எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
ஹாங்சோவ் : 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் முன்தினம் கோலாகலமாக தொடங்கியது. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
2-வது நாளான நேற்று முன் தினம் இந்தியா 5 பதக்கங்களை அறுவடை செய்தது. இந்தியாவுக்கு முதலாவது பதக்கத்தை துப்பாக்கி சுடுதல் வீராங்கனைகள் 'சுட்டு' தந்தனர். பெண்கள் அணிக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் ரமிதா, மெகுலி கோஷ், ஆஷி சோக்சே ஆகியோர் அடங்கிய இந்திய அணி மொத்தம் 1,886 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பெற்று வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றியது. 1896.5 புள்ளிகளுடன் சீனா முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது.
துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிநபர் பிரிவிலும் அரியானாவைச் சேர்ந்த 19 வயதான ரமிதா பதக்கமேடையில் ஏறினார். அவர் 230.1 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்து வெண்கலப்பதக்கத்தை கழுத்தில் ஏந்தினார். இவர் சென்னையில் நேகா சவானிடம் பயிற்சி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. மெகுலி கோஷ் 208.3 புள்ளிகளுடன் 4-வது இடத்துக்கு சரிந்தார். சீன வீராங்கனை யுதிங் ஹூவாங் 252.7 புள்ளிகளுடன் ஆசிய விளையாட்டு சாதனையுடன் தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார்.
துடுப்பு படகு போட்டியில் 'டபுள்ஸ் ஸ்கல்' பிரிவில் இந்தியாவின் அர்ஜூன் லால் ஜாட் - அரவிந்த் சிங் ஜோடி 2 ஆயிரம் மீட்டர் தூரத்தை 6 நிமிடம் 28.18 வினாடிகளில் எட்டிப்பிடித்து வெள்ளிப்பதக்கத்தை வசப்படுத்தியது. சீனாவின் ஜூன்ஜி பேன்-மேன் சூன் இணை முதலிடத்தை (6 நிமிடம் 23.16 வினாடி) பிடித்தது. இதே போல் துடுப்பு படகு ஜோடி பிரிவில் இந்தியாவின் பாபு லால் யாதவ் - லேக் ராம் இணை (6 நிமிடம் 50.41 வினாடி) வெண்கலப்பதக்கத்தை பெற்றது.
8 பேர் கொண்ட அணியினர் துடுப்பு படகை செலுத்தும் பந்தயத்தில் இந்தியா 2 ஆயிரம் மீட்டர் இலக்கை 5 நிமிடம் 43.01 வினாடிகளில் 2-வதாக கடந்து வெள்ளிப்பதக்கத்தை சுவைத்தது. நீரஜ், நரேஷ், ஜஸ்விந்தர் உள்ளிட்டோர் அடங்கிய இந்திய குழுவை விட 2.84 வினாடி முந்திய சீனாவுக்கு தங்கப்பதக்கம் கிட்டியது. ஆண்கள் பிரிவு கைப்பந்தில் லீக் சுற்றில் கலக்கிய இந்தியாவின் 'வீறுநடை' கால்இறுதியுடன் முடிவுக்கு வந்தது. 8 முறை ஆசிய சாம்பியனான ஜப்பான் 25-16, 25-18, 25-17 என்ற நேர் செட் கணக்கில் இந்திய அணியை தோற்கடித்தது. ஆண்கள் ஆக்கியில் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் இன்றி களம் புகுந்த இந்தியா 16-0 என்ற கோல் கணக்கில் உஸ்பெகிஸ்தானை (ஏ பிரிவு) ஊதித்தள்ளியது. லலித் குமார் உபாத்யாய் 4 கோலும், மன்தீப்சிங், வருண்குமார் தலா 3 கோலும் அடித்தனர். இந்திய அணி அடுத்து சிங்கப்பூரை நாளை சந்திக்கிறது. டென்னிசில் தொடக்க ஆட்டங்களில் இந்தியாவுக்கு வெற்றி கிடைத்தது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சுமித் நாகல் 6-0, 6-0 என்ற நேர் செட்டில் லிங் ஹோ டின் மார்கோவை (மக்காவ்) பந்தாடினார். இரட்டையர் பிரிவில் சகெத் மைனெனி- ராம்குமார் கூட்டணி 6-2, 6-3 என்ற நேர் செட்டில் நேபாளத்தின் பிரதிப் கட்கா- அபிஷேக் பாஸ்டோலாவை போட்டுத் தாக்கினர். டேபிள் டென்னிஸ் ஆண்கள் அணிகள் பிரிவில் இந்தியா 3-2 என்ற கணக்கில் கஜகஸ்தானை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறியது. இதில் முதல் 4 ஆட்டங்கள் முடிவில் 2-2 என்று சமநிலையில் இருந்த போது, கடைசி ஒற்றையர் ஆட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த சரத்கமல் சரிவில் இருந்து மீண்டு வந்து 5-11, 7-11, 11-9, 11-8, 11-9 என்ற செட் கணக்கில் கஜகஸ்தானின் கென்ஜிகுலோவை சாய்த்தார். ஆனால் இந்த மகிழ்ச்சி அடுத்த சில மணி நேரங்களில் கரைந்து போனது. இதைத் தொடர்ந்து நடந்த கால்இறுதியில் இந்திய அணி 0-3 என்ற கணக்கில் தென்கொரியாவிடம் தோற்று பதக்க வாய்ப்பை கோட்டை விட்டது. இந்திய அணியில் ஹர்மீத் தேசாய், சத்யன், சரத்கமல் மூன்று பேரும் தோல்வி அடைந்தனர். இதன் பெண்கள் பிரிவில் இந்தியா 2-3 என்ற கணக்கில் தாய்லாந்திடம் தோற்று வெளியேறியது. கால்பந்தில் பெண்கள் பிரிவில் இந்தியா 0-1 என்ற கோல் கணக்கில் (பி பிரிவு) தாய்லாந்திடம் பணிந்தது.
ஏற்கனவே சீனதைபேயிடம் தோற்று இருந்த இந்தியா கால்இறுதிவாய்ப்பை இழந்து நடையை கட்டியது. ஆண்கள் பிரிவில் இந்தியா- மியான்மர் இடையிலான ஆட்டம் 1-1 கோல் கணக்கில் 'டிரா'வில் முடிந்தது. தனது பிரிவில் 4 புள்ளிகளுடன் 2-வது இடத்தை உறுதி செய்த இந்திய அணி 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றது. நாக்-அவுட் சுற்றில் இந்திய அணி சவுதிஅரேபியாவுடன் மோத இருக்கிறது.
பெண்கள் குத்துச்சண்டையில் 50 கிலோ உடல் எடைப்பிரிவில் உலக சாம்பியனான இந்தியாவின் நிகாத் ஜரீன் 5-0 என்ற கணக்கில் 2 முறை ஆசிய சாம்பியனான நுயேன் தி டேமை (வியட்நாம்) எளிதில் வீழ்த்தி கால்இறுதிக்கு முந்தைய சுற்றை எட்டினார். 54 கிலோ பிரிவில் பிரீத்தி பவாரும் வெற்றி பெற்றார். செஸ் போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் விதித் குஜராத்தி 2-வது சுற்றில் கஜகஸ்தானின் காஸிபெக் நோஜர்பெக்கிடம் அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவினார்.
பெண்கள் பிரிவில் கோனெரு ஹம்பி, ஹரிகா தங்களது முதல் இரு ரவுண்டில் வெற்றி கண்டனர். இந்த ஆசிய விளையாட்டின் முதல் தங்கப்பதக்கத்தை துடுப்புபடகு பந்தயத்தில் வென்ற சீனா துடுப்பு படகு, துப்பாக்கி சுடுதல், வுசூ, நீச்சலில் பதக்க வேட்டை நடத்தியது. 2-வது நாள் முடிவில் சீனா 20 தங்கம், 7 வெள்ளி, 3 வெண்கலம் என்று மொத்தம் 30 பதக்கங்களுடன் முதலிடம் வகிக்கிறது. தென்கொரியா 5 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலம் என 14 பதக்கத்துடன் 2-வது இடத்தில் உள்ளது. இந்தியா 3 வெள்ளி, 2 வெண்கலப்பதக்கத்துடன் 7-வது இடத்தில் இருக்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஓட்ஸ் சீஸ் கீரை தோசை![]() 12 hours 27 sec ago |
மிக்ஸ்ட் ஃப்ரூட் ஜாம்![]() 3 days 15 hours ago |
உருளைக்கிழங்கு கேரட் ஆம்லெட்![]() 1 week 10 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 02-12-2023.
02 Dec 2023 -
புயல் காரணமாக அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு
02 Dec 2023சென்னை : புயல் எதிரொலி காரணமாக அண்ணா பல்கலைக்கழக தேர்வுகளை ஒத்திவைத்துள்ளது.
-
ஒருவர் செய்த தவறுக்காக ஒட்டுமொத்த அமலாக்கத்துறையை குற்றம் கூற முடியாது: தூத்துக்குடியில் அண்ணாமலை பேட்டி
02 Dec 2023தூத்துக்குடி, அமலாக்க துறையில் ஒருவர் செய்த தவறுக்காக அனைவருமே தவறானவர்கள் என்று பார்ப்பது சரியல்ல என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் வருகை அதிகரிப்பு: ஒரே நாளில் ஒரு லட்சம் பேர் தரிசனம்
02 Dec 2023திருவனந்தபுரம், சபரிமலையில் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் மட்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
-
ராஜஸ்தான், ம.பி., தெலுங்கானா உள்ளிட்ட 4 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியீடு : மிசோரமில் நாளை வாக்கு எண்ணிக்கை
02 Dec 2023புதுடெல்லி : மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய 4 மாநில பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை - டிச.
-
சிக்கலில் மைக் டைசன்
02 Dec 2023பிரபல முன்னாள் குத்துச்சண்டை சாம்பியன் மைக் டைசன், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் விமானத்தில் பயணம் செய்தபோது தன்னுடன் பயணித்த சக பயணியை அடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
-
வெள்ளத்தில் மாயமான 77 பேரும் இறந்திருக்கக்கூடும்: சிக்கிம் அரசு அதிர்ச்சி தகவல்
02 Dec 2023கேங்க்டாக் : வடகிழக்கு மாநிலமான சிக்கிமில், கடந்த அக்டோபர் 4-ம் தேதி, லோனாக் ஏரிப் பகுதியில் மேகவெடிப்பின் காரணமாக கொட்டித்தீர்த்த அதீத கனமழையால், தீஸ்தா ஆற்றில்
-
இன்று உருவாகும் மிக்ஜம் புயலால் சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை : நாளை அதிகாலை கரையை கடக்கும்
02 Dec 2023சென்னை : இன்று உருவாகும் மிக்ஜம் புயலால் சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
அமலாக்கத்துறை அதிகாரி லஞ்சம் வாங்கியதற்கான வீடியோ ஆதாரம் : முதல் தகவல் அறிக்கையில் தகவல்
02 Dec 2023திண்டுக்கல் : அமலாக்கத்துறை அதிகாரி கைது செய்யப்பட்ட வழக்கின் முதல் தகவல் அறிக்கை வெளியாகியுள்ளது.
-
இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
02 Dec 2023சென்னை, இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
இளம் வாக்காளர்கள் குறித்த சர்ச்சை பேச்சு: விவேக் ராமசாமிக்கு வலுக்கும் எதிர்ப்பு
02 Dec 2023வாஷிங்டன், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் விவேக் ராமசாமி முதன்முறை மற்றும் இளம் வாக்காளர்கள் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
-
அயோத்தியில் வரும் 15-ம் தேதிக்குள் புதிய விமான நிலையம் தயாராகி விடும்: உ.பி முதல்வர் யோகி தகவல்
02 Dec 2023அயோத்தி, உத்தரப் பிரதேசத்தின் அயோத்தி நகரில் வரும் 15-ம் தேதிக்குள் மிகப் பெரிய விமான நிலையம் தயாராகி விடும் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத் தெரிவித்தார்
-
விஜயகாந்த் நலமுடன் உள்ளார் நடிகர் நாசர் பேட்டி
02 Dec 2023சென்னை, விஜயகாந்த் நலமுடன் இருப்பதாக நடிகர் சங்க தலைவர் நாசர் கூறியுள்ளார்
-
மக்கள் வரிப்பணத்தில் கார் பந்தயம் நடத்துவது தேவையற்றது: எடப்பாடி
02 Dec 2023சேலம், மக்கள் வரிப்பணத்தில் கார் பந்தயம் நடத்துவது தேவையற்றது என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற செஸ் வீராங்கனை வைஷாலிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
02 Dec 2023சென்னை : கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற செஸ் வீராங்கனை வைஷாலிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
பாரதிய ஜனதாவினருக்கு எங்கு சென்றாலும் என் ஞாபகம்தான் : நீலகிரியில் அமைச்சர் உதயநிதி பேச்சு
02 Dec 2023உதகை : பா.ஜ.க.வினருக்கு எங்கு சென்றாலும் என் ஞாபகம்தான் என்று தெரிவித்துள்ள, திமுக இளைஞர் அணி செயலாளரும், தமிழக அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிரதமர் மோடி தலைமையிலான அரச
-
மழை நேரத்தில் மின் கம்பம் அருகே போக வேண்டாம் : மக்களுக்கு மின்சார வாரியம் எச்சரிக்கை
02 Dec 2023சென்னை : மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பொது மக்கள் பாதுகாப்பான வழிமுறைகளை கடைபிடிப்பது குறித்து மின்சார வாரியம் சார்பில் வழிக
-
ரஷ்ய ராணுவத்தில் மேலும் 1.7 லட்சம் வீரர்கள் சேர்ப்பு
02 Dec 2023மாஸ்கோ, ரஷ்ய ஆயுதப் படையில் மேலும் ஒரு லட்சத்து 70 ஆயிரம் வீரர்களை சேர்ப்பதற்கான ஆணையில் அதிபர் புடின் கையெழுத்திட்டள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளத
-
ஆதித்யா எல்-1 விண்கலம் குறித்து இஸ்ரோ வெளியிட்ட முக்கிய தகவல்
02 Dec 2023பெங்களூரு, ஆதித்யா எல்-1 விண்கலம் குறித்து முக்கிய தகவலை இஸ்ரோ வெளியிட்டு உள்ளது.
-
புயலை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக இருக்கிறது: வருவாய்த்துறை அமைச்சர் தகவல்
02 Dec 2023சென்னை, மிக்ஜாம் புயலை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக இருப்பதாக பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
-
அடுத்த 20 ஆண்டுகளில் ரூ. 4.16 லட்சம் கோடியை எட்டும் : ஐ.பி.எல். ஒளிபரப்பு உரிம மதிப்பு
02 Dec 2023மும்பை : ஐ.பி.எல். போட்டிகளுக்கான ஊடக உரிம மதிப்பு அடுத்த 20 ஆண்டுகளில் 50 பில்லியன் டாலராக (ரூ.4.15 லட்சம் கோடி) உயரும் என்று எதிர்பார்ப்பதாக ஐ.பி.எல்.
-
ஜே.இ.இ மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை வரை கால அவகாசம் நீட்டிப்பு
02 Dec 2023புது டெல்லி, ஜே.இ.இ. மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
-
டி-20 தொடரை கைப்பற்றியது இந்திய ரசிகர்களுக்கு மகிழ்ச்சி : ருதுராஜ் கெய்க்வாட் பேட்டி
02 Dec 2023மும்பை : உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு கிடைத்துள்ள டி20 தொடர் வெற்றி ரசிகர்களுக்கு சிறிது மகிழ்ச்சியை கொடுத்துள்ளதாக இந்திய அணியின் ருத
-
தூத்துக்குடி மாவட்ட தே.மு.தி.க. சார்பில் விஜயகாந்த் பூரண உடல் நலம் பெற வேண்டி சிறப்பு பூஜை : மாவட்டசெயலாளர் சுரேஸ் பங்கேற்பு.
02 Dec 2023கோவில்பட்டி : தமிழ் திரைப்படஉலகில் எம்.ஜி.ஆருக்கு அடுத்தபடியாக திரைஉலகில் தன்னுடன் இருப்பவர்களுக்கு உதவிசெய்பவர் என்று சொன்னால் அது நடிகர் விஜயகாந்தையே சாரும்.
-
புதுவையில் கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிப்பு
02 Dec 2023புதுவை : புயல் எச்சரிக்கை காரணமாக புதுவையில் நாளை பள்ளிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.