முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அசல் ஆவண நகல் ஒப்படைப்பு: செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 25-ம் தேதி வரை நீட்டிப்பு

திங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2024      தமிழகம்
Senthil-Balaji 2023 03 27

Source: provided

சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் வரும் 25-ம் தேதி  வரை 34-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் வங்கி தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட அசல் ஆவணங்களின் நகல் செந்தில்பாலாஜியிடம் ஒப்படைக்கப்பட்டது. 

சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள செந்தில்பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

கடந்த முறை வழக்கு விசாரணையின் போது வங்கியின் அசல் ஆவணங்களுக்கும், அமலாக்கத்துறை சமர்ப்பித்த வங்கி ஆவணங்களுக்கும் வேறுபாடு உள்ளதாக மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அமலாக்கத்துறை வழக்கின் அசல் ஆவணங்களை வழங்கக் கோரி செந்தில்பாலாஜி தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி அல்லி, அசல் ஆவணங்களை வழங்க நீதிமன்றம் தயாராக உள்ளதாக கூறியிருந்தார். 

மேலும், ஏப்ரல் 22-ம் தேதி செந்தில் பாலாஜியை நேரில் ஆஜர்படுத்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, புழல் சிறையில் இருந்து செந்தில் பாலாஜி பலத்த பாதுகாப்புடன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார்.

செந்தில்பாலாஜி ஜாமின் மனுக்கள், சென்னை ஐகோர்ட்டில்  இரு முறை தள்ளுபடி செய்யப்பட்டது. இதுவரை 33 முறை அவரது காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு காவல் நீட்டிப்புக்கும் காணொலி காட்சி மூலம் மட்டுமே அவர் ஆஜர்படுத்தப்பட்டார். தற்போது செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட்டார்.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் வங்கி தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட அசல் ஆவணங்களின் நகல் செந்தில்பாலாஜியிடம் ஒப்படைக்கப்பட்டது. சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆவணங்களை பெற்றுக் கொண்டு செந்தில் பாலாஜி கையெழுத்திட்டார். அசல் ஆவணங்களின் நகல் எடுக்கப்பட்டு நீதிமன்ற முத்திரையுடன் செந்தில் பாலாஜியிடம் வழங்கப்பட்டது.

அதை தொடர்ந்து செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை வரும் 25-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். 25ம் தேதி காணொலி மூலம் செந்தில் பாலாஜியை ஆஜர்படுத்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மேலும் விடுவிக்கக்கோரிய மனு மீது மீண்டும் ஓரிரு நாட்களில் வாதங்களை துவங்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். வரும் 25-ம் தேதி வாதங்கள் முன்வைக்கப்படும் என்று செந்தில் பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 25-ம் தேதி வரை 34-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து