எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
9 அணிகள் இடையிலான 5-வது புரோ ஹாக்கி லீக் தொடரின் 2-வது கட்ட போட்டி ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி அயர்லாந்தை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே இந்திய அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அபாரமாக ஆடிய இந்திய அணி முதல் பாதி ஆட்டத்தில் அடுத்தடுத்து இரு கோல்களை அடித்து அசத்தியது. இதையடுத்து 2-0 என இந்திய அணி முன்னிலை பெற்றது.
இரண்டாம் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. தொடர்ந்து 3வது பாதி ஆட்டத்தில் இந்திய அணி மேலும் ஒரு கோல் அடித்து 3-0 என முன்னிலை பெற்றது. 4-வது பாதி ஆட்டத்தில் இந்திய அணி மேலும் ஒரு கோல் அடித்தது. இறுதிவரை அயர்லாந்து அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இறுதியில் இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் அயர்லாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் நீலகண்ட சர்மா, ஆகாஷ்தீப் சிங், குர்ஜந்த் சிங் ஆகியோர் தலா 1 கோல் அடித்தனர்.
____________________________________________________
ஹரிஸ் விளையாடுவது சந்தேகம்
டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடர் ஜூன் 1-ம் தேதி துவங்க இருக்கிறது. இந்த தொடரை அமெரிக்கா மற்றும் கனடா இணைந்து நடத்துகின்றன. 2024 உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி க்ரூப் ஏ-வில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவுடன் பாகிஸ்தான், அமெரிக்கா, கனடா மற்றும் அயர்லாந்து அணிகளும் இடம்பெற்றுள்ளன. இந்த தொடரில் அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டி ஜூன் 9-ம் தேதி நியூயார்க் நகரில் நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ரஃப் விளையாடுவது சந்தேகம் என தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் லாகூர் கலாண்டர்ஸ் அணிக்காக விளையாடும் போது அவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது. காயம் சரியாக குறைந்தது 4 முதல் 6 வாரங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பிஎஸ்எல் சீசனின் எஞ்சிய ஆட்டத்தையும் ஜூன் 2-ம் தேதி தொடங்கும் உலகக் கோப்பையையும் அவர் இழக்க நேரிடும்.
____________________________________________________
ரூட் அவுட் குறித்து வாகன்
இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் (11 ரன்) 2-வது இன்னிங்சில் அஸ்வின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். முதலில் நடுவர் விரலை உயர்த்தவில்லை. பிறகு டி.ஆர்.எஸ்.-ன்படி அப்பீல் செய்த போது பந்து லெக் ஸ்டம்பை தாக்குவது தெரிந்ததால் முடிவை மாற்றிக் கொண்ட நடுவர் அவுட் வழங்கினார். ஆனால் இந்த தீர்ப்பு குறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் பக்கத்தில், 'தொழில்நுட்பத்தை பார்க்க அதிர்ச்சியாக உள்ளது. பந்து பாதிக்கு மேல் லெக்ஸ்டம்புக்கு வெளியே இருப்பது தெரிந்தது. ஆனாலும் சிவப்பு லைட் ஒளிர்கிறது. எல்.பி.டபிள்யூ.வை கண்டறிய பயன்படுத்தப்படும் 'ஹாக்ஐ' நுட்பம் இந்த தொடர் முழுவதும் சராசரி அளவில் தான் இருக்கிறது. எப்படியோ அது இங்கிலாந்தின் சிறந்த பேட்ஸ்மேனான ஜோ ரூட்டின் கதையை முடித்து விட்டது' என்று கூறியுள்ளார். இது சர்ச்சையானதும் அவர் தனது பதிவை நீக்கி விட்டார். இன்னொரு பதிவில் ரூட்டின் அவுட்டுக்கான ரீப்ளேயை ஏன் அதிக முறை போட்டு காண்பிக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
____________________________________________________
குஜராத்தை வீழ்த்தியது மும்பை
பெண்கள் பிரீமியர் லீக் தொடரின் 2வது சீசன் கடந்த 23ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெங்களூருவில் நடந்த 3வது லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த குஜராத் ஜெயன்ட்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது. மும்பை தரப்பில் அந்த அணியின் அமெலியா கெர் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து, 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது. அந்த அணி 18.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் குஜராத் ஜெயன்ட்சை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றிபெற்றது.
____________________________________________________
உறுதியாக இருந்தேன்: கில்
இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் எல்பிடபிள்யூ (LBW) முறையில் அவுட் ஆகக் கூடாது என்பதில் உறுதியாக இருந்ததாக இந்திய அணியின் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஆஃப் ஸ்பின்னர்களுக்கு எதிராக என்னிடம் திட்டம் இருந்தது. எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். ஆஃப் ஸ்பின்னர்களுக்கு எதிராக விளையாடும்போது நான் ஆடுகளத்தில் இறங்கி வந்து விளையாடுவேன். இந்த முறை பதற்றமின்றி இறங்கி விளையாடினேன். ஆடுகளத்தில் உள்ள பிளவுகளில் பந்து படும்போது அந்த பந்துகளை எதிர்கொள்வது சவாலாக இருந்தது. மற்றபடி ஆடுகளம் நன்றாகவே இருந்தது.
துருவ் ஜுரல் மற்றும் குல்தீப் முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடினர். அவர்களது 76 ரன்கள் பார்ட்னர்ஷிப் இந்திய அணி 300 ரன்களை கடக்க உதவியது. இங்கிலாந்து அணி இந்தியாவைக் காட்டிலும் 80 - 100 ரன்கள் முன்னிலையில் இருந்தால் நல்லது என பேசிக் கொண்டிருந்தோம். ஜுரல் மற்றும் குல்தீப்பின் பேட்டிங் எங்களது எதிர்பார்ப்புகளையும் தாண்டி பூர்த்தி செய்துவிட்டது. இங்கிலாந்து அணிக்கு வெறும் 46 ரன்களே முன்னிலை கிடைத்தது. முன்னிலை குறைவாக இருந்ததால் எங்களால் ஆட்டத்தை எங்களுக்கு சாதகமானதாக மாற்ற முடிந்தது என்றார்.
____________________________________________________
ஆந்திர அணிகாக விளையாட மாட்டனே: ஹனுமா விஹாரி
ரஞ்சிக் கோப்பையில் ஆந்திரம் காலிறுதிப் போட்டியில் மத்திய பிரதேசத்திடம் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்த நிலையில், ஆந்திர அணியின் முன்னாள் கேப்டன் ஹனுமா விஹாரி ரஞ்சிக் கோப்பையில் இனி ஒருபோதும் ஆந்திர அணிக்காக விளையாட மாட்டேன் எனக் கூறியுள்ளது புயலைக் கிளப்பியுள்ளது.
இது தொடர்பாக ஹனுமா விஹாரி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: ஆந்திர அணிக்காக ஒருபோதும் விளையாடக் கூடாது என முடிவெடுத்துள்ளேன். அந்த அணியில் எனது சுயமரியாதையை இழந்து விட்டேன். எனக்கு ஆந்திர அணியைப் பிடிக்கும். நாங்கள் ஒவ்வொரு சீசனிலும் வளர்ந்து வருகிறோம். ஆனால், ஆந்திர கிரிக்கெட் அமைப்பு நாங்கள் வளர்வதை விரும்பவில்லை எனப் பதிவிட்டுள்ளார். ரஞ்சிக் கோப்பையின் முதல் போட்டிக்குப் பிறகு ஆந்திர அணியின் கேப்டன் பதவியிலிருந்து ஹனுமா விஹாரி விலகினார். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக தெரிவித்திருந்தார். ஆனால், தற்போது ஆந்திர அணிக்காக ஒருபோதும் விளையாட மாட்டேன் என விஹாரி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 4 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 4 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 5 months 1 week ago |
-
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி வெல்லுமா? இன்று கட்டாக்கில் 2-வது போட்டி
08 Feb 2025கட்டாக்: இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி வெல்லுமா? என்ற ஆவல் ரசிகர்கள் இடையே மேலோங்கும் நிலையல் இன்று கட்டாக்கில் 2-வது போட்டி நடைபெறவுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-02-2025.
08 Feb 2025 -
தட்டச்சர் பணிக்கு கலந்தாய்வு பிப்ரவரி 24 முதல் தொடங்கும் டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
08 Feb 2025சென்னை: ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வில் தட்டச்சர் பணிக்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கும் என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்
-
டில்லி தேர்தலில் முதல்வர் அதிஷி வெற்றி கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா தோல்வி
08 Feb 2025புதுடில்லி: டில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் கல்காஜி தொகுதியில் டில்லி முதல்வர் அதிஷி வெற்றி பெற்றார்.
-
இன்டியா கூட்டணி ஒற்றுமையாக டெல்லி தேர்தலை சந்திக்கவில்லை மதுரையில் திருமாளவன் பேட்டி
08 Feb 2025மதுரை: இன்டியா கூட்டணி ஒற்றுமையாக தேர்தலை சந்திக்கவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார்.
-
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் முடிவுகள் 2026 சட்டசபை தேர்தலில் எதிரொலிக்கும் தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் கருத்து
08 Feb 2025ஈரோடு: “இந்த தேர்தல் முடிவுகள் தான் 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் எதிரொலிக்கும். ஈரோடு கிழக்கு தொகுதியில், முக்கிய எதிர்க்கட்சி போட்டியிடவில்லை. எனவே, தி.மு.க.
-
போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தம்: அரசுக்கு ஓ.பி.எஸ். கோரிக்கை
08 Feb 2025சென்னை: தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை உடனடியாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
-
டில்லியில் ஆம் ஆத்மி தோல்விக்கு காங்கிரஸ் காரணம்?
08 Feb 2025புது டில்லி: புது டில்லியில் ஆம் ஆத்மி தோல்விக்கு, அக்கட்சி காங்கிரசுடன் கூட்டணி வைக்காததே காரணம் என்று கூறப்படுகிறது.
-
இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா 414 ரன்கள் குவிப்பு
08 Feb 2025காலே: இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 414 ரன்கள் குவித்துள்ளது.
2-வது டெஸ்ட்...
-
அம்மா மருந்தகங்கள் மூடலா? ஜெ.ராதாகிருஷ்ணன் விளக்கம்
08 Feb 2025சென்னை: தமிழகத்தில் முதல்வர் மருந்தகம் திறக்கப்படுவதால் அம்மா மருந்தகங்கள் எதுவும் ஒருபோதும் மூடப்படாது என கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு கூடு
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நாளை கூடுகிறது
08 Feb 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை கூடுகிறது கூட்டத்தில் விரைவில் தாக்கலாகும் தமிழக பட்ஜெட் குறித்து விவாதிக்கப்படுகிறது.
-
தங்கம் விலை சற்று உயர்வு
08 Feb 2025சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.120 உயர்ந்து உயர்ந்து ரூ.63,560-க்கு விற்பனையானது.
-
அலாஸ்கா விமானம் விழுந்து விபத்து: 10 பேர் உயிரிழப்பு
08 Feb 2025வாஷிங்டன்: அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் உனலக்ளீட் விமான நிலையத்தில் இருந்து நோம் நகருக்கு செஸ்னா 208 பி என்ற விமானம் புறப்பட்டது.
-
வள்ளலாரின் நினைவு தினம்: சென்னை 11-ம் தேதி டாஸ்மாக் கடைகள் அடைப்பு
08 Feb 2025சென்னை: வள்ளலாரின் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
-
அதிபர் புதினை விமர்சித்த ரஷ்யப் பாடகர் மர்ம மரணம்
08 Feb 2025ஊரால்ஸ்:ரஷிய அதிபர் புதினை முட்டாள் என விமர்சித்த அந்நாட்டு பாடகரின் வீட்டில் காவல் துறையினர் நடத்திய சோதனையின் போது மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.
-
கோவை வேளாண்மை பல்கலை.யில் 7-வது மலர் கண்காட்சி தொடக்கம் அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்
08 Feb 2025கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 7-வது மலர் கண்காட்சித் தொடங்கியை அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் துவக்கி வைத்தனர்.
-
ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை: பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடு வழங்கிய ரயில்வே
08 Feb 2025சென்னை: ரெயிலில் பாலியல் தொல்லையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடு தொகையை ரெயில்வே துறை வழங்கியது.
-
டெல்லி சட்டசபை தேர்தலில் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாத காங்கிரஸ் கட்சி
08 Feb 2025புதுடெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை.
-
மத்திய பட்ஜெட்டில் குறைவான நிதி ஒதுக்கீடு: தமிழகத்திற்கு நிதி கிடைக்காவிட்டாலும், நீதிக்காக போராடுவோம்: ஆவடி பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
08 Feb 2025சென்னை, மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு குறைவான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக குற்றஞ்சாட்டியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்திற்கு நிதி கிடைக்காவிட்டாலும்; நீதிக்க
-
டிரம்ப் - ஜெலன்ஸ்கி அடுத்த வாரம் சந்திப்பு
08 Feb 2025வாஷிங்டன், பிப். 09-: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை அடுத்தவாரம் சந்திக்க வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
-
ரயிலில் இருந்து தள்ளி விடப்பட்ட கர்ப்பிணியின் வயிற்றிலிருந்த சிசு பலி
08 Feb 2025வேலூர்: ரெயிலில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான கர்ப்பிணியின் வயிற்றிலேயே சிசு இறந்ததாக தகவல் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
டெல்லி சட்டப்பேரவை தேர்தல்: நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி: பிரதமர் நரேந்திர மோடி கருத்து
08 Feb 2025புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ.க. ஆட்சி அமைக்க உள்ள நிலையில், இது வளர்ச்சிக்கு, நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி என்று பிரதமர் நரேந்திர
-
கேரளா ரசிகருடன் நடிகர் விஜய் சந்திப்பு
08 Feb 2025சென்னை: கேரளாவில் இருந்து வந்த ரசிகரை நடிகர் விஜய் சந்தித்து பேசினர்.
-
இடைத்தேர்தல் நடைபெற்றஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் வெற்றி: டெபாசிட்டை இழந்தார் நா.த.க. வேட்பாளர்
08 Feb 2025ஈரோடு, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 90,629 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது.
-
அரவிந்த் கெஜ்ரிவாலை வீழ்த்தியவர்: டெல்லி முதல்வராகிறார் பர்வேஷ்
08 Feb 2025புதுடில்லி: புதுடில்லி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள பா.ஜ.க. வேட்பாளர் பர்வேஷ் முதல்வராக வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.