எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, 15-வது ஆண்டு விழாவை முன்னிட்டு மல்லை தமிழ் சங்கத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழுக்குத் தொண்டு செய்வோர் தாழ்வதில்லை என்று தெரிவித்துள்ளார்.
மல்லை தமிழ் சங்கத்தின் 15-வது ஆண்டு விழாவையொட்டி அதன் தலைவர் மல்லை சத்யாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுப்பி உள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது, தமிழ்ச் சமூகத்தின் சிறந்த ஆளுமைகளை ஆண்டுதோறும் தேர்வு செய்து பெருந்தமிழன், பெருந்தச்சன், மாமல்லன் ஆகிய விருதுகளை வழங்கி வரும் மல்லை தமிழ்ச் சங்கத்தின் பெருந்தொண்டை உளமாரப் பாராட்டுகிறேன்.இதுபோன்ற அமைப்புகளால்தான் தமிழின் வேரும், விழுதுகளும் வலுப்பெற்றும், வளம் பெற்றும் யாராலும் வீழ்த்த முடியாத வலிமையுடன் திகழ்கின்றன.
மொழிக்காக தங்கள் இன்னுயிரையே ஈந்த தீரமிகு இனம் நமது தமிழினம். அத்தகைய தீரமும், வீரமும் என்றென்றும் குன்றாமல் இருக்க மல்லைத் தமிழ்ச் சங்கம் போன்ற தமிழ் அமைப்புகளின் தொண்டறமும், தொடர் பணியும் என்றென்றும் தேவை.மல்லைத் தமிழ்ச் சங்கத்தின் 15-வது ஆண்டு தொடக்க விழாவில் பங்கேற்றுச் சிறப்பிக்கும் அன்பர்களுக்கும், விழாவில், "பெருந்தமிழன் விருது" பெறும் வி.ஐ.டி. நிகர்நிலைப் பல்கலைக்கழக வேந்தர் கோ.விசுவநாதன், "பெருந்தச்சன்" விருது பெறும் மரபுக் கட்டிடக் கலைஞர் பா.குமரேசன், மாமல்லன் விருது பெறும் கிராண்ட் மாஸ்டர் ஷிகான் கனகராஜ் ஆகிய மூன்று பேராளுமைகளுக்கும், இந்த அமைப்பையும், விழாவையும் சிறப்புற நடத்தும் மல்லை சத்யாவுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.தமிழுக்குத் தொண்டு செய்வோர் தாழ்வதில்லை.இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –16-01-2026
16 Jan 2026


