எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புதுடெல்லி : மத்திய அமைச்சர் கஜேந்திர சிங்கின் உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசர கூட்டம் இன்று (18-ம் தேதி) நடைபெறும் என்று காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் அறிவித்துள்ளார். இதில் தமிழகத்தின் நிலை குறித்து அதிகாரிகள் எடுத்து கூறுவார்கள்.
கர்நாடக அணைகளில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விட காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்த நிலையில் திடீரென கர்நாடக அரசு தண்ணீரை நிறுத்தி விட்டது.
இந்த நிலையில் 2-வது கட்டமாக 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் தமிழகத்துக்கு திறந்து விட காவிரி ஒழுங்காற்று குழு காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு பரிந்துரை செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
மேலும் அனைத்து கட்சி அவசர ஆலோசனை கூட்டமும் நடந்தது. இதில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது என்று கூறி விட்டனர். மேலும் இது தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு கர்நாடக அரசின் நீர்வளத்துறை செயலாளர் ராகேஷ் சிங் கடிதம் எழுதினார்.
இதனிடையே தமிழக அரசின் அவசர மனு மீதான விசாரணை வருகிற 21-ம் தேதி நடக்கிறது. எனவே அதற்கு முன்னதாகவே காவிரி மேலாண்மை ஆணையத்தின் மூலமாகவே நீர் பங்கீட்டு விவகாரத்தை தீர்த்துக்கொள்ள கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.
இதையடுத்து மத்திய அமைச்சர் கஜேந்திர சிங்கின் உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசர கூட்டம் இன்று (18-ம் தேதி) நடைபெறும் என்று காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் அறிவித்துள்ளார்.
தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாடகம் மறுப்பு தெரிவித்து உள்ள நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசர கூட்டம் இன்று நடைபெறுவதால் அதில் தமிழகத்தின் நிலை குறித்து அதிகாரிகள் எடுத்து கூறுவார்கள்.
சமீப காலமாக தமிழக எல்லையில் பிலிகுண்டு, ஒகேனக்கல், கொளத்தூர், மேட்டூர் உள்ளிட்ட காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பொழிந்து வருவதால் மேட்டூர் அணைக்கு ஓரளவு நீர்வரத்து அதிகரித்தப்படி உள்ளது.
நேற்று முன்தினம் காலையில் 2,047 கன அடியாக இருந்த நீர்வரத்து சற்று அதிகரித்து நேற்று காலையில் 2,244 கன அடி நீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருந்தது. அணைக்கு வரும் நீரின் அளவை விட திறப்பு அதிகமாக உள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
நேற்று முன்தினம் காலையில் 41.76 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 41.05 அடியாக சரிந்தது. அணையில் 12.6 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது. இதில் 6 டி.எம்.சி. தண்ணீர் குடிநீர் மற்றும் மீன்வளத்துக்கு பயன்படுத்தப்படும்.
எனவே அணையில் இருந்து இன்னும் 6 நாட்களுக்கு மட்டுமே பாசனத்துக்கு தண்ணீர் திறக்க முடியும். மேலும் சம்பா, தாளடி சாகுபடிக்கு ஜனவரி 28-ம் தேதி வரை 205.06 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படும்.
இதில் மேட்டூர் அணையில் இருந்து 108.50 டி.எம்.சி.யும், 97 டி.எம்.சி.நீர் மழை மற்றும் நிலத்தடி நீரின் மூலமும் பெறப்படுகிறது. எனவே தற்போது அணையில் தண்ணீர் இல்லாததால் சம்பா மற்றும் தாளடி சாகுபடிக்கு தண்ணீர் கிடைப்பது கேள்விக்குறியாகி உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மிக்ஸ்ட் ஃப்ரூட் ஜாம்![]() 2 days 12 hours ago |
உருளைக்கிழங்கு கேரட் ஆம்லெட்![]() 6 days 6 hours ago |
முட்டை தக்காளி![]() 1 week 2 days ago |
-
ரூ. 1000 கோடியில் அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம் 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட உள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின்
01 Dec 2023சென்னை : ஆதி திராவிடர் குடியிருப்புகளை மேம்படுத்த அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம் வரும் ஐந்தாண்டுகளில் 1000 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட
-
ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கு: முக்கிய குற்றவாளி துபாயில் கைது
01 Dec 2023சென்னை, ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளி ராஜசேகர் துபாயில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
சென்னையில் இன்று அரசு பள்ளிகளுக்கு விடுமுறை
01 Dec 2023சென்னை : இன்று அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
காஷ்மீரில் என்கவுண்ட்டர்: பயங்கரவாதி சுட்டுக்கொலை
01 Dec 2023ஸ்ரீநகர் : காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான்.
-
கெஜ்ரிவால் ராஜினாமா குறித்து கருத்து கேட்ட டெல்லி அமைச்சர்
01 Dec 2023புதுடில்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை முன் ஆஜராகாமல் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பதவியை ராஜினாமா செய்வதா, வேண்டாமா என வீடு வீடாக மக்களிடம் ஆம் ஆத்ம
-
தொடர் மழையால் தமிழகத்தில் 1,500 ஏரிகள் முழுமையாக நிரம்பின
01 Dec 2023சென்னை : தமிழகத்தில் மொத்தமுள்ள 14,139 ஏரிகளில் 1,500 ஏரிகள் 100 சதவீதம் முழுமையாக நிரம்பி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
31 கைதிகள் விடுதலைக்கு தமிழக கவர்னர் ஒப்புதல்
01 Dec 2023சென்னை : 31 கைதிகள் விடுதலைக்கு தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
-
மசோதா விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் தீர்வு காண முதல்வரை அழைத்து பேசி தீர்வு காணுங்கள்: தமிழ்நாடு கவர்னருக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்
01 Dec 2023புதுடெல்லி, சட்டத்தை செயலிழக்க செய்யவோ, முடக்கவோ கவர்னருக்கு அதிகாரம் இல்லை. 'கவர்னர் - முதல்வர் இடையே பல்வேறு விவகாரங்களுக்கு தீர்வு காண வேண்டியுள்ளது.
-
விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கிய வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை அறிவுறுத்தல்
01 Dec 2023மதுரை, விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கிய வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய தாமதம் ஏன்?
-
மன்சூர் அலிகான் மீது மேல்நடவடிக்கை எடுக்க வேண்டாம்: நடிகை திரிஷா
01 Dec 2023சென்னை : மன்சூர் அலிகான் மீது மேல்நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு அளித்த விளக்க கடிதத்தில் நடிகை திரிஷா தெரிவித்துள்ளார
-
வலுப்பெறும் 'மிக்ஜம்' புயல் வரும் 5-ம் தேதி நெல்லூர்-மசூலிப்பட்டினம் இடையே கரையக் கடக்கும்: வடதமிழகம், டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்
01 Dec 2023சென்னை, வங்கக் கடலில் வலுப்பெறும் மிக்ஜம் புயல் வரும் 5-ம் தேதி ஆந்திர மாநிலம் நெல்லூர் - மசூலிப்பட்டினம் இடையே கரையக் கடக்கும் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு
-
அடுக்குமாடி குடியிருப்பு திட்ட பதிவு கட்டண குறைப்பு அமலுக்கு வந்தது
01 Dec 2023சென்னை : அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில், வீடு விற்பனைக்கான முத்திரை தீர்வை, பதிவு கட்டணம் குறைப்பு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
-
சி.பி.எஸ்.இ. 10, 12-ம் வகுப்பு தேர்வுகள்: முக்கிய அறிவிப்பு
01 Dec 2023புதுடெல்லி : மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் கீழ் நடத்தப்படும் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளின்போது, எந்த தனிப்பட்ட அறிவிப்பு அல்லது உயர் மதிப்பீட்டையோ வழங
-
கட்டுமான பணிகளை மேற்கொள்ள மாட்டோம்: சிதம்பரம் கோவில் தொடர்பான வழக்கில் பொது தீட்சிதர்கள் உறுதி
01 Dec 2023சென்னை : சிதம்பரம் கோவில் கட்டுமானம் தொடர்பான வழக்கு - பொது தீட்சிதர்களுக்கு ஐகோர்ட்டு கேள்வி எந்த கட்டுமானங்களும் மேற்கொள்ளப்பட மாட்டாது என பொது தீட்சிதர்கள் தரப்பில்
-
தேசிய வருவாய் வழி தேர்வு: டிசம்பர் 4 முதல் விண்ணப்பம்
01 Dec 2023சென்னை : தேசிய வருவாய் வழி தேர்வு டிச. 4 முதல் விண்ணப்பம் வழங்கப்படுகிறது.
-
தீவுத்திடல் அருகே தனியார் நடத்தும் கார் பந்தயத்துக்கு ஏன் இவ்வளவு நிதி? - தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி
01 Dec 2023சென்னை : சென்னை தீவுத்திடல் அருகே தனியார் நடத்தும் கார் பந்தயத்துக்கு தமிழக அரசு ஏன் இவ்வளவு நிதி ஒதுக்கியிருக்கிறது என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கி
-
புயல் எச்சரிக்கையால் முதல்வர் ஸ்டாலினின் இன்றைய நிகழ்ச்சி ஒத்திவைப்பு
01 Dec 2023சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று சனிக்கிழமை நடைபெற இருந்த உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவானது புயல், கனமழை எச்சரிக்கை காரணத்தினால் ஒத்திவைக்கப்படு
-
மற்ற நாடுகளை விட இந்தியாவின் கார்பன் வெளியேற்றம் 4 சதவீதமாக உள்ளது: பிரதமர் மோடி
01 Dec 2023துபாய் : இந்தியாவின் கார்பன் வெளியேற்றம் 4 சதவீதமாக உள்ளது என்றும், இது சர்வதேச நாடுகளை விட இந்தியாவின் கார்பன் வெளியீடு மிக குறைவு என்றும் பிரதமர் மோடி தெரிவித்த
-
மணிப்பூரில் வங்கிக்குள் புகுந்து துப்பாக்கி முனையில் ரூ.18.85 கோடி கொள்ளை
01 Dec 2023உக்ருல் : மணிப்பூரில் வங்கிக்குள் புகுந்து ரூ.18.85 கோடியை துப்பாக்கி முனையில் மிரட்டி முகமூடி கொள்ளையர்கள் கொள்ளையடித்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திருப்பதியில் சந்திரபாபு நாயுடு சாமி தரிசனம் : ஏழுமலையான் காப்பாற்றுவார் என பேட்டி
01 Dec 2023திருப்பதி : திருப்பதி கோவிலில் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு சாமி தரிசனம் செய்தார்.
-
3 ஆண்டுகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
01 Dec 2023சென்னை : கடந்த 3 ஆண்டுகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
திருவள்ளூர் மாவட்டத்திற்கு வரும் 4-ம் தேதி ரெட் அலர்ட்
01 Dec 2023சென்னை : திருவள்ளூர் மாவட்டத்திற்கு வரும் 4-ம் தேதி மிக அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் ரூ.10-க்கு ஆவின் பால் பாக்கெட் விநியோகம்
01 Dec 2023சென்னை : சென்னையில் ரூ.10-க்கு ஆவின் பால் பாக்கெட் நேற்று முதல் விநியோகப்பட்டது.
-
3,500 பேர் பயனடைவர்: சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு தமிழக அரசு ஊதிய உயர்வு அறிவிப்பு
01 Dec 2023சென்னை, சர்க்கரை ஆலைகளில் பணியாற்றும் 3,500 தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
-
காசா மீது மீண்டும் தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல் ராணுவம்
01 Dec 2023டெல் அவிவ் : காசா மீது இஸ்ரேல் ராணுவம் மீண்டும் தாக்குதலை தொடங்கியுள்ளது.