எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
நாட்டின் 18-வது பாராளுமன்ற தேர்தல் நேற்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி ஜூன் மாதம் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் நேற்று நடந்தது.
இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. காலையில் இருந்தே மக்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலையொட்டி திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர். அந்த வகையில்,நடிகர் அஜித்குமார் தனது வாக்கினை சென்னை திருவான்மியூரில் உள்ள வாகுச்சாவடியில் முதல் நபராக செலுத்தினார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள வாக்குச்சாவடிக்கு நடிகர் பிரபு குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், வாக்கு என்பது ஜனநாயக உரிமை. உங்கள் விருப்பப்படி வாக்களியுங்கள் என்று கூறினார்.
நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு தனது மனைவியுடன் வந்து மக்களோடு மக்களாக வரிசையில் காத்திருந்து வாக்களித்தார். அதனைத் தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில், வாக்கு நமது உரிமை, வாக்களிப்பது நமது கடமை. ஆபிரகாம் லிங்கன் கூறியதுபோல் புல்லட்டை விட வலிமை வாய்ந்தது வாக்கு. வாக்கு செலுத்தினால்தான் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்க முடியும் என்று கூறினார்.
சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் கார்த்திக் தனித்தனியாக வந்து தங்களது வாக்கினை செலுத்தினார்கள். இசையமைப்பாளர் இளையராஜா சென்னை தியாகராய நகரில் உள்ள பள்ளியில் தனது வாக்கினை செலுத்தினார். சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் யோகி பாபு வாக்களித்தார்.
நடிகர் தனுஷ் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார். நடிகை திரிஷா சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார். நடிகர் விஜய் சேதுபதி சென்னையில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
நடிகர் சசிகுமார் மதுரை புது தாமரைப்பட்டியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். கவிஞர் வைரமுத்து சென்னை சூளைமேட்டில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் .சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது மனைவி பிரீத்தா உடன் வந்து தனது வாக்கை பதிவு செய்தார் இயக்குனர் ஹரி.
நடிகர் விக்ரம் சென்னை பெசன்ட் நகரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார். நடிகர் சித்தார்த் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் நடிகர் விஜய் தனது வாக்கினை செலுத்தினார். நடிகர் சிவக்குமார், சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் சென்னை தியாகராய நகரில் உள்ள இந்தி பிரசார சபாவில் வாக்களித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்று பொங்கல் பண்டிகை: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகை எல்லைகளைக் கடந்து உலகளவில் இதயங்களை ஒன்றிணைக்கிறது என்று கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –14-01-2026
14 Jan 2026 -
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிகக் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் மீது அரசு நடவடிக்கை
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் பயணம் மேற்கொள்வதைப் பயன்படுத்தி அதிகக் கட்டணம் வசூலித்த 30 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவ
-
திருப்பாவை சொற்பொழிவு நிறைவு திருப்பதியில் ஆண்டாள் திருக்கல்யாணம்
14 Jan 2026திருப்பதி, கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கிய திருப்பாவை சொற்பொழிவு நிகழ்ச்சிகள் மார்கழி கடைசி நாளான நேற்றுடன் நிறைவு பெற்றன.;
-
கடந்த 2 நாட்களில் மட்டும் திபெத், மியான்மரில் தொடர் நிலநடுக்கம்
14 Jan 2026நைபிடா, மியான்மர் நாட்டில் நேற்று முற்பகல் 11.56 மணியளவில் மித அளவிலான நில உணரப்பட்டது. 10 கி.மீ.
-
முதலீட்டை ஈர்க்க வெளிநாடு பயணம்: பஞ்சாப் முதல்வர் பகவந்துக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு
14 Jan 2026சண்டிகர், பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மானின் இஸ்ரேல் மற்றும் பிரிட்டன் பயணங்களுக்கு மத்திய அரசு அரசியல் அனுமதி மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Jan 2026- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் கல்யானைக்கு கரும்பளித்த லீலை.
- திருவள்ளூர் வீரராகவபெருமாள் விழா தொடக்கம்.
- ஶ்ரீரங்கம் பெருமாள் கோவிலில் திருப்பாவை சாற்று முறை.
-
இன்றைய நாள் எப்படி?
14 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
14 Jan 2026


