எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : மழை பாதித்த இடங்களில் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பதுக்கினாலோ அல்லது கூடுதல் விலைக்கு விற்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையின் மழை பாதிப்பு நிலவரம் குறித்து தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மழைநீர் வடியத் தொடங்கிவிட்டது. மோட்டார்கள் மூலம் மழைநீர் வெளியேற்றும் பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் இருந்து பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். 1,800 பம்பு செட்டுகள் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மின்சார வாரியம், காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை போன்ற அனைத்து துறை சார்ந்தவர்களும் மீட்பு, நிவாரணப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு படை சார்பில் 34 குழுக்கள் பணியில் உள்ளன. 311 கால்நடை உயிரிழப்பு பதிவாகியுள்ளது. சென்னை பெரும்பாக்கம், எண்ணூர் உள்ளிட்ட 4 மின் நிலையங்களுக்கு மட்டும் தற்போது வரை மின் இணைப்பு கொடுக்கப்படாமல் உள்ளது. மின் நிலையங்களில் தேங்கியுள்ள மழைநீர் அகற்றும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. பெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் குறைய குறைய மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் 4 சதவீத பகுதிகளில் மின்விநியோகம் வழங்கப்படவில்லை; விரைவில் நிலைமை முழுவதுமாக சரிசெய்யப்படும். உயிரிழப்புகளை தடுக்கவே மின் இணைப்பு வழங்கப்படவில்லை.
மெட்ரோ ரெயில்கள் முழுமையாக இயக்கப்படுகின்றன. சென்னையில் 85 சதவீத இடங்களில் செல்போன் சேவை சீரானது. இன்று மாலைக்குள் செல்போன் சேவை முழுமையாக சீராகும். குடிநீர் கேன்கள், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பதுக்கக்கூடாது. அத்தியாவசிய பொருட்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் பீதியடைந்து அத்தியாவசிய பொருட்களை இருப்பு வைக்க வேண்டாம்; தட்டுப்பாடு வராது. மழை காரணமாக 5 லட்சம் லிட்டர் பால் வழங்கப்படாமல் உள்ளது. வடசென்னையில் விரைவில் மின்விநியோகம் வழங்கப்படும்.
சென்னை புறநகரில் தேங்கிய தண்ணீரை மதகுகள் மூலம் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. செம்மஞ்சேரி, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் படிப்படியாக குறைந்து வருகிறது. மிக்ஜம்' புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் படகுகள் மூலம் உணவு வழங்கப்படுகிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு விநியோகம் செய்யப்படுகிறது. சென்னை விரைவில் பழைய நிலைக்கு திரும்பும்.
மழை நீர் தேங்கிய 866 இடங்களில் 19 ஆயிரம் பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர். அடையாற்றில் வெள்ளம் குறைந்தது. வினாடிக்கு 37 ஆயிரம் கன அடி நீர் செல்கிறது. புயல் மற்றும் மீட்பு பணிகளில் 75 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். பெரும்பாலான இடங்களில் தண்ணீர் வடிந்துவிட்டது. வடியாத இடங்களில் மோட்டார் மூலம் வெளியேற்றப்படுகிறது. இவ்வாறு கூறினார்.
தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி கூறுகையில், ''தண்ணீர் வடிந்த பகுதிகளில் மின்சார விநியோகம் செய்யப்பட்டு உள்ளது. மழைநீர் தேங்கிய பகுதிகளில் மக்கள் பாதுகாப்பு கருதி மின்சார விநியோகம் துவங்கவில்லை. பெரும்பாக்கம், எண்ணூர் உள்ளிட்ட 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டு உள்ளது. பெரிய அளவில் பாதிப்பு இல்லாத பகுதிகளில் விரைவில் மின்சார இணைப்பு வழங்கப்படும்'' எனக் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 4 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 4 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 5 months 1 week ago |
-
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி வெல்லுமா? இன்று கட்டாக்கில் 2-வது போட்டி
08 Feb 2025கட்டாக்: இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி வெல்லுமா? என்ற ஆவல் ரசிகர்கள் இடையே மேலோங்கும் நிலையல் இன்று கட்டாக்கில் 2-வது போட்டி நடைபெறவுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-02-2025.
08 Feb 2025 -
தட்டச்சர் பணிக்கு கலந்தாய்வு பிப்ரவரி 24 முதல் தொடங்கும் டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
08 Feb 2025சென்னை: ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வில் தட்டச்சர் பணிக்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கும் என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்
-
டில்லி தேர்தலில் முதல்வர் அதிஷி வெற்றி கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா தோல்வி
08 Feb 2025புதுடில்லி: டில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் கல்காஜி தொகுதியில் டில்லி முதல்வர் அதிஷி வெற்றி பெற்றார்.
-
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் முடிவுகள் 2026 சட்டசபை தேர்தலில் எதிரொலிக்கும் தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் கருத்து
08 Feb 2025ஈரோடு: “இந்த தேர்தல் முடிவுகள் தான் 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் எதிரொலிக்கும். ஈரோடு கிழக்கு தொகுதியில், முக்கிய எதிர்க்கட்சி போட்டியிடவில்லை. எனவே, தி.மு.க.
-
போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தம்: அரசுக்கு ஓ.பி.எஸ். கோரிக்கை
08 Feb 2025சென்னை: தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை உடனடியாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
-
இன்டியா கூட்டணி ஒற்றுமையாக டெல்லி தேர்தலை சந்திக்கவில்லை மதுரையில் திருமாளவன் பேட்டி
08 Feb 2025மதுரை: இன்டியா கூட்டணி ஒற்றுமையாக தேர்தலை சந்திக்கவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார்.
-
டில்லியில் ஆம் ஆத்மி தோல்விக்கு காங்கிரஸ் காரணம்?
08 Feb 2025புது டில்லி: புது டில்லியில் ஆம் ஆத்மி தோல்விக்கு, அக்கட்சி காங்கிரசுடன் கூட்டணி வைக்காததே காரணம் என்று கூறப்படுகிறது.
-
அம்மா மருந்தகங்கள் மூடலா? ஜெ.ராதாகிருஷ்ணன் விளக்கம்
08 Feb 2025சென்னை: தமிழகத்தில் முதல்வர் மருந்தகம் திறக்கப்படுவதால் அம்மா மருந்தகங்கள் எதுவும் ஒருபோதும் மூடப்படாது என கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு கூடு
-
தங்கம் விலை சற்று உயர்வு
08 Feb 2025சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.120 உயர்ந்து உயர்ந்து ரூ.63,560-க்கு விற்பனையானது.
-
அலாஸ்கா விமானம் விழுந்து விபத்து: 10 பேர் உயிரிழப்பு
08 Feb 2025வாஷிங்டன்: அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் உனலக்ளீட் விமான நிலையத்தில் இருந்து நோம் நகருக்கு செஸ்னா 208 பி என்ற விமானம் புறப்பட்டது.
-
வள்ளலாரின் நினைவு தினம்: சென்னை 11-ம் தேதி டாஸ்மாக் கடைகள் அடைப்பு
08 Feb 2025சென்னை: வள்ளலாரின் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
-
கோவை வேளாண்மை பல்கலை.யில் 7-வது மலர் கண்காட்சி தொடக்கம் அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்
08 Feb 2025கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 7-வது மலர் கண்காட்சித் தொடங்கியை அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் துவக்கி வைத்தனர்.
-
டெல்லி சட்டசபை தேர்தலில் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாத காங்கிரஸ் கட்சி
08 Feb 2025புதுடெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை.
-
ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை: பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடு வழங்கிய ரயில்வே
08 Feb 2025சென்னை: ரெயிலில் பாலியல் தொல்லையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடு தொகையை ரெயில்வே துறை வழங்கியது.
-
அதிபர் புதினை விமர்சித்த ரஷ்யப் பாடகர் மர்ம மரணம்
08 Feb 2025ஊரால்ஸ்:ரஷிய அதிபர் புதினை முட்டாள் என விமர்சித்த அந்நாட்டு பாடகரின் வீட்டில் காவல் துறையினர் நடத்திய சோதனையின் போது மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.
-
டிரம்ப் - ஜெலன்ஸ்கி அடுத்த வாரம் சந்திப்பு
08 Feb 2025வாஷிங்டன், பிப். 09-: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை அடுத்தவாரம் சந்திக்க வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
-
டெல்லி சட்டப்பேரவை தேர்தல்: நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி: பிரதமர் நரேந்திர மோடி கருத்து
08 Feb 2025புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ.க. ஆட்சி அமைக்க உள்ள நிலையில், இது வளர்ச்சிக்கு, நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி என்று பிரதமர் நரேந்திர
-
கேரளா ரசிகருடன் நடிகர் விஜய் சந்திப்பு
08 Feb 2025சென்னை: கேரளாவில் இருந்து வந்த ரசிகரை நடிகர் விஜய் சந்தித்து பேசினர்.
-
தமிழ்நாடு வீரர், வீராங்கனைக்கு தலா ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
08 Feb 2025சென்னை: 19 வயதுக்குட்பட்ட மகளிருக்கான டி20 கிரிக்கெட் உலகக் கோப்பையில் இந்திய அணியின் வெற்றிக்கு பங்களித்த தமிழக கிரிக்கெட் வீராங்கனை கமாலினி, கோ-கோ உலகக் கோப்பையை இந்த
-
ரயிலில் இருந்து தள்ளி விடப்பட்ட கர்ப்பிணியின் வயிற்றிலிருந்த சிசு பலி
08 Feb 2025வேலூர்: ரெயிலில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான கர்ப்பிணியின் வயிற்றிலேயே சிசு இறந்ததாக தகவல் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
அரவிந்த் கெஜ்ரிவாலை வீழ்த்தியவர்: டெல்லி முதல்வராகிறார் பர்வேஷ்
08 Feb 2025புதுடில்லி: புதுடில்லி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள பா.ஜ.க. வேட்பாளர் பர்வேஷ் முதல்வராக வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
-
இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா 414 ரன்கள் குவிப்பு
08 Feb 2025காலே: இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 414 ரன்கள் குவித்துள்ளது.
2-வது டெஸ்ட்...
-
நியூயார்க்கில் 2 மாணவர்கள் கொல்லப்பட்ட வழக்கில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு சிறை
08 Feb 2025நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் போதையில் தனது வாகனத்தை அதி வேகமாக ஓட்டி 2 மாணவர்கள் கொல்லப்பட்ட வழக்கில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபருக்கு 25 ஆண்டுக
-
கருணாநிதி வசனம், கவிதை ஒப்பித்தல் போட்டி: வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல்வர் பரிசு வழங்கி பாராட்டு
08 Feb 2025சென்னை: கருணாநிதி வசனம், கவிதை ஒப்பித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முதல்-அமைச்சர் பரிசு வழங்கினார்