எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை : டி20 கிரிக்கெட்டுகளுக்கு, அதாவது தனியார், தேசிய டி20 கிரிக்கெட்டுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் ஒருநாள் போட்டிகளுக்குக் கொடுக்கப்படாததால் அனைவரும் சேர்ந்து ஐசிசி கூட்டணியுடன் ஒருநாள் கிரிக்கெட்டை ஒரு வடிவமாக உதிர்ந்து போகச் செய்து விட்டனர் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனும் முன்னாள் வர்ணனையாளருமான இயன் சாப்பல் வேதனை தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட்டுக்கான ஆங்கில இணையதளம் ஒன்றில் இது தொடர்பாக அவர் எழுதிய பத்தி ஒன்றில், “நிர்வாகிகள் டி20 கிரிக்கெட்டை பெரிய அளவுக்கு ஆதரித்து ஒருநாள் கிரிக்கெட்டை காலி செய்து விட்டனர், இப்படி காலியாவதற்கு அனுமதித்த வீரர்களும் குற்றவாளிகளே” என தெரிவித்துள்ளார்.
ஆம், முன்பெல்லாம் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் பெரிய அளவில் ரசிகர்களை ஈர்த்தது. ஷார்ஜாவில் சில வேளைகளில் ஆஸ்ட்ரல்-ஆசிய கோப்பை ஒருநாள் கிரிகெட்டும் பெரிய வரவேற்பைப் பெற்றிருந்தது. இன்று முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் என்னும் கருத்தாக்கமே காணாமல் போய் விட்டது. ஐசிசி ஒரு கட்டத்தில் எதிர்காலப் பயணத்திட்டத்தில் முத்தரப்பு கிரிக்கெட்டைச் சேர்த்தாலும் பணபலமுள்ள பிசிசிஐ, ஆஸ்திரேலிய, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியங்கள் இதற்கு ஒப்புக் கொள்வதில்லை. ஆகவே வெறும் இருதரப்பு ஒருநாள் தொடராகக் குறுக்கப்பட்டு அதுவும் அளவில் குறைக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக அவர் அந்தப் பத்தியில் கூறியிருப்பதாவது: டி20 கிரிக்கெட்டுக்கு பெரிய அளவில் ரசிகர்கள் ஆதரவு உள்ளது. இதனால் பணத்தைப் பெருக்க டி20 கிரிக்கெட்டை பெரிய அளவில் வாரியங்கள் வளர்த்து விடுகின்றன. கிரிக்கெட்டை நிதியளவில் பெரிய அளவில் டி20 உயர்த்தியது என்பதில் ஐயமில்லை. ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டை புறமொதுக்கி இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது ஒருநாள் கிரிக்கெட்டை இன்று உதிர்ந்து வாடிய பூவாக்கி விட்டது. அதாவது ஆட்டத்தின் அமைப்பாக்கத்தில் டி20க்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் விகிதாச்சார அளவுப்படி மேலதிகமானது. இதனால் ஒருநாள் கிரிக்கெட் என்பது உலகக்கோப்பையை நம்பியே இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி விட்டது. அதுவும் பிளாக்பஸ்டர் போட்டியாக பெரிய அளவில் இந்தியா-பாகிஸ்தான் போட்டியை ஊதிவிட்டு வருகின்றனர்.
1996-ல் கனடா நாட்டின் டொராண்டோ நகரில் நடைபெற்ற தொடர் ஒன்றில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடைபெற்ற போது நான் வர்ணனையாளர்கள் குழுவில் இடம்பெற்றிருந்தேன். அப்போது இந்தியா, பாகிஸ்தான் வீரர்கள் நட்பு ரீதியாக ஒருவருடன் ஒருவர் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது நான் இந்த வீரர்களுடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது நான் கேட்டேன்: ஏன் இருநாடுகளுக்கும் இடையே பகை, நீங்கள் இரு அணி வீரர்களும் நன்றாகத்தானே பழகுகிறீர்கள் என்று கேட்டேன்.
அப்போது பதில் இவ்வாறு எனக்குக் கிடைத்தது, “நாங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்கிறோம், இருவரும் ஒரே உணவைத்தான் உண்கிறோம். ஆகவே மக்கள் நன்றாக ஒருவருடன் ஒருவர் பழகுகின்றனர். அரசியல்வாதிகள்தான் பகைமையை தக்க வைக்க முயற்சிக்கின்றனர்” என்றார் ஒரு வீரர். இது வருத்தத்திற்குரியது, ஆனால் உண்மையான கூற்று. இதற்குப் பிறகே உறவுகள் மேலும் மோசமடைந்துதான் போய்விட்டது.
நன்றாக ஆடப்படும் ஒருநாள் கிரிக்கெட்டை ரசிகர்கள், வீரர்கள் என்று அனைவரும் விரும்பவே செய்வார்கள். முதலில் 60 ஓவர்களாக தொடங்கிய உலகக்கோப்பையில் 1975-ல் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் போராட்ட குணத்தை மீறியும் வெஸ்ட் இண்டீஸ் அருமையாக ஜெயித்தது. அதன் பிறகே 50 ஓவர் கிரிக்கெட்டாக மாறியது. இன்று டி20 கிரிக்கெட்டினால் மலர்ச்சியின்றி வாடிப்போயுள்ளது. டி20 பணமழை, ஸ்பான்சர்கள் உள்ளிட்ட வருவாய், வீரர்களுக்கு ஏகப்பட்ட பணம் என்று கொட்டிக் கொடுக்க ஒருநாள் கிரிக்கெட்டை சாவிலிருந்து மீட்க நிர்வாகிகள் தந்திரங்களில் ஈடுபட்டனர். பவர் ப்ளே, பவுண்டரிகளின் நீளத்தை குறைப்பது, பவுலர்களையும் பவுலிங்கையும் ஒன்றுமில்லாமல் ஆக்கும் விதிமுறைகள், பேட்டிங் பிட்ச், இது கேப்டன்களின் கற்பனை வளத்தைப் பதிலீடு செய்து கேப்டன்களின் சிந்தனையையே கட்டுப்படுத்தத் தொடங்கியது.
பவர் ப்ளே என்பது இல்லாத காலத்தில் கேப்டன்களுக்கு பெரிய சவால், களவியூகம் அமைப்பதில் அவர்களது புத்திசாலித்தனம் வெளிப்பட்டது. இப்போது ஆட்டத்தின் கண்டிஷன்கள் கேப்டன்களைக் கட்டுப்படுத்தி அவர்களை வெற்றாக்கி விட்டது. ஒரு அணியில் 2 பவுலர்கள் 10 ஓவர்கள் கட்டுப்பாடில்லாமல் அதிக ஓவர்கள் வீசலாம் என்று அனுமதிக்கலாம். இதன் மூலம் எதிரணியைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தும் கேப்டன்கள் விக்கெட்டுகளை வீழ்த்துவதில் கவனம் செலுத்த முடியும், ஆட்டமும் சுவாரஸ்யமடையும்.
50 ஓவர் கிரிக்கெட்டை முன்னேற்ற நிறைய வழிகள் இன்னும் உள்ளன. சிந்தனாபூர்வமாக மாற்றங்களைக் கொண்டு வந்து ஒருநாள் கிரிக்கெட்டை மீண்டும் உயிர்ப்பிக்க முடியும். ஆனால் அவை தழுவப்படவில்லை. ஒருநாள் கிரிக்கெட் உதிர்ந்த மலராக வாடி வீழ்ந்து வருகின்றது. ஆனாலும் உலகக்கோப்பை என்பது இன்றும் பெரிய அளவுக்கு ரசிகர்களை ஈர்த்து வருகின்றது. ஆகவே 2023 உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட்டுக்கு இன்னும் உயிர் இருப்பதை மெய்ப்பிக்கிறது. இவ்வாறு இயன் சாப்பல் எழுதியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்4 months 10 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |
-
இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்தும் டெண்டுல்கர்..!
17 Jan 2025மும்பை : கிரிக்கெட்டின் கடவுள் என போற்றக்கூடிய சச்சின் டெண்டுல்கர் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியை வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
6 மவாட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
17 Jan 2025சென்னை: தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி
-
எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்தநாள்: தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை
17 Jan 2025சென்னை: எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் கிண்டி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்.
-
யாருக்கும் ஆதரவும் இல்லை; ஈரோடு கிழக்கில் போட்டி இல்லை: த.வெ.க. அறிவிப்பு
17 Jan 2025சென்னை: ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியும் இல்லை.. ஆதரவும் இல்லை என்று தவெக அறிவித்துள்ளது.
-
பரந்தூர் செல்ல த.வெ.க. தலைவர் விஜய் திட்டம்: ஏகனாபுரத்தில் புஸ்ஸி ஆனந்த் ஆய்வு
17 Jan 2025சென்னை : த.வெ.க தலைவர் விஜய் பரந்தூர் செல்வதற்கான ஏற்பாடுகளை ஏகனாபுரத்தில் கட்சியின் பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த் நேரில் ஆய்வு செய்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-01-2025.
17 Jan 2025 -
பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்புவோர் வசதிக்காக கூடுதலாக 3 சிறப்பு ரயில்கள்
17 Jan 2025சென்னை : பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை வரும் பயணிகளுக்காக வரும் 19ம் தேதி ஞாயிறு மண்டபம் - சென்னை எழும்பூர் (06048), தூத்துக்குடி - தாம்பரம் (06168),மதுரை - சென்னை எழ
-
தலைசிறந்த தேசியவாதி: எம்.ஜி.ஆருக்கு அண்ணாமலை புகழாரம்
17 Jan 2025சென்னை : பின்தங்கிய மக்களின் முன்னேற்றத்திற்காக உழைத்த தலைசிறந்த தேசியவாதி எம்.ஜி.ஆர். என அண்ணாமலை கூறியுள்ளார்.
-
இந்தியா வர்த்தக மைய கண்காட்சி; பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
17 Jan 2025புதுடெல்லி: டெல்லியில் 6 நாட்கள் நடைபெறும் இந்தியா வர்த்தக மைய கண்காட்சியை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார்.
-
மருத்துவ, பொறியியல் உள்ளிட்ட உயர் கல்வியில் அருந்ததியர் மாணவர்கள் எண்ணிக்கை உயர்வு: அமைச்சர் தகவல்
17 Jan 2025சென்னை : மருத்துவ, பொறியியல் படிப்பில் அருந்ததியர் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.
-
பொங்கல் பரிசுடன் ரூ.2,000 வழங்க உத்தரவிட முடியாது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
17 Jan 2025சென்னை: பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கப் பணம் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட முடியாது என்று தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், பரிசு தொகுப்பு வழங்குவது அரசின் கொள்கை முடிவு, அதில் நீதிமன்றம் உத்
-
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சென்னை திரும்புவோர் பயண திட்டத்தை மாற்றி அமைக்குமாறு அரசு வேண்டுகோள்
17 Jan 2025சென்னை : பொங்கல் பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊர் சென்றிருப்பவர்கள், சென்னை திரும்புவதற்கான பயண திட்டத்தை மாற்றி அமைக்குமாறு போக்குவரத்துத் துறை வேண்டுகோள் விடுத்துள
-
புனேவில் விபத்து - 9 பேர் பலி
17 Jan 2025புனே : புனேவில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து மீது மினி வேன் மோதியதில் 9 பேர் பலியானார்கள்.
-
ஈரோடு கிழக்கில் இருமுனை போட்டி
17 Jan 2025ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை அ.தி.மு.க.
-
குமரி கல்லூரி மாணவர் கொலை வழக்கில் காதலி குற்றவாளி என தீர்ப்பு: தண்டனை இன்று அறிவிப்பு
17 Jan 2025திருவனந்தபுரம் : கசாயத்தில் விஷம் கலந்து கொடுத்து கல்லூரி மாணவரை காதலி கொலை செய்த வழக்கில் காதலி குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.
-
எய்ம்ஸ் மருத்துவமனையில் மக்களின் குறைகளை கேட்டறிந்தார் ராகுல்
17 Jan 2025புதுடில்லி : மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி எய்ம்ஸ் மருத்துவமனையைப் பார்வையிட்டு, அங்கு சிகிச்சைக்காகக் காத்திருக்கும் நோயாளி
-
மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிவு
17 Jan 2025சேலம் : நீர் வரத்தை விட வெளியேற்றம் அதிகம் காரணமாக , மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. &nbs
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி வேட்புமனு தாக்கல்
17 Jan 2025ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் சீதாலட்சுமி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
இந்திய கிரிக்கெட் வீரர் நிதிஷ் ரெட்டியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் சந்திரபாபு
17 Jan 2025புதுடெல்லி : ஆஸ்திரேலிய தொடரில் அசத்திய நிதிஷ் ரெட்டியை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேரில் சந்தித்து வாழ்த்தினார். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இளம் கிரிக்கெட
-
எளியவர்களின் விருப்பத்துக்குரியவர்: எம்.ஜி.ஆருக்கு கமல்ஹாசன் புகழாரம்
17 Jan 2025சென்னை : ஏழைகளின் தோழனாகவும், எளியவர்களின் விருப்பத்துக்குரியவராகவும் திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர். என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
-
தவறி விழுந்ததில் போப் பிரான்சிஸ் காயம்
17 Jan 2025ரோம் : போப் பிரான்சிஸ் கடந்த ஒன்றரை மாதங்களில் 2-வது முறையாக தவறி விழுந்து காயமடைந்துள்ளார்.
-
மக்களுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்தவர்: எம்.ஜி.ஆருக்கு ஆந்திர துணை முதல்வர் புகழாரம்
17 Jan 2025சென்னை : தமிழக மக்களின் நலனுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்தவர் எம்.ஜி.ஆர்: என பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
-
தொடர்ந்து 3-வது ஆண்டாக சரியும் சீனா மக்கள் தொகை
17 Jan 2025பெய்ஜிங் : சீனாவில் மக்கள்தொகை தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக குறைந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
-
108-வது பிறந்தநாள்: சென்னையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு இ.பி.எஸ். மரியாதை
17 Jan 2025சென்னை: 108-வது பிறந்தநாளையொட்டி எம்.ஜி.ஆர். சிலைக்கு சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலை, தலைமைக் கழக எம்.ஜி.ஆர். மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர்.
-
வரும் 21, 22-ம் தேதி 2 நாட்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிவகங்கையில் கள ஆய்வு
17 Jan 2025சென்னை: வரும் 21, 22-ம் தேதி 2 நாட்கள் சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதல்வர் ஸ்டாலின் அங்கு கள ஆய்வில் ஈடுபடிகிறார்.