முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பைவிட அதிகமாக இருக்கக்கூடும் : சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சனிக்கிழமை, 20 ஏப்ரல் 2024      தமிழகம்
sun-2023-05-01

Source: provided

சென்னை : அடுத்த 24 மணி நேரத்துக்கு அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் 3 - 5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், அடுத்த 24 மணி நேரத்துக்கு அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் 3 - 5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு இயல்பை விட அதிகமாக இருக்கக் கூடும். அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 39 - 42 டிகிரி செல்சியஸ் அளவிலும் இதர தமிக மாவட்டங்களின் சமவெளி பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 34 - 39 டிகிரி செல்சியஸ் வரையும் இருக்கக்கூடும்.

இன்று (21-ம் தேதி) முதல் 24-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை சற்றே குறைந்து ஒரு சில இடங்களில் இயல்பை விட 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக் கூடும். மேலும், இன்று வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக நேற்று முன்தினம் 14 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு மேல் வெயில் சுட்டெரித்தது. 3 பேர் வெயில் காரணமாக உயிரிழந்தனர். நேற்றும் 9 நகரங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது. தமிழகத்தில் பதிவான வெயில் அளவு வருமாறு., ஈரோடு -109.4, வேலூர் -107.4, கரூர் -106.7,  திருச்சி -106.3, சேலம் -106.2, திருத்தணி -106.2, தர்மபுரி -105.8, மதுரை -105.8, திருப்பத்துார் -104 டிகிரி பாரன்ஹீட் பதிவாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து