகள் மேற்கொள்வது அதிகமாக உள்ளது. வங்கிகள் ஏறக்குறைய முழு டிஜிட்டல் வங்கிகளாக மாறி விட்டனவோ என்ற அளவிற்கு, தற்போது டிஜிட்டல் பணபரிவர்த்தனைகள் அதிகரித்து வருகின்றன.
முற்றிலுமாக எல்லா இடங்களுக்கும் எல்லாத் தரப்பினரயும் இது இன்னும் சென்றடையவில்லை என்று சொன்னாலும், எதிர்காலத்தைக் கருதி, அதற்கு ஏற்ப நமது திட்டமிடுதல்கள் இருக்கவேண்டும். தற்போது அதிவேகமாக வளர்ந்து வரும் தகவல் தொழில் நுட்பம், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள், மின்னணுவியல், புத்தாக்கம் மற்றும் புத்தொழில் நிறுவனங்களும் தமிழகத்தில் சிறப்பான வளர்ச்சியைப் பெற்றுள்ளன. பாரம்பரியமாக செயல்பட்டு வரும் வங்கி மற்றும் வங்கி அல்லாத நிதிநிறுவன சேவைகள் வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைக்கும் நிதிநுட்பத்துறையும் தமிழகத்தில் மிகப்பெரிய வளர்ச்சி காணும் என நம்புகிறேன்.
படித்த திறன்மிகு இளைஞர்களின் சக்தி இங்கு கொட்டிக் கிடக்கிறது. பல வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழகத்தை நோக்கி வருவதற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணமாக அமைந்திருக்கிறது. இதனை நாம் தக்க வைத்துக் கொள்ளவேண்டும். அடுத்த கட்டத்திற்கும் எடுத்துச் செல்லவேண்டும். நாளை வரப்போகும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப, நமது இளைஞர்களின் திறன்களை வளர்த்து, முன்னேறுவதில் நாங்கள் கண்ணும் கருத்துமாக இருக்கிறோம். அதன் ஒரு பகுதியாகத்தான், நான் முதல்வன்’ திட்டத்தை தொடங்கி இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறோம்.
2025-ம் ஆண்டுக்குள் தமிழகத்தை நிதிநுட்ப நிறுவனங்களின் உலகளாவிய மையமாக மாற்றக்கூடிய வகையில் தமிழ்நாடு நிதிநுட்பக் கொள்கை 2021 என்ற சிறப்புக் கொள்கையை நான் வெளியிட்டிருக்கிறேன். 50 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு மேற்கொள்ளும் நிதிநுட்ப நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. தொழில்துறை வழிகாட்டி நிறுவனத்தில் தனியே ஒரு நிதிநுட்பப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த வரிசையில் சென்னையில் ஒரு நிதிநுட்ப நகரம் அமைத்திடுவதற்கும், நிதிநுட்ப சேவைகளை ஒரே இடத்தில் வழங்கும் வகையில், ஒரு நிதிநுட்ப கோபுரத்தை அமைப்பதற்கும் அடிக்கல் நாட்டி வைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.
ஜனவரி மாதம் நடைபெற உள்ள, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் அதிக அளவில் பங்கேற்று, சிறப்பிக்குமாறும் உங்கள் துறை சார்ந்த தொழில்களில் அதிக முதலீடுகளை மேற்கொள்ளுமாறும் உங்களுக்கு இந்தத் தருணத்தில் அன்போடு அழைப்பு விடுக்கிறேன். இவ்வாறு முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
நடிகை மனோரமா மகன் பூபதி மறைவு
23 Oct 2025சென்னை, மனோரமா மகன் பூபதி நேற்று முன்தினம் சென்னையில் காலமானார்.
-
ஆஸ்திரேலியா அணியிடம் ஒருநாள் தொடரை இழந்தது இந்தியா
23 Oct 2025அடிலெய்டு: அடிலெய்டில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததை அடுத்து 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா தொடரை வென்றுள்ளது.
-
ஸ்ரேயாஸ்-ரோகித் வாக்குவாதம்
23 Oct 2025அடிலெய்டில் நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
-
செறிவூட்டப்பட்ட அரிசி விவகாரத்தில் சட்டப்பேரவையில் தவறான தகவல்: அமைச்சர் மீது இ.பி.எஸ். குற்றச்சாட்டு
23 Oct 2025சென்னை: செறிவூட்டப்பட்ட அரிசிக்கு மத்திய அரசு இதுவரை அனுமதி வழங்கவில்லை என்று சட்டமன்றத்தில் தவறான தகவலை அமைச்சர் தெரிவித்துள்ளதாக அ.தி.மு.க.
-
தேவர் குருபூஜையில் பங்கேற்க வரும் 30-ம் தேதி பசும்பொன் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
23 Oct 2025சென்னை: தேவர் குருபூஜையை முன்னிட்டு வரும் 30-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பசும்பொன் செல்கிறார். அங்கு உள்ள தேவர் சிலைக்கு
-
இன்று முகூர்த்த தினம் எதிரொலி: சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு
23 Oct 2025சென்னை, சார்பதிவாளர் அலுவலகங்களில் இன்று முதல் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளன.
-
முதல் முறையாக ஐஸ்லாந்தில் கொசுக்கள் கண்டுபிடிப்பு
23 Oct 2025ரேக்ஜாவிக், ஐஸ்லாந்தில் முதல் முறையாக கொசுக்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து கொசுக்கள் இல்லாத நாடு என்ற பெருமையை ஐஸ்லாந்து இழந்துள்ளது .
-
தொடர் சரிவில் தங்கம் விலை
23 Oct 2025சென்னை: தங்கம் விலை நேற்று குறைந்து விற்பனையானது.
-
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து தொடர்ந்து உயர்வு: குளிக்க - பரிசல் இயக்க தடை
23 Oct 2025தர்மபுரி, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பால் ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறந்தாலும் அடையாறு கரையோர மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது: அமைச்சர்
23 Oct 2025சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறந்தாலும் அடையாறு கரையோர மக்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
-
நெல்லின் ஈரப்பத அளவை ஆய்வு செய்ய 9 பேர் கொண்ட மத்தியக்குழு விரைவில் தமிழ்நாடு வருகை தமிழக அரசின் கோரிக்கை ஏற்று மத்திய அரசு நடவடிக்கை
23 Oct 2025டெல்லி: நெல் கொள்முதல் செய்வது தொடர்பாக நெல்லின் ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயர்த்துவது தொடர்பாக ஆய்வு செய்ய 9 பேர் கொண்ட மத்தியக்குழு விரைவில் தமிழ்நாடு வரவுள்ளது.
-
டெல்லியில் 4 ரவுடிகள் என்கவுன்ட்டர்
23 Oct 2025புதுடெல்லி, பீகாரை சேர்ந்த 4 ரவுடிகள் டெல்லியில் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
-
பீகார் சட்ட சபை தேர்தல்: இன்டியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி அறிவிப்பு
23 Oct 2025பாட்னா, பீகார் தேர்தலில் இன்டியா கூட்டணி கட்சிகளின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டார்.
-
தாம்பரம் - செங்கல்பட்டு 4-வது ரயில் வழித்தடத்திற்கு ஒப்புதல்: மத்திய அரசுக்கு நயினார் நன்றி
23 Oct 2025சென்னை, தாம்பரம் - செங்கல்பட்டு 4-வது ரயில் வழித்தடத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியதையடுத்து நயினார் நாகேந்திரன் வரவேற்பு அளித்துள்ளார்.
-
வடகிழக்கு பருவமழை எதிரொலி: தமிழ்நாட்டில் 90 அணைகளில் 196 டி.எம்.சி. தண்ணீர் சேமிப்பு
23 Oct 2025சென்னை, வடகிழக்கு பருவமழை எதிரொலியாக தமிழகத்தில் உள்ள 90 அணைகளில் 196 டி.எம்.சி. தண்ணீர் சேமிக்கப்பட்டது.
-
வரும் 28-ம் தேதி தமிழ்நாடு வருகிறார் துணை ஜனாதிபதி
23 Oct 2025சென்னை, கோவையில் பா.ஜ.க. சார்பில் நடைபெறும் பாராட்டு விழாவில் பங்கேற்க துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வரும் 28-ம் தேதி தமிழ்நாடு வருகிறார்.
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: சி.பி.ஐ.யின் எப்.ஐ.ஆர். நீதிமன்றத்தில் தாக்கல்
23 Oct 2025கரூர், கரூர் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. பதிவு செய்த எப்.ஐ.ஆர். (முதல் தகவல் அறிக்கை) நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
வரும் 29, 30-ம் தேதிகளில் தென்காசி மாவட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் பயணம் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்
23 Oct 2025சென்னை: வரும் 29, 30-ம் தேதிகளில் தென்காசி மாவட்டத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் செல்கிறார். அங்கு பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார்.
-
ஆசியான் உச்சி மாநாடு: காணொளி மூலம் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி முடிவு
23 Oct 2025புதுடெல்லி: ஆசியான் உச்சி மாநாடுட்டில் பிரதமர் மோடி காணொளி மூலம் பங்கேற்கிறார்.
-
தரிசன டிக்கெட்டுகள் வாங்கி தருவதாக திருப்பதியில் ரூ.4 லட்சம் மோசடி
23 Oct 2025திருப்பதி, திருப்பதியில் வி.ஐ.பி. தரிசன டிக்கெட்டுகள் வாங்கி தருவதாக கூறி ரூ.4 லட்சம் மோசடி நடைபெற்ற நிலையில், இடைத்தரகர் அசோக்ரெட்டியை போலீசார் கைது செய்தனர்.
-
இன்று 6 மாவட்டங்களில் கனமழை
23 Oct 2025சென்னை: தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
புகாரின் மீது வழக்குப்பதியாமல் காவல் நிலையத்தில் பேச்சுவார்த்தை நடத்துவது கட்டப்பஞ்சாயத்துக்கு சமம் ஐகோர்ட் மதுரைக் கிளை கருத்து
23 Oct 2025மதுரை: புகாரை வாங்கி வைத்துக் கொண்டு வழக்குப்பதிவு செய்யாமல் இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவது கட்டப்பஞ்சாயத்து நடத்துவதற்கு சமம் என்று ஐகோர்ட் மதுரை கி
-
பிரபல இசையமைப்பாளர் சபேஷ் காலமானார்
23 Oct 2025சென்னை: பிரபல இசையமைப்பாளர் சபேஷ் நேற்று சென்னையில் காலமானார்.
-
மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு
23 Oct 2025மேட்டூர்: மேட்டூர் அணை 4-வது நாளாக உயர்ந்தது.
-
மேற்கு வங்க மாநிலத்தில் ஆயிரம் வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்..!
23 Oct 2025கொல்கத்தா, மேற்கு வங்காளத்தில் 1,000 வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.


