முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி, ராஜஸ்தானை தொடர்ந்து கான்பூரில் பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்

புதன்கிழமை, 15 மே 2024      இந்தியா
School 2024-05-14

Source: provided

கான்பூர் : டெல்லி, ராஜஸ்தானை தொடர்ந்து உத்தர பிரதேசத்தின் கான்பூர் நகரில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு இ-மெயில் வழியே வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. 

டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களின் முக்கிய நகரங்களில் கடந்த 2 வாரங்களாக அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது.  இதனால், மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் மக்கள் இடையே பரவலாக அச்சம் எழுந்துள்ளது. 

டெல்லியில் உள்ள ஜி.டி.பி. மருத்துவமனை, தாதா தேவ் மருத்துவமனை, ஹெட்ஜ்வார் மருத்துவமனை மற்றும் தீப் சந்திரா பந்து மருத்துவமனை என 4 மருத்துவமனைகளுக்கு இ-மெயில் வழியே நேற்று முன்தினம் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டு இருந்தது. 

கடந்த 12-ம் தேதி டெல்லியில் உள்ள 20 மருத்துவமனைகளுக்கு இதே போன்ற மிரட்டல்கள் வந்தன.  இதே நாளில், டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கும் மிரட்டல் செய்தி வந்தது. எனினும், இவை அனைத்தும் புரளி என பின்னர் தெரிய வந்தது. 

கடந்த 1-ம் தேதி டெல்லியில் உள்ள 100 பள்ளிகள், நொய்டா நகரில் உள்ள 2 பள்ளிகள் மற்றும் உத்தர பிரதேசத்தின் லக்னோவில் உள்ள ஒரு பள்ளி ஆகியவற்றிற்கு மிரட்டல்கள் விடப்பட்டன.  ரஷ்ய இ-மெயில் சேவையை பயன்படுத்தி இந்த மிரட்டல்கள் விடப்பட்டு இருந்தன.

ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் நகரில் உள்ள 37 பள்ளிகளுக்கும் இதே போன்ற மிரட்டல்கள் விடப்பட்டு இருந்தன.  உடனடியாக, வெடிகுண்டு செயலிழக்க செய்யும் படை, வெடிகுண்டு கண்டறியும் குழு, தீயணைப்பு துறை மற்றும் உள்ளூர் போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.  

எனினும், இதுபற்றி நடந்த சோதனையில், சந்தேகத்திற்குரிய எதுவும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. இந்த சூழலில், நேற்று முன்தினம் மதியம் டெல்லியில் முக்கிய அரசியல்வாதிகள் உள்பட பல்வேறு பிரமுகர்கள் அடைக்கப்பட்டு உள்ள திகார் சிறைக்கு இ-மெயில் வழியே வெடிகுண்டு மிரட்டல் ஒன்று வந்திருந்தது.  இதனால், சிறை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

இந்த பரபரப்பு அடங்குவதற்குள், உத்தர பிரதேசத்தின் கான்பூர் நகரில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு இ-மெயில் வழியே நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டு உள்ளது.  கடந்த 1-ம் தேதியில் இருந்து இதுவரை நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் முக்கிய பகுதிகளில் இதுபோன்ற அச்சுறுத்தல் விடப்பட்டு உள்ளது பொதுமக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், கான்பூர் வெடிகுண்டு மிரட்டல் பற்றி காவல் துறையின் இணை ஆணையாளர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) ஹரீஷ் சந்தர் கூறும் போது, 

பல்வேறு பள்ளிகளுக்கு இ-மெயில் வழியே வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதுபற்றி இணையதள குற்றங்களுக்கான பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.  இந்த அச்சுறுத்தலுக்கும், இதற்கு முன் பல்வேறு பள்ளிகள், விமான நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு விடப்பட்ட வெடிகுண்டு அச்சுறுத்தல்களுக்கும் இடையேயான தொடர்பு பற்றி, சி.சி.டி.வி. காட்சி பதிவுகளை கொண்டு முழு அளவில் கண்காணிக்கும்படி அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார்.

மேலும் இந்த விவகாரத்தில் விசாரணை தொடங்கப்பட்டு உள்ளது.  அதனால், பதட்டமான சூழலை பெற்ரோர்கள் விளைவிக்க வேண்டாம்.   நாங்கள் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.  இந்த விவகாரம் பற்றி நாங்கள் உங்களை அணுகுவோம்.  விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். இந்த முறையும் ரஷ்ய செர்வரில் இருந்து இ-மெயில்கள் வந்துள்ளன என கண்டறியப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து