எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
திருவனந்தபுரம் : இந்திய கடற்படைத் தளபதியாக பொறுப்பேற்ற அட்மிரல் ஆர். ஹரிகுமார் திருவனந்தபுரத்தில் தன்னை பயிற்றுவித்த பள்ளி ஆசிரியை ஜமீலா பீவியை சந்தித்து ஆசி பெற்றார்.
இந்திய கடற்படை தளபதியாக அட்மிரல் ஆர்.ஹரிகுமார் சமீபத்தில் பொறுப்பேற்றார். இவரது சொந்த ஊர் திருவனந்தபுரம் பட்டம் ஆகும். பள்ளி முதல் கல்லூரி வரை இவர் திருவனந்தபுரத்தில் தான் படித்து வந்துள்ளார்.
திருவனந்தபுரம் வழுதக்காட்டில் உள்ள கார்மல் மேல்நிலைப் பள்ளியில் இவர் 8-ம் வகுப்பு வரை படித்தார். இந்நிலையில் கடற்படை தளபதியாக பொறுப்பேற்ற ஆர். ஹரிகுமார் தன்னை பயிற்றுவித்த கார்மல் பள்ளி ஆசிரியை ஜமீலா பீவியை சந்திப்பதற்காக பள்ளிக்கு வந்தார்.
அவருக்கு பள்ளி ஆசிரியைகளும், மாணவிகளும் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அட்மிரல் ஹரிகுமார் ஆசிரியை ஜமீலா பீவியின் காலைத் தொட்டு ஆசி பெற்றார். தான் படித்த வகுப்பறைகளையும் பார்வையிட்ட பின் அங்கிருந்து அவர் திரும்பினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


