எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி, பல்வேறு சிறபம்சங்களை கொண்ட ஹைட்ரஜன் மூலம் இயங்கும் இந்தியாவின் முதல் பயணிகள் கப்பலை பிரதமர் நரேந்திர மோடி, நாட்டிற்கு நேற்று அர்ப்பணித்தார்.
தூத்துக்குடியில் சுமார் 17,300 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். அதில் ஒன்று ஹைட்ரஜனால் இயங்கக் கூடிய பயணிகள் கப்பல். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஹைட்ரஜனால் இயங்கும் பயணிகள் கப்பல் விரைவில் காசியில் ஓடும் என்று அறிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்த ஹைட்ரஜனால் இயங்கும் அந்த கப்பலின் சிறப்புகள் வருமாறு., இந்த கப்பல் இந்தியாவிலே ஹைட்ரஜனை எரிபொருளாகக் கொண்டு இயங்கும் முதல் கப்பல் ஆகும். இது முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டதாகும். இந்தியாவின் மிகப்பெரிய கப்பல் கட்டும் தளமான கொச்சியில் இந்த கப்பல் கட்டப்பட்டது. மத்திய அரசின் ஹரீத் நௌகா என அழைக்கப்படும் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்துக்கான பசுமை மாற்றம் வழிகாட்டுதலின்படி இந்த கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சுமார் 17 கோடியே 50 லட்ச ரூபாய் செலவில் இந்த கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது. நாட்டின் நீர்வழிப் போக்குவரத்தில் பசுமை ஹைட்ரஜன் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைக்கும் முதல் முயற்சி இதுவாகும். இந்த கப்பலில் 50 பேர் வரை பயணிக்கலாம். ஹைட்ரஜன் கப்பலின் மொத்த திட்ட மதிப்பீட்டில் 75 சதவீத பங்கை மத்திய கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து அமைச்சகம் வழங்கியுள்ளது. ஹைட்ரஜனால் இயங்கும் இந்த கப்பல் சுற்றுப்புற சூழலை பாதுகாக்கும். மாசு அளவை குறைப்பதில் பெரும்பாங்காற்றும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


