எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கருவறையில் மூலவருக்கு வெப்பத்தை குறைக்கும் வகையில் தாராபிஷேகம் எனும் சிறப்பு பூஜை 6 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நேற்று முதல் தொடங்கியது.
அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தினசரி காலை 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 10.30 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம் மற்றும் இரவு 7.15 மணிக்கு ராக்கால அபிஷேகம் என 3 வேளைகளில் அபிஷேகம் நடந்து வருகிறது.
மேலும் மூலவர் வெப்பத்தை குறைக்கும் வகையில், தாராபிஷேகம் உபயதாரர்கள் கட்டணம் செலுத்தி காலை 9 மணி முதல் 10.30 மணி வரை நடைபெற்று வந்தது. இதனை முன்னிட்டு கந்த சஷ்டி யாகசாலை மண்டபத்தில் தாரா ஹோமம் நடைபெறும்.
இதனையடுத்து மூலவருக்கு வெள்ளி கொப்பரை துவாரத்தின் வழியாக சுமார் 100 லிட்டர் பால் மூலம் தாராபிஷேகம் நடைபெறும். இந்த அபிஷேகங்களில் பக்தர்கள் கட்டண தரிசனத்திலும், இலவசமாக பொது தரிசனப்பாதையிலும் சுவாமி தரிசனம் செய்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு இந்த தாராபிஷேகம் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கருவறையில் மூலவருக்கு வெப்பத்தை குறைக்கும் வகையில் தாராபிஷேகம் எனும் சிறப்பு பூஜை மீண்டும் நேற்று முதல் தொடங்கியது.
இதனை முன்னிட்டு கந்த சஷ்டி யாகசாலை மண்டபத்தில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன் கலந்து கொண்டு தாராபிஷேகத்தை தொடங்கி வைத்தார். 6 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தாராபிஷேகம் நடைபெறுவது பக்தர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


