முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அசாமில் கடத்தி வரப்பட்ட ரூ.105 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் : முதல்வர் பிஸ்வா சர்மா தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2024      இந்தியா
Hemantha-Biswa-Sharma 2023

Source: provided

திஷ்பூர் : அசாமில் ரூ.105 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

அசாம் மாநிலம், கச்சார் மாவட்டத்தில் அண்டை மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 10.333 கிலோ ஹெராயினை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இத்தகவலை அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா வெளியிட்டுள்ளார்.  பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயினின் சர்வதேச மதிப்பு ரூ.105 கோடி இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான அரசின் நடவடிக்கை தொடரும் என்றும் இளைஞர்கள் இதுபோன்ற வலையில் சிக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா வலியுறுத்தியுள்ளார்.  அத்துடன் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு நபர்களுடன் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் புகைப்படத்தையும் முதல்வர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து