எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காசா, போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அனைத்து அம்சங்களையும் ஹமாஸ் அமைப்பு நிராகரித்துள்ளதாக இஸ்ரேலின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது போர் தொடுத்துள்ள இஸ்ரேல், பணயக் கைதிகளை மீட்பதற்காக தொடர்ந்து பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறது. அவ்வகையில், போர் நிறுத்தம் செய்து கைதிகளை பரிமாற்றம் செய்வது தொடர்பாக புதிய ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த ஒப்பந்தத்தின் அனைத்து அம்சங்களையும் ஹமாஸ் அமைப்பு நிராகரித்துள்ளது. இது தொடர்பாக மூத்த இஸ்ரேல் அதிகாரி கூறிய தகவலை மேற்கோள் காட்டி டைம்ஸ் ஆப் இஸ்ரேல் செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்ரேல் அரசாங்கத்தால் விடுவிக்கப்பட வேண்டிய பாலஸ்தீன கைதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றிருந்தன. ஆனால், ஹமாஸ் தரப்பில் ஒப்பந்தம் ஏற்கப்படவில்லை.
ஒப்பந்தத்தின்படி முதல் கட்டமாக, பெண்கள் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் என சுமார் 20 பணயக் கைதிகளை மட்டுமே விடுவிக்க தயாராக இருப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. பணயக் கைதிகளை விடுவிக்கும் முன் ஆறு வார போர்நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் ஹமாஸ் வலியுறுத்துகிறது.
இந்த ஒப்பந்தத்தை ஹமாஸ் தலைவர் சன்வார் விரும்பவில்லை. அமெரிக்காவின் முன்மொழிவுகளை இஸ்ரேல் ஏற்றுக் கொண்டது. அப்போதும்கூட, காசா மக்கள் தொடர்ந்து பாதிக்கப்படுவதை சன்வார் பொருட்படுத்தவில்லை என இஸ்ரேல் அதிகாரி கூறியிருக்கிறார்.
இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் மிகப்பெரிய அளவில் ராக்கெட் தாக்குதலை நடத்தியதுடன், இஸ்ரேலுக்குள் புகுந்தும் சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இதில் இஸ்ரேல் ராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் என 1,200 பேர் கொல்லப்பட்டனர்.
240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பணயக் கைதிகளாக பிடித்து வந்தனர். இந்த தாக்குதல் மிகப்பெரிய போருக்கு வழிவகுத்தது. பழிக்குப்பழி தாக்குதல்களை தொடங்கிய இஸ்ரேல், காசாவை முழுவதுமாக முற்றுகையிடும்படி ராணுவத்திற்கு உத்தரவிட்டது. அதன்படி முதலில் வான்தாக்குதல் நடத்தப்பட்டது.
பின்னர், ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிப்பது மற்றும் பணயக்கைதிகளை மீட்பது என்ற குறிக்கோளுடன் காசாவிற்குள் தரைவழி தாக்குதலை தொடங்கியது. காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 33,700 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்று பொங்கல் பண்டிகை: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகை எல்லைகளைக் கடந்து உலகளவில் இதயங்களை ஒன்றிணைக்கிறது என்று கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –14-01-2026
14 Jan 2026 -
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிகக் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் மீது அரசு நடவடிக்கை
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் பயணம் மேற்கொள்வதைப் பயன்படுத்தி அதிகக் கட்டணம் வசூலித்த 30 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவ
-
திருப்பாவை சொற்பொழிவு நிறைவு திருப்பதியில் ஆண்டாள் திருக்கல்யாணம்
14 Jan 2026திருப்பதி, கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கிய திருப்பாவை சொற்பொழிவு நிகழ்ச்சிகள் மார்கழி கடைசி நாளான நேற்றுடன் நிறைவு பெற்றன.;
-
கடந்த 2 நாட்களில் மட்டும் திபெத், மியான்மரில் தொடர் நிலநடுக்கம்
14 Jan 2026நைபிடா, மியான்மர் நாட்டில் நேற்று முற்பகல் 11.56 மணியளவில் மித அளவிலான நில உணரப்பட்டது. 10 கி.மீ.
-
முதலீட்டை ஈர்க்க வெளிநாடு பயணம்: பஞ்சாப் முதல்வர் பகவந்துக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு
14 Jan 2026சண்டிகர், பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மானின் இஸ்ரேல் மற்றும் பிரிட்டன் பயணங்களுக்கு மத்திய அரசு அரசியல் அனுமதி மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Jan 2026- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் கல்யானைக்கு கரும்பளித்த லீலை.
- திருவள்ளூர் வீரராகவபெருமாள் விழா தொடக்கம்.
- ஶ்ரீரங்கம் பெருமாள் கோவிலில் திருப்பாவை சாற்று முறை.
-
இன்றைய நாள் எப்படி?
14 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
14 Jan 2026


