முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விவசாயிகளுக்கு ரூ. 2 லட்சம் வட்டியில்லா கடன்: ராஜஸ்தானில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு

செவ்வாய்க்கிழமை, 21 நவம்பர் 2023      இந்தியா      அரசியல்
Rajasthan 2023-11-22

ஜெய்ப்பூர், ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை நேற்று அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வெளியிட்டார். அதில் விவசாயிகளுக்கு ரூ. 2 லட்சம் வட்டியில்லா கடன் 

ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு வரும் 25-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 200 தொகுதிகளில் ஒரு தொகுதியின் வேட்பாளர் உயிரிழந்ததை அடுத்து 199 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. 

தேர்தல் பிரச்சாரம் நாளையுடன் முடிவுக்கு வருவதால், அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றன. ராஜஸ்தானின் பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ.க. சமீபத்தில் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. 

இந்நிலையில், ஆளும் காங்கிரஸ் கட்சி நேற்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இதற்கான விழா ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தேர்தல் அறிக்கையை வெளியிட்டுப் பேசினார். 

அதில், விவசாயிகளுக்கு 2 லட்சம் ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கப்படும். சுவாமிநாதன் அறிக்கையின்படி குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படும்.  காங்கிரஸ் 10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும். அதில் 4 லட்சம் வேலை அரசு செக்டாரில் ஏற்படுத்தப்படும். 

பஞ்சாயத்து அளவிலான ஆள்சேர்ப்பு திட்டம் கொண்டு வரப்படும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். ராஜஸ்தானின் பொருளாதாரம் இந்த ஆண்டு இறுதியில் 15 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும். இதனை 2030-க்குள் 30 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்துவதே இலக்கு என்பது  உள்ளிட்ட  பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ள. 

அப்போது அவர் பேசுகையில், 

காங்கிரஸ் கட்சியை பழிப்பதைத் தவிர வேறு எந்த வேலையையும் பிரதமர் மோடி செய்வதில்லை. என்னை, ராகுல் காந்தியை, சமீபத்தில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டை பிரதமர் மோடி தொடர்ந்து பழிக்கிறார். 

நான் அவரது தந்தையை மரியாதைக் குறைவாக பேசிவிட்டதாக மோடி கூறுகிறார். நான் ஏன் அவரை மரியாதைக் குறைவாகப் பேசப் போகிறேன். அவர் எப்போதே இறந்து விட்டவர். இறந்தவர்களை அவமதிக்கும் பழக்கம் எங்களுக்குக் கிடையாது. ஆனால், அந்த பழக்கம் மோடிக்கு இருக்கிறது.

ராஜஸ்தான் மாநிலம் காங்கிரஸ் வலுவாக உள்ள மாநிலம். ராஜஸ்தானில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியிடுவது இது முதல்முறை அல்ல. 1926-ம் ஆண்டு முதலே காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகிறது. 

அப்போது முதலே, எத்தகைய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியுமோ அதைத்தான் நாங்கள் கூறுவோம். கடந்த 2018-ல் காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகளில் 90 சதவீதத்துக்கு அதிகமாக அசோக் கெலாட் நிறைவேற்றி விட்டார்.

ராஜஸ்தானில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும் போது இங்கே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். ராஜஸ்தானில் மட்டுமல்ல, நாடு முழுமைக்குமே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். ஏழைகளுக்கு உதவ வேண்டும் எனும் நோக்கத்திலேயே சாதிவாரி கணக்கெடுப்பை நாங்கள் ஆதரிக்கிறோம். இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து