முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் ஓட்டுப்பதிவில் நகர்ப்புறங்களில் சுணக்கம் : ஜெ.ராதாகிருஷ்ணன் விளக்கம்

சனிக்கிழமை, 20 ஏப்ரல் 2024      தமிழகம்
Radhakrishnan 2023 04 17

Source: provided

சென்னை : சென்னையில் ஓட்டுப்போடுவதில் நகர்ப்புற மக்கள் இடையே ஒரு சுணக்கம் ஏற்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி கமிஷனரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் நேற்று முன்தினம் நடந்த பாராளுமன்ற தேர்தலில் சென்னையில் குறைந்த அளவு வாக்குப்பதிவாகி உள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி கமிஷனரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ஜெ. ராதாகிருஷ்ணன் கூறியதாவது: 

ஓட்டுப் போடுவதில் நகர்ப்புற மக்கள் இடையே ஒரு சுணக்கம் ஏற்பட்டு உள்ளது. சென்னையில் அதிகமான ஓட்டுப்பதிவை மேற்கொள்ள 47 வகையான முயற்சிகளை மேற்கொண்டோம். அந்த முயற்சியை நாங்கள் மேற்கொள்ளாமல் இருந்து இருந்தால், இந்த ஓட்டுப்பதிவு சதவீதமும் வந்து இருக்காது. வெயிலின் காரணமாக பகலுக்குப் பிறகு வாக்காளர்கள் இடையே சுணக்கம் ஏற்பட்டு உள்ளது.

அதே போல், அடுக்குமாடியில் குடியிருப்பவர்கள் பலரும் ஓட்டுப் போட வருவதற்கான முயற்சிகளை எடுக்க தயங்குகின்றனர். ஆனால், தேர்தல் ஆணையத்தைப் பொறுத்தவரை அதிகளவு ஓட்டுப்பதிவை மேற்கொள்ள மண்டல அளவிலான அதிகாரிகள் மூலமாக நாங்கள் பல முயற்சிகள் மேற்கொண்டோம். 

தொடர் விழிப்புணர்வு மூலம் தான் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து