முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவுத்திடல் அருகே தனியார் நடத்தும் கார் பந்தயத்துக்கு ஏன் இவ்வளவு நிதி? - தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

வெள்ளிக்கிழமை, 1 டிசம்பர் 2023      தமிழகம்
chennai-high-court 2022-08-29

Source: provided

சென்னை : சென்னை தீவுத்திடல் அருகே தனியார் நடத்தும் கார் பந்தயத்துக்கு தமிழக அரசு ஏன் இவ்வளவு நிதி ஒதுக்கியிருக்கிறது என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.

சென்னையில் வரும் டிசம்பர் 9 மற்றும் 10ஆம் தேதிகளில், தீவுத்திடல் மைதானத்தை சுற்றியுள்ள 3.5 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட சாலைகளில் இரவுப் போட்டியாக பார்முலா 4 கார் பந்தயம் நடைபெறவிருக்கிறது. இதற்காக தமிழக அரசு சார்பில் ரூ.40 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனை எதிர்த்து மருத்துவர் ஸ்ரீஹரீஸ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த போது, ஃபார்முலா  கார் பந்தயம் தொடர்பாக தனியார் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்து அனைத்து விவரங்களையும் டிசம்பர் 4ஆம் தேதி தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணையின்போது, கார் பந்தயம் நடத்தவிருக்கும் தனியார் நிறுவனம் சார்பில் வைக்கப்பட்ட வாதங்களில், கார் பந்தயம் நடத்தும் இடத்தில், தடுப்பாண்கள், கட்டமைப்பு வசதிகளுக்காக ரூ.200 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. பந்தய வீரர்கள் மட்டுமல்லாமல் பார்வையாளர்களுக்கும் காப்பீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபார்முலா பந்தய தடம் அமைக்கும் பணிகளுக்காக ஒரு மரம் கூட வெட்டப்படவில்லை என்று தமிழக அரசு வாதத்தை முன் வைத்தது. ஃபார்முலா கார் பந்தயத்தால், அப்பகுதியில் ராணுவம், கடற்படை, துறைமுக நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக உள்ளது என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தனியார் நடத்தும் கார் பந்தயத்துக்காக, தமிழக அரசு ஏன் இவ்வளவு நிதி ஒதுக்கியிருக்கிறது என்றும், இதன் மூலம் தமிழக அரசுக்கு ஏதேனும் வருவாய் கிடைக்குமா என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

பந்தயத்தை நடத்துவது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாகவும், ஏற்கனவே ஐதராபாத்தில் பாதுகாப்பு அம்சங்களுடன் பந்தயத்தை நடத்தியுள்ளதாகவும் நிறுவனங்கள் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிமன்றம், கார் பந்தய புரிந்துணர்வு ஒப்பந்தத்தை வரும் திங்கட்கிழமை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து