எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
அகமதாபாத் : இலங்கையில் இருந்து அகமதாபாத் விமான நிலையம் வந்த ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்த 4 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
அகமதாபாத் விமான நிலையத்துக்கு கடந்த 12-ம் தேதி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருந்தார். இதையடுத்து விமான நிலையம் முழுவதும் தீவிர சோதனையிடப்பட்ட நிலையில், வெடிபொருள்கள் எதுவும் கண்டெடுக்கப்படவில்லை.
வெடிகுண்டு மிரட்டலின் பின்னணி குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்த நிலையில், இலங்கையிலிருந்து அகமதாபாத் வந்தடைந்த விமானம் ஒன்றில், ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய 4 பேர் பயணித்துள்ளதை குஜராத் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் வந்தது.
இதைத் தொடர்ந்து, இலங்கையில் இருந்து குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்தில் வந்திறங்கிய ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய 4 பேர், நேற்று (மே 20) குஜராத் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதான 4 பேரும் பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ்.(இஸ்லாமிக் சொசைட்டி)ய உடன் தொடர்புடையவர்கள் என்றும், அவர்கள் 4 பேரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்றும் பாகிஸ்தானில் அவர்களது அமைப்பினரிடமிருந்து அடுத்த கட்ட தகவலுக்காக காத்திருந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களது புகைப்படங்களை தீவிரவாத தடுப்பு பிரிவினர் வெளியிட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள தீவிரவாதிகளை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –14-01-2026
14 Jan 2026 -
இன்று பொங்கல் பண்டிகை: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகை எல்லைகளைக் கடந்து உலகளவில் இதயங்களை ஒன்றிணைக்கிறது என்று கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கடந்த 2 நாட்களில் மட்டும் திபெத், மியான்மரில் தொடர் நிலநடுக்கம்
14 Jan 2026நைபிடா, மியான்மர் நாட்டில் நேற்று முற்பகல் 11.56 மணியளவில் மித அளவிலான நில உணரப்பட்டது. 10 கி.மீ.
-
திருப்பாவை சொற்பொழிவு நிறைவு திருப்பதியில் ஆண்டாள் திருக்கல்யாணம்
14 Jan 2026திருப்பதி, கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கிய திருப்பாவை சொற்பொழிவு நிகழ்ச்சிகள் மார்கழி கடைசி நாளான நேற்றுடன் நிறைவு பெற்றன.;
-
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிகக் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் மீது அரசு நடவடிக்கை
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் பயணம் மேற்கொள்வதைப் பயன்படுத்தி அதிகக் கட்டணம் வசூலித்த 30 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவ
-
முதலீட்டை ஈர்க்க வெளிநாடு பயணம்: பஞ்சாப் முதல்வர் பகவந்துக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு
14 Jan 2026சண்டிகர், பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மானின் இஸ்ரேல் மற்றும் பிரிட்டன் பயணங்களுக்கு மத்திய அரசு அரசியல் அனுமதி மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Jan 2026- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் கல்யானைக்கு கரும்பளித்த லீலை.
- திருவள்ளூர் வீரராகவபெருமாள் விழா தொடக்கம்.
- ஶ்ரீரங்கம் பெருமாள் கோவிலில் திருப்பாவை சாற்று முறை.
-
இன்றைய நாள் எப்படி?
14 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
14 Jan 2026


